வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கண்களை தூய்மைபடுத்தும் த்ராடகா ஆசனம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, November 02, 2018

கண்களை தூய்மைபடுத்தும் த்ராடகா ஆசனம்



இந்த ஆசனம் தொடர்ந்து செய்து வந்தால் கண்கள் சுத்தமாகி பிரகாசமடையும். பார்வை தெளிவாகும். உறக்கமின்மை, மன அழுத்தம், சோர்வு, படபடப்பு நீங்கும்.


 பெயர் விளக்கம்: கண்களை தூய்மைபடுத்தும் பயிற்சியே த்ராடகா.

செய்முறை: ஒரு சிறிய முக்காலி அல்லது நாற்காலியின் மேல் எரியும் குத்து விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஒன்றை வைக்கவும். அங்கிருந்து ஒரு மீட்டருக்கு பின்னால் அனுகூலமான தியான ஆசனத்தில் உட்காரவும். தீபத்தின் சுடர் கண்களுக்கு நேராக இருக்கட்டும். கைகளை நீட்டி முழங்கால்களின் மேல் கைவிரல்களால் சின் முத்திரை செய்யவும். கண்களை மூடவும். உடல் முழுவதும் தளர்வாக இருக்கட்டும்.

(தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!

மெதுவாக கண்களை திறந்து இமைக்காமல் தீபத்தின் சுடரை உற்றுப் பார்க்கவும்.  பயிற்சியின் போது தீபத்தின் சுடர் அசையாமல் ஒரே சீராக எரிய வேண்டும். முதலில் 1 முதல் 2 நிமிடம் உற்றுப் பார்க்க பழகவும் தொடர்ந்த பயிற்சியில் நேரத்தை அதிகப்படுத்தி 10 முதல் 15 நிமிடம் வரை செய்யவும்.


பயிற்சியின் இடை, இடையில் கண்களை மூடி புறத்தில் பார்த்த அக்னி சுடர், புருவ நடுவில் பிரகாசிப்பது போல் கற்பனையாக நினைத்துப் பார்க்கவும். பயிற்சியின் முடிவில் கண்களை மூடவும். உள்ளங்களையும் நன்றாக தேய்த்து மூடிய கண்களின் மேல் இரு உள்ளங்களையும் சில நிமிடம் வைத்திருக்கவும். சில நிமிடங்களுக்கு பிறகு முகத்திற்கு முன்பாக இருக்கும் கைகளை எடுத்து வலது உள்ளங்கையை கண்ணால் பார்க்கவும்.



பயன்கள்:
கண்கள் சுத்தமாகி பிரகாசமடையும். பார்வை தெளிவாகும். உறக்கமின்மை, மன அழுத்தம், சோர்வு, படபடப்பு நீங்கும். நினைவாற்றல் மிகும். மன ஒருநிலைப்பாடு அதிகரிக்கும். மனதின் ஆற்றல் அதிகரிக்கும்.
 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment