வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: [சோகம்] திடீரென வெடித்த இ-ஸ்கூட்டர்.! முதியவர் உடல் கருகி பலி.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, December 19, 2021

[சோகம்] திடீரென வெடித்த இ-ஸ்கூட்டர்.! முதியவர் உடல் கருகி பலி.!

ஹரியானா மாநிலம் குருகிரமில் உள்ள சிறிய வீட்டில் முதியவர் சுரேஷ் சாஹூ, அவரது மனைவி மற்றும் 3 மகன்கள் இரவில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது வீட்டிற்குள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இ-ஸ்கூட்டர் திடீரென்று பெரும் சத்தத்துடன் வெடித்துள்ளது. 


பின் அங்கு கிடந்த துணிகளில் தீப்பற்றி வீடு முழுவதும் பரவியது. இந்த விபத்தில் சுரேஷ் சாஹூ உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி மற்றும் மகன்களும் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து விசாரித்த காவல்துறையினர், முதியவர் வாகனத்தை வாங்கி ஒரு வருடம் கூட ஆகியிருக்கவில்லை. அவர் வீட்டிற்குள் ஸ்கூட்டரை சார்ஜ் செய்துக்கொண்டிருந்தபோது பேட்டரி வெடித்து தீ பரவியிருக்க வேண்டும். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என விளக்கம் அளித்துள்ளனர்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment