For Advertisement
விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
நீயா 2 படப்பிடிப்பில் பங்கேற்க வந்த நடிகை கேத்ரின் தெரசாவை ஷாட் ரெடி என்று இயக்குனர் அழைக்க, வேகமாக கேமரா நோக்கி நடந்த கேத்ரின் திடீரென்று ஐய்யோ பாம்பு பாம்பு என்று அலறியபடி ஓட்டம்பிடித்தார்.
தரையில் 22 அடியில் ஒரு ராஜநாகம் இருந்தது. அலறல் சத்தம் கேட்டு வந்த இயக்குனர் அந்த பாம்பை அநாயிசமாக கையில் தூக்கிப்பிடித்து, ‘பயப்படாதீங்க... இது ஒரிஜனில் இல்ல.
டம்பி பாம்பு’ என்றார். அதன்பிறகே நிம்மதி அடைந்து நெருக்கமாக வந்து பாம்பை பார்த்தார் கேத்ரின். அப்போதும் அதை கையில் தொட மறுத்துவிட்டார்.
படம்பற்றி இயக்குனர் கூறும்போது,’ஜெய், வரலட்சுமி, ராய் லட்சுமி, நிதிஷ் வீரா நடிக்கின்றனர். ஏ.ஸ்ரீதர் தயாரிப்பு. சபீர் இசை. ராஜவேல் மோகன் ஒளிப்பதிவு. இது 1979ம் ஆண்டு ரிலீஸ் ஆன நீயா படத்தின் தொடர்ச்சி கிடையாது. இதில் ராஜநாகம் நடிக்கிறது. பாங்காக்கில் கோப்ரா வில்லேஜ் என்ற கிராமத்தில் வீட்டுக்கு வீடு ராஜநாகம் வளர்க்கிறார்கள்.
அங்கு சென்று ராஜநாகத்தை புகைப்படம் எடுத்து அதை வைத்து டம்மி தயாரித்ததுடன், படம் முழுக்க கிராபிக்ஸில் பாம்பு காட்சிகள் இடம்பெறுகிறது’ என்றார்’ இயக்குனர் சுரேஷ்.
பஞ்சாப் மாநிலம் பதிந்தா மாவட்டம் தல்லன்டிசபோ என்ற இடத்தில் அகல் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு கல்லூரி விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் விடுதியில் உள்ள கழிவறையில் சானட்ரி நாப்கின்கள் ஆங்காங்கு கிடந்துள்ளது. இதனை கண்ட விடுதி பெண் வார்டன்கள் இருவர் கோபமடைந்து இதுகுறித்து மாணவிகளிடம் கேட்டுள்ளனர்.
ஆனால் மாணவிகள் பயந்துகொண்டு யாரும் பதிலளிக்காமல் அமைதியாக இருந்துள்ளனர். இதனை தொடரண்டு நாப்கின்களை பயன்படுத்தி தூக்கி வீசியது யார் என கண்டுபிடிப்பதற்காக மாணவிகளின் ஆடைகளை களைந்து கண்டறிய முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் 2 பெண் பாதுகாவலர்கள் கொண்டு 12 மாணவிகளின் ஆடைகளை களைந்து அவர்களை சோதனை செய்தனர்.
இதனால் மாணவிகள் கூனி குறுகி பெரும் மனஉளைச்சலுக்கு ஆளானர். பின்னர் இதுகுறித்து அனைத்து மாணவிகளும் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.ஆனால் அவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். மேலும் கொடுத்த புகார்கள் பொருட்படுத்தாமல் பெண் வார்டன்கள், பெண் பாதுகாவலர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க்காமலும் இருந்துள்ளனர்.
இதையடுத்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ- மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவர்களை சமாதானப்படுத்திய பல்கலைக்கழக டீன் ஜோஹல் கூறும்போது, மாணவிகளின் ஆடையை களைந்து அநாகரீகமாக நடந்துகொண்ட 2 பெண் வார்டன்கள் மற்றும் 2 பெண் பாதுகாவலர்களை நீக்கம் செய்துள்ளனர்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Featured Post
பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...