வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பெற்றோர் கடனை திருப்பி செலுத்தாததால் ஆத்திரம்.. 4 வயது குழந்தை கொலை
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, March 18, 2019

பெற்றோர் கடனை திருப்பி செலுத்தாததால் ஆத்திரம்.. 4 வயது குழந்தை கொலை

கன்னியாகுமரியில் பெற்றோர் கடனை திருப்பிச் செலுத்தாததால் ஆத்திரம் அடைந்த இளைஞர் அவர்களது 4 வயது குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


கன்னியாகுமரி ஆரோக்கியபுரத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய பின்ராஜ். இவரது மனைவி சகாய சிந்துஜா. இவரது மகன் ரெய்னா (4). அதே பகுதியை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவர் வட்டிக்கு விடும் தொழில் நடத்தி வருகிறார்.
(தொடர்ச்சி கீழே...)

 இதையும் படிக்கலாமே !!!


இந்நிலையில் சிந்துஜா, அந்தோணிச்சாமியிடம் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இந்நிலையில் அந்தக் கடனை திருப்பிச் செலுத்துவதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.


இதனால் ஆத்திரமடைந்த அந்தோணிசாமி, சிந்துஜாவின் மகன் ரெய்னாவை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. கடத்தி சென்ற 4 வயது சிறுவன் ரெய்னாவை தோட்டத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்ததாகவும் தெரிகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்தாமரை குளம் போலீசார், சிறுவனின் உடலை மீட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனை கொலை செய்துவிட்டு தப்பியோடிய அந்தோணிசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.

No comments:

Post a Comment