வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மகளுடன் 3 மாதம் பழகி விட்டு.. ஏமாற்றி எஸ் ஆக பார்த்த இளைஞர்.. வெட்டி வீழ்த்தினார் தந்தை!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, July 17, 2019

மகளுடன் 3 மாதம் பழகி விட்டு.. ஏமாற்றி எஸ் ஆக பார்த்த இளைஞர்.. வெட்டி வீழ்த்தினார் தந்தை!

மகளுடன் 3 மாசம் பழகி, குடித்தனமும் நடத்திவிட்டு, கடைசியில் ஏமாற்ற முயன்ற இளைஞரை தாறுமாறாக அரிவாளால் வெட்டிவிட்டார் சக்திவேல்! அம்பத்தூரில் உள்ள சட்டக்கல்லூரியில் படித்து வந்தவர் சத்யபிரியா.

 இவருக்கு ஃபேஸ்புக்கில் லாரன்ஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. பின்னர் ரெண்டு பேரும்நெருக்கமாக பழகி வந்தாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து சத்யபிரியா தன்னை கல்யாணம் செய்து கொள்ளுமாறு கேட்டு உள்ளார். அதற்கு லாரன்ஸ் மறுத்ததாக தெரிகிறது. மகளை ஏமாற்றியதால் சத்யபிரியாவின் தந்தை சக்திவேல் ஆத்திரம் அடைந்தார்.

இதனால் லாரன்ஸை அரிவாளால் சரமாரியாக அரிவாளால் வெட்டி உள்ளார். இந்த சம்பவத்தை பார்த்து கொண்டு இருந்த சிலர் லாரன்ஸை மீட்டு கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் உடனடியாக அனுமதித்தனர்.


தகவல் அறிந்து வந்த போலீசார் சத்யபிரியாவின் அப்பா சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, "ஃபேஸ்புக் மூலமாக பழகி என் பொண்ணை ஏமாத்திட்டான், அதனால்தான் வெட்டினேன்" என்று போலீசாரிடம் சொல்லி உள்ளார்.

 தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. லாரன்சுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகளை ஏமாற்றிய காதலனை அரிவாளால் வெட்டிய சம்பவம் அம்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment