வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: டீச்சர் கண்ணத்தில் பளார் என வைத்து தள்ளிவிட்ட அரசு பள்ளி மாணவர் | ஓசூர் அருகே பரபரப்பு | Student Beating Teacher in Govt School near Hosur | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, December 03, 2021

டீச்சர் கண்ணத்தில் பளார் என வைத்து தள்ளிவிட்ட அரசு பள்ளி மாணவர் | ஓசூர் அருகே பரபரப்பு | Student Beating Teacher in Govt School near Hosur | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


ஓசூர் அருகே அரசுப் பள்ளியின் மாணவர் ஒருவர், ஆசிரியை தாக்கி கீழே தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள மாசிநாயகனப்பள்ளி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 11ஆம் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ஒருவர், ஒழுங்கீனமாக இருந்த மாணவர் ஒருவரை அழைத்து கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த மாணவர் ஆசிரியை கன்னத்தில் அறைந்து அவரை கீழே தள்ளி விட்டுள்ளார்.

இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்பு சம்பந்தப்பட்ட மாணவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் ஆகியவை வலியுறுத்தி உள்ளன.

No comments:

Post a Comment