வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இரவு 9 மணிக்கு மேல் தாம்பரத்திற்குள் பேருந்து வராததால் பொதுமக்கள் அவதி | பொதுமேலாளர் தலையிட்டு பொறுப்பேற்பாரா...? | Padappai Bus Problem Latest News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, September 18, 2019

இரவு 9 மணிக்கு மேல் தாம்பரத்திற்குள் பேருந்து வராததால் பொதுமக்கள் அவதி | பொதுமேலாளர் தலையிட்டு பொறுப்பேற்பாரா...? | Padappai Bus Problem Latest News

அரசு பேருந்து என்றாலே அவல நிலைதான் என்ற கூக்குரல் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருப்பது அனைவரும் அறிந்ததே.....!
தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சமீப காலமாக கலர்கலராக புதுப்புதுப் பேருந்துகளை கண்கவர் பொலிவுடன் போக்குவரத்துக் கழகத்துடன் இணைத்து வருகிறார். முதலமைச்சரின் இதுபோன்ற செயல்கள் மூலம் தமிழக மக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான பேருந்து வசதிகள் புதிய தொழில்நுட்பத்துடன் கிடைத்தது என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.




ஆனால் இதே போக்குவரத்துக் கழகத்தில்தான் பொதுமக்கள் அவதிக்குள்ளாக்கும் பல்வேறு செயல்களும் நடைபெற்று வருகிறது. பல்வேறு வழித்தடங்களில் பேருந்துகள் முறையான வழியிலோ அல்லது குறித்த நேரத்திலோ இயக்கப்படுவதில்லை.


குறிப்பாக தற்போது தாம்பரம்   முதல் காஞ்சிபுரம் மற்றும் வேலூர் வரை படப்பை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் இரவு 9 மணிக்கு மேல் தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வழியாக செல்வதில்லை. 
மாறாக, வள்ளுவர் குருகுலம் பள்ளி வழியாக திருப்பிவிடப்பட்டு சென்றுவிடுகின்றன.

எனவே, படப்பை மற்றும் அதைத் தாண்டி செல்லும் பொதுமக்கள் முதல் ஐ.டி ஊழியர்கள் வரை அனைவரும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகுகின்றனர்.  பகல் முழுவதும் உழைத்துவிடு பணி முடிந்து இரவு வீடு திரும்பும் சாதாரண பொதுமக்கள் இரவு ஓய்வு எடுக்க குறித்த நேரத்திற்கு வீடு செல்ல இயலவில்லை.  
 
போக்குவரத்துக்கழக பணிமனையைச் சார்ந்த பொதுமேலாளர் அவர்கள் தங்கள் கீழ் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை உரிய முறையில் கண்கானிக்கவில்லையா...? அல்லது தனியார் வாகனங்கள் வருவாய் ஈட்டுவதற்காக பொது மேலாளர் துணை போகிறாரா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. மேலும் பொதுமக்கள் காஞ்சிபுரம் பணிமனை பொது மேலாளர் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் உரிய நடவடிக்கை  மேற்கொள்ளவில்லை. 
 
எனவே, மேல் அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் இதுபோன்ற செயல்களின் மூலம் அரசாங்கத்திற்கு அவப்பெயர் ஏற்படுகிறது. தமிழக அரசு இதுபோன்ற ஓட்டுநர், நடத்துனர் மற்றும் சம்மந்தப்பட்ட பணிமனை பொது மேலாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமா...? 
 

No comments:

Post a Comment