காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடையின் ஊழியர்கள் பணி முடிந்தவுடன் கடையை மூடி விட்டு சென்றுள்ளனர். பின்னர் மறுநாள் காலையில் வந்து பார்க்கும் போது கடையின் கிரில் கேட் உடைக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது லாக்கர் உடைக்கப்பட்டு இருந்தது.
மேலும் கண்காணிப்பு கேமராக்கள் அனைத்து வயர்களும் துண்டிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக விற்பனை செய்த பணத்தை மறைவாக வைத்திருந்ததால் தப்பியது. இச்சம்பவம் குறித்து ஊழியர்கள் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
சமீபத்திய செய்திகள்
No comments:
Post a Comment