வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: நீ கடிச்சா எனக்கு கடிக்க தெரியாதா?.. பாம்புடன் மோதிய காலா.. நடந்தது என்ன தெரியுமா?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, July 17, 2019

நீ கடிச்சா எனக்கு கடிக்க தெரியாதா?.. பாம்புடன் மோதிய காலா.. நடந்தது என்ன தெரியுமா?

குஜராத் மாநிலத்தில் தன்னை கடித்த பாம்பை முதியவர் ஒருவர் மீண்டும் கடித்ததால் முதியவர் இறந்தார். அதே போல் பாம்பும் இறந்துவிட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 குஜராத் மாநிலம் மகிசாகர் மாவட்டத்தில் உள்ள அஜன்வா கிராமத்தைச் சேர்ந்தவர் பார்வத் காலா பாரியா (60). இவர் நேற்று சோள கதிர்களை ஏற்றும் லாரியின் அருகே நின்றுக் கொண்டிருந்தார். 
அப்போது அங்கிருந்த பாம்பு ஒன்று இவரது கை மற்றும் முகத்தில் கடித்தது. இதனால் காலாவுக்கு பாம்பு மேல் ஆத்திரம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பாம்பை அலேக்காக பிடித்த காலா அந்த பாம்பை திருப்பி கடித்துள்ளார்.


மருத்துவமனை 
 கடும் ஆத்திரத்தில் கடித்ததால் அந்த பாம்பு இறந்துவிட்டது. காலாவை கடித்த பாம்பு அதிக விஷத்தன்மை வாய்ந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் காலாவை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


பலி 
 அப்போது அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். கடைசியில் பாம்பினுடைய விஷம் கடுமையாக ஏறியதால் அவரை குணப்படுத்த முடியவில்லை. இதையடுத்து அவர் வேறொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி காலா உயிரிழந்தார்.

சிகிச்சை 
 இதையடுத்து அஜன்வா போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கையிலும், முகத்திலும் பாம்பு கடித்தபோதே அவர் மருத்துவமனைக்கு வந்திருந்தால் ஏதேனும் சிகிச்சை அளித்து காப்பாற்ற முயற்சித்திருக்கலாம்.


உதாரணம் 
ஆனால் பாம்பையும் அவர் கடித்ததால் அதிலும் கோபத்தில் கடித்ததால் விஷம் எளிதில் ரத்தத்துடன் கலந்து விட்டது. மிருகங்களிடம் கோபத்தை காட்டினால் என்ன நடக்கும் என்பதற்கு காலாதான் உதாரணம்.


1 comment:

  1. A very delightful article that you have shared here.Gujarat Latest News Today Your blog is a valuable and engaging article for us, and also I will share it with my companions who need this info. Thankful to you for sharing an article like this.

    ReplyDelete