வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஆபாச பேச்சு நடிகை நிலானிக்கு மிரட்டல் விடுத்தவர் கைது | Man arrested for threatening Actress Nilani
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, October 06, 2019

ஆபாச பேச்சு நடிகை நிலானிக்கு மிரட்டல் விடுத்தவர் கைது | Man arrested for threatening Actress Nilani

சின்னத்திரை நடிகை நிலானியை செல்போனில் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். மதுரவாயல் அடுத்த அஷ்டலட்சுமி நகர் இரண்டாவது மெயின் ரோட்டில் வாடகை வீட்டில் வசிப்பவர் சின்னத்திரை நடிகை நிலானி.



இவர், கணவரை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எதிராக நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை போலீஸ் உடையில் ஆடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். பின்பு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


இந்நிலையில் இவரது காதலர் காந்தி லலித்குமார், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தொல்லை கொடுப்பதாக புகார் தெரிவித்து இருந்தார்.இதற்கிடையே  காதலருடன் ஏற்பட்ட தகராறில்   பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு காந்தி லலித்குமார் தற்கொலை செய்து கொண்டார். காதலரின் சாவுக்கு நிலானி காரணம் என புகார் செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். அப்போது அவரது நண்பர் காப்பாற்றினார்.


கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற போது அவருக்கு உதவிய  அவரது நண்பர் காட்பாடியை சேர்ந்த மஞ்சுநாதன் செல்போனில் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்ததாக நிலானி புகார் கொடுத்தார். அதன்படி, போரூர் போலீசார் மஞ்சு நாதனை கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment