வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: செங்கை எஸ்.பி. தலைமையில் மதுராந்தகத்தில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு கூட்டம் | Chengalpattu SP Meeting | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, July 08, 2020

செங்கை எஸ்.பி. தலைமையில் மதுராந்தகத்தில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு கூட்டம் | Chengalpattu SP Meeting | Vil Ambu News


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெ.கண்ணன் தலைமையில் காவலர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், மினி வேன் உள்ளிட்ட சில தொழிலாளர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
மதுராந்தகம் சி.எஸ்.ஐ நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் மதுராந்தகம் காவல் துணை கண்காணிப்பாளர் ஆர்.மகேந்திரன் முன்னிலை வகித்தார்.
தற்போது மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தின் பல்வேறு பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும், வியாபாரிகள், வாகன ஓட்டிகளும் கட்டாயம் இந்த செயல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் எஸ்.பி. கண்ணன் அறிவுறுத்தினார்.
மேலும், பொதுமக்கள் காவல் துறையினர் எப்போதும் நண்பர்களாக இருக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் புகார் அளிக்க வரும் தருணத்தில் எக்காரணத்தை கொண்டும் அவர்களிடம் அசாதாரணமாக நடந்து கொள்ள கூடாது எனவும் சுமூகமாக நடந்து கொள்ளவேண்டும் எனவும் காவலர்களுக்கு அறிவுறுத்தினார். காவல் துறையில் முறையாக புகார்கள் ஏற்றுக் கொள்ளப்படாத தருணத்தில் என்னை நேரடியாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்தார்.
ஆட்டோ ஓட்டுநர்கள், லோடு வாகன ஓட்டுநர்கள், நடைபாதை வியாபாரிகள், பாஸ்ட் புட் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட சுமார் 200 நபர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் மதுராந்தகம் காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன், அச்சிறுபாக்கம் காவல் ஆய்வாளர் டி.எஸ்.சரவணன், சூணாம்பேடு காவல் ஆய்வாளர் தரனேஸ்வரி, மேல்மருவத்தூர் காவல் ஆய்வாளர் தமிழ்வாணன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஆனந்த்ராஜ் மற்றும் அனைத்து காவல் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment