வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஆசை வார்த்தை கூறி சிறுமியுடன் உல்லாசம் - கணவர் மீது மனைவி அதிரடி புகார் | Wife Complainting on her Husband | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, December 13, 2021

ஆசை வார்த்தை கூறி சிறுமியுடன் உல்லாசம் - கணவர் மீது மனைவி அதிரடி புகார் | Wife Complainting on her Husband | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

பல பெண்களை ஏமாற்றியதாக கணவர் மீது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.


பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, கிழுமத்தூர் கிராமத்தை சேர்ந்த முருகனின் மகள் பூவழகி (வயது 22). இவர் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், எனக்கும், குன்னம் தாலுகா, பென்னக்கோணம் கிராமத்தை சேர்ந்த பரமசிவத்தின் மகன் பால்ராசுவுக்கும் கடந்த மார்ச் மாதம் 15-ந்தேதி திருமணம் நடந்தது. திருமணமான சில மாதங்களில் பால்ராசு பல பெண்களுடன் பழகி திருமணம் செய்து குடும்பம் நடத்தியதாக தெரியவந்தது. மேலும் கூடுதல் வரதட்சணை கேட்டு என்னை எனது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி விட்டார்.


இந்நிலையில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இருந்து போலீசார் வந்து என்னிடம் எனது கணவர் எங்கே என்று விசாரித்தனர். எதற்கு என்று கேட்டதற்கு போலீசார் என்னுடைய கணவர் ஒரு சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்ததாகவும், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருவதாகவும் கூறினர். எனவே என்னையும், பல பெண்களையும் ஏமாற்றிய பால்ராசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள பால்ராசுவை வலைவீசி தேடி வருகின்றனர்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment