வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மிரட்டி மிரட்டியே.. 12 முதல் 16 வயசு சிறுமிகளை சீரழித்த ஆதிசிவன்..
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, August 12, 2019

மிரட்டி மிரட்டியே.. 12 முதல் 16 வயசு சிறுமிகளை சீரழித்த ஆதிசிவன்..

12 வயசு குழந்தை உட்பட 4 சிறுமிகளுக்கு தனியார் காப்பகத்தில் பாலியல் தொல்லை தந்த டிரஸ்ட் உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட காப்பகத்துக்கும் அதிரடியாக சீல் வைக்கப்பட்டது!




மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியில் மாசா அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் 25-க்கும் மேற்பட்ட சிறுவர் -சிறுமிகள் தங்கி இருக்கிறார்கள். 


 கருமாத்தூரை சேர்ந்த ஞானபிரகாசம், ஆதிசிவன் ஆகியோர்தான் இந்த காப்பகத்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆதிசிவனுக்கு வயசு 41 ஆகிறது.


காப்பகங்கள் இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் சண்முகம், பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளையும் மதுரை முத்துப்பட்டியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தார். அங்குள்ள சிறுவர் சிறுமிகள் தொடர்ந்து தங்கினால் ஆபத்து என்று உணர்ந்த அவர், அவர்கள் அனைவரையும் வேறு காப்பகங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறார்.

திடீர் ஆய்வு

இந்த காப்பகத்தில் உள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தரப்படுவதாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில், மாவட்ட குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் சண்முகம், சம்பந்தப்பட்ட காப்பகத்திற்குள் நுழைந்து அதிரடி ஆய்வு நடத்தினார். அங்கு தங்கி இருக்கும் குழந்தைகளை அழைத்து நேரடியாகவே விசாரணை நடத்தினார்


கதறி அழுதனர்

அப்போது சிறுமிகள் கதறி கதறி அழ ஆரம்பித்தனர். இதில், 4 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதற்கெல்லாம் காரணம், ஆதிசிவன்தான் என்றும், அவர்தான் ஆபீசில் வைத்து தங்களை மிரட்டி மிரட்டி பலாத்காரம் செய்ததாகவும் சிறுமிகள் கண்ணீருடன் கூறினார்கள். மேலும் இதை வெளியே சொன்னால் கொலை செய்வதாக ஆதிசிவன் மிரட்டியதாகவும் சிறுமிகள் தெரிவித்தனர்.


காப்பகங்கள் 
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் சண்முகம், பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளையும் மதுரை முத்துப்பட்டியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தார். அங்குள்ள சிறுவர் சிறுமிகள் தொடர்ந்து தங்கினால் ஆபத்து என்று உணர்ந்த அவர், அவர்கள் அனைவரையும் வேறு காப்பகங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறார்.


பரபரப்பு 

மேலும் 4 சிறுமிகளுக்கு இழைத்த அநீதி குறித்து, சண்முகம் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் எடுக்கவும், போலீசார் விசாரணை நடத்தி ஆதிசிவனை போக்சோவில் அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட காப்பகத்திற்கும் சீல் வைக்கப்பட்டதுடன், காப்பகத்தின் இன்னொரு நிர்வாகியான ஞானபிரகாசிடம் விசாரணை நடந்து வருகிறது. காப்பகத்தில் சிறுமிகள் நாசம் செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


No comments:

Post a Comment