தர்மபுரி மாவட்டம், தொட்டபடகாண்ட அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்(32). இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நேரு நகரை சேர்ந்த லட்சுமி(22) என்ற பெண்ணிற்கும், திருமணம் நிச்சயக்கபட்டிருந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் வஜ்ஜிரபள்ளத்திலுள்ள ஈஸ்வரன் கோவிலில் இன்று காலை இருவருக்கும் திருமணம் நடைபெறவிருந்தது. இந்நிலையில் திருமண நாளான இன்று மணமகன் கோவிலுக்கு வராமல் குடித்து விட்டு வீட்டிலேயே மயங்கி கிடந்துள்ளார்.
இதை பார்த்த மணமகள் லட்சுமி குடிகார மணமகனும், வேண்டாம், திருமணமும் வேண்டாம் என மாலையை கழற்றி வீசிவிட்டார். திருமணத்திற்குண்டான செலவுகளை செட்டில் செய்ய கோரி பெண்ணின் தாய்மாமன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
போதை தெளிந்த மணமகன், இனிமேல் குடிக்க மாட்டேன், பெண்ணை திருமணம் செய்துகொள்ளுகிறேன் என காவல் நிலையத்திலேயே ம கெஞ்சி பார்த்தும் மணமகள் பிடிவாதமாக மறுத்துவிட்டார்.
No comments:
Post a Comment