வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தீபாவளி அன்று பட்டாசு எப்போது வெடிக்கலாம்? தமிழக அரசு அறிவிப்பு
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, November 02, 2018

தீபாவளி அன்று பட்டாசு எப்போது வெடிக்கலாம்? தமிழக அரசு அறிவிப்பு



உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 


 
நாடு முழுவதும் பட்டாசுகளுக்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் தீபாவளியின் போது இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை குறிப்பிட்ட இடங்களில் மட்டும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. 
(தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!



இத்தீர்ப்பு தொடர்பாக தமிழக அரசு சார்பில் விளக்கம் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “பட்டாசு வெடிக்க விதித்த கட்டுப்ப்பாட்டால் பட்டாசு வெடிக்கும் உரிமையை தமிழக மக்கள் இழந்துள்ளனர். எனவே, தீபாவளியின்போது, அதிகாலை 4.30 மணி முதல் காலை 6.30 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்கி அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.


இதையடுத்து, தமிழகம், புதுச்சேரி மற்றும் தென் மாநிலங்களில் தீபாவளி நாளில் 2 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம். பட்டாசு வெடிக்கப்படும் நேரத்தை தென் மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதன்படி,  தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, காலை 6 மணி முதல் 7 மணி வரையும்,  இரவில் 7 மணி முதல் 8 மணி வரையும் வெடிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment