ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டம் மடிப்பாடு கிராமத்தில் 5 மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருவர் கிருஷ்ணா ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். இதில், 5 மாணவர்கள் மற்றும் ஆசிரியர் என மொத்தம் 6 பேர் தவறுதலாக ஆழ்ந்த குழிக்குள் விழுந்தனர்.
அவர்கள் அனைவருக்கும் நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது. இதில், அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து டி.எஸ்.பி. விஜய பாஸ்கர் ரெட்டி தலைமையிலான போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment