வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தூத்துக்குடியில் நடத்தையில் சந்தேகம் ;மனைவியை கொன்று கணவன் தற்கொலை
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, June 07, 2019

தூத்துக்குடியில் நடத்தையில் சந்தேகம் ;மனைவியை கொன்று கணவன் தற்கொலை

தூத்துக்குடி 2019 ஜூன் 4 ;தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி அடுத்த தஸ்நேவிஸ் நகரைச் சேர்ந்தவர் முத்தையா இவரது மகன் மதிகுமார் (45). இவரது மனைவி அமுதா (45). இவர்களுக்குத் திருமணமாகி 25 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்த தம்பதியருக்கு அஜித்குமார்(25), அஜிஸ்குமார்(25) என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இதில், அஜித்குமார் திருமணமாகி திருப்பூர் மாநகராட்சியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

தூத்துக்குடி அருகே உள்ள காற்றாலை நிறுவனத்தில் அஜிஸ் குமார் வேலை பார்த்து வருகிறார். திருமணமாகி 25 ஆண்டுகள் கடந்த பிறகு நடத்தையில் சந்தேகப்பட்டு மதிகுமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.நேற்று இரவு மகன் அஜிஸ்குமார் வேலைக்குச் சென்றுவிட்டார். அதன் பின்னர் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் மனைவியுடன் சண்டைபோட்டு ஆத்திரத்தில் மனைவி அமுதாவை கொடூரமாகத் தாக்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்ததால் பயத்தில் மதிகுமார் வீட்டிலே தூக்கில் தொங்கினார். 

இந்தநிலையில், மதிகுமாரின் வீட்டின் கதவு இன்று வெகு நேரமாகியும் திறக்கப்படாததால் சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது  தம்பதினர் இறந்து கிடந்தனர். இதில், அமுதா கழுத்தில் காயத்துடன் தரையில் பிணமாகக் கிடந்துள்ளார். மதிகுமார் சேலையில் தூக்கில் தொங்கினார். போலீசார் விசாரணையில் மனைவியை கொலை செய்துவிட்டு மதிகுமார் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.   போலீசார் தம்பதினர் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்தத் துயர சம்பவம் தொடர்பாக தாளமுத்துநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  மனைவியை கொன்றுவிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குடியாத்தத்தில்தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

No comments:

Post a Comment