வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஊத்துக்காடு அருகே அரசு பஸ் மோதி இருவர் பலி | Oothukadu Bike Bus Accident
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, December 30, 2019

ஊத்துக்காடு அருகே அரசு பஸ் மோதி இருவர் பலி | Oothukadu Bike Bus Accident

அரசு பஸ் மீது, இருசக்கர வாகனம் மோதியதில், இருவர் இறந்தனர்.வாலாஜாபாதில் இருந்து, படப்பை நோக்கி, நேற்று, இரவு 8:00 மணி அளவில், ஹோண்டா ஷைன் இருசக்கர வாகனம் சென்று கொண்டிருந்தது.



அதே வழித்தடத்தில், அரசு பஸ் தடம் எண்: 79, தாம்பரம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. ஊத்துக்காடு கூட்டு சாலை அருகே சென்றபோது, இந்த இருசக்கர வாகனம், அரசு பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.


இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்றவர், செஞ்சி அடுத்த, கரடிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி, 39. என, தெரிய வந்துள்ளது. அவருடன் சென்ற உறவினர் பெண் ஒருவரும் இறந்தார்.


No comments:

Post a Comment