பள்ளி மாணவர்களுக்கு
தரமான கல்வியை வழங்குவதற்காக அரசு பள்ளிகளும் தற்போது அதிக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
மேலும், தனியார் பள்ளிகளிலும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் 25% இட ஒதுக்கீடு
செய்து ஆண்டுதோறும் இலவச கல்வியை வழங்கி வருகிறது.
இதனடிப்படையில்
2020-21-ம் ஆண்டிற்கான கட்டாய கல்வி சட்டம் (RTE – Rights to Education) திட்டத்தில்
தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்கான விண்ணப்பம் ஆன்லைன் முறையில் வருகின்ற 27.08.2020
காலை 10.00 மணி முதல் துவங்க உள்ளது. இதற்கான இணையதளம் rte.tnschools.gov.in. இதற்கு
மாணவரின் புகைப்படம், ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ், சாதி, வருமானம், இருப்பிடச்
சான்றிதழ்கள், பெற்றோரின் ஆதார் அட்டை போன்றவை அவசியம்.
மாணவர்களின் வீட்டு
முகவரியிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள தனியார் பள்ளிகளிலோ அல்லது அருகில் உள்ள தனியார்
பள்ளிகளிலோ ஜியோடேகிங் முறையில் சேர்க்கை விண்ணப்பிக்கப்படும்.
தங்கள் வீட்டு
விலாசத்திலிருந்து வேறு மாவட்ட பள்ளிகளில் சேர்க்கை செய்ய இயலாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை விண்ணப்பத்திற்கான கடைசி தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.
No comments:
Post a Comment