வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: டி.வி பார்ப்பதை கண்டித்த தாயால் தற்கொலை செய்துகொண்ட மகள்....! நடந்தது என்ன..? Daughter suside due to her mother order
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, December 29, 2019

டி.வி பார்ப்பதை கண்டித்த தாயால் தற்கொலை செய்துகொண்ட மகள்....! நடந்தது என்ன..? Daughter suside due to her mother order

டிவி பார்ப்பதை தாய் கண்டித்ததால், மனமுடைந்த மகள் தற்கொலை செய்து கொண்டார்.புவனகிரி அருகே ஆதிவராகநத்தம் ஜீவானந்தம் தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 32.



அதேப்பகுதியை சேர்ந்த பாபு மகள் அப்சல்யா, 25; என்பவரை 6 ஆண்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். மூன்று குழந்தைகள் உள்ளனர்.அப்சல்யா தாய் வீட்டிற்கு சென்று 'டிவி' பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். நேற்று வழக்கம் போல் 11.30 மணிக்கு தாய் வீட்டில் 'டிவி' பார்த்துள்ளார்.


இதை அவருடைய தாய் பன்னீர்துளி, கணவன் மற்றும் குழந்தைகளுக்கு சமையல் செய்து உணவளிக்காமல் 'டிவி' பார்ப்பதை கண்டித்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த அவர், கணவர் வீட்டிற்கு சென்றவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, சப் இன்ஸ்பெக்டர் புருேஷாத்தமன் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். சப் கலெக்டர் விசாரணையும் நடக்கிறது.

No comments:

Post a Comment