வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தொடர்ந்து உயிரைக்குடிக்கும் நீட் தேர்வால் தமிழகமே சோகம்....!!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, June 06, 2019

தொடர்ந்து உயிரைக்குடிக்கும் நீட் தேர்வால் தமிழகமே சோகம்....!!

நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் திருப்பூர் ரிதுஸ்ரீயை தொடர்ந்து மற்றொரு மாணவியும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

பட்டுகோட்டையை சேர்ந்த மாணவி வைஸ்யா என்பவர், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த இரு தற்கொலை நிகழ்வுகளும் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத திருப்பூரை சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ வேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ரிதுஸ்ரீ 12-ம் வகுப்பில் 490 மதிப்பெண்கள் எடுத்துள்ள நிலையில், நீட் தேர்வில் தோல்வியுற்றதால் இந்த துயர முடிவை எடுத்ததாக கூறப்பட்டது.



மேலும்  நீட் தேர்வினால்  அடுத்தடுத்து தற்கொலை  நடைபெறுவதால்    அதிர்ச்சியில் தமிழக மக்கள் உள்ளார்கள்.!


No comments:

Post a Comment