வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மாரத்தான் போட்டியில் காஜல் அகர்வால்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, December 30, 2018

மாரத்தான் போட்டியில் காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால், அடுத்த மாதம் நடைபெற இருக்கும் மாரத்தான் போட்டியில் கலந்துக் கொள்ள இருக்கிறார்.






தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்குபவர் காஜல் அகர்வால். இவரது நடிப்பில் பாரீஸ் பாரீஸ் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்திலும் இணைந்துள்ளார். அந்தப் படத்துக்காக தற்காப்பு கலை பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்தார்.
காஜல் அகர்வால் நடிப்புடன் மாரத்தான் போன்ற போட்டிகளில் ஆர்வம்காட்டி வருகிறார். கடந்த ஆண்டு ‘அமைதியை யோசி’ என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதன் புகைப்படங்களையும் பகிர்ந்து இருந்தார்.

டாடா கன்சல்டன்ஸி நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் மும்பையில் பல்வேறு தலைப்புகளின் கீழ் மாரத்தான் போட்டியை நடத்தி வருகிறது. இதில் பாலிவுட், கோலிவுட் பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொள்கின்றனர். 16-வது முறையாக வரும் ஜனவரி 20-ந்தேதி மும்பையில் மாரத்தான் போட்டியை நடத்த உள்ளது.

இந்த மாரத்தானில் அனைவரும் கலந்துகொள்ள காஜல் அகர்வால் அழைப்பு விடுத்துள்ளார். “இந்த முறை நான் பழங்குடியின விளையாட்டுத்துறை முன்னேற்றத்துக்காக 2019 டாடா மும்பை மாரத்தானில் கலந்துகொள்கிறேன். அரக்குவில் உள்ள பழங்குடியினருக்கு அவர்களது விளையாட்டுத்துறை உள்கட்டமைப்பு மேம்படவும், திறமை வாய்ந்த பழங்குடியின விளையாட்டு ஆளுமைகளுக்குச் சக்தி வாய்ந்த உணவு கிடைத்திடவும் வேண்டும்” என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment