வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கருங்குழி பேரூராட்சியில் நுாலகம் வைத்து அசத்தல் | New Library in Karunguzhi Town Panchayat
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, September 24, 2019

கருங்குழி பேரூராட்சியில் நுாலகம் வைத்து அசத்தல் | New Library in Karunguzhi Town Panchayat

கருங்குழி பேரூராட்சி அலுவலகத்தில், சிறிய அளவிலான நுாலகத்தை அமைத்து, அதில் பல வகையான புத்தகங்கள் வைத்திருப்பது பயன் அளிப்பதாக உள்ளது என, ஊழியர்கள் கூறுகின்றனர்.மதுராந்தகம் ஒன்றியத்திறகு உட்பட்டது, கருங்குழி பேரூராட்சி.



இப்பேரூராட்சி அலுவலகத்தில், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பேரூராட்சி அலுவலக அனைத்து பணியாளர்களுக்குமான சிறிய அளவிலான நுாலகம் ஒன்று, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த நுாலகத்தில், திடக்கிழவு மேலாண்மை உள்ளிட்ட, அரசு திட்டங்கள் சார்ந்த பல புத்தகங்களும், அரசியல் அமைப்பு மற்றும் மூலிகை செடி வகைகள் புத்தகங்கள் உள்ளன.மேலும், மண் வகைகளின் தன்மைகள், பிளாஸ்டிக் விளைவுகள், பூமி வெப்பமாதல் உள்ளிட்ட, விளக்கங்கள் தரும், பல வகையான புத்தகங்களும் உள்ளன.


அலுவலகத்தில், மதிய உணவு இடைவெளி உள்ளிட்ட நேரங்களில், பேரூராட்சி அலுவலக ஊழியர்கள், இப்புத்தகங்களை படிக்கின்றனர்.இந்த நுாலகத்தில் உள்ள புத்தகங்கள் மூலம், பல்வேறு தகவல்களை அறிந்து, விழிப்புணர்வுபெற வசதியாக உள்ளதாக அலுவலக பணியாளர்கள் பெருமையோடு கூறுகின்றனர்.

No comments:

Post a Comment