வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Court News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Court News. Show all posts
Showing posts with label Court News. Show all posts

Friday, July 21, 2023

மீண்டும் சூடுபிடிக்கும் டெண்டர் முறைகேடு வழக்கு? சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி கேவியட் மனு தாக்கல்!

நெடுஞ்சாலைத்துறை ரூ.4800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.


முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் ரூ. 4,800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்து உரிய முறையில் விசாரணை நடத்தக்கோரியும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி 2018ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அப்போதே இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணை நடத்த அனுமதி வழங்கியது. பின்னர் இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு தடை விதித்து மீண்டும் சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

"சட்டம் ஒழுங்கை திமுக சீரழித்து வைத்திருக்கிறது"- கல்யாணசுந்தரம், அதிமுக அதன்படி, இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடந்து வந்த நிலையில், வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் புதிய விசாரணை தேவையில்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 18ஆம் தேதி தீர்ப்பளித்தது.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை முகாந்திரம் உள்ளதா என்பதை கண்டறிய லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் 2018-ல் ஆரம்பகட்ட விசாரணை நடத்தியுள்ளார். 12 சாட்சிகள், 112 ஆவணங்கள் குறித்து கூடுதல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தியுள்ளார். புகாரில் போதுமான ஆதாரங்கள் இல்லை. அதிகார துஷ்பிரயோகம் செய்து வேண்டியவர்களுக்கு சாதகமாக எடப்பாடி பழனிசாமி டெண்டர் வழங்கினார் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை என்று அறிக்கை அளித்துள்ளார்.

மேலும், 2018-ல் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்.பி தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் எந்தவொரு தவறும் இல்லை. எனவே, ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில் குறைபாடு காணமுடியாது. அதுமட்டுமல்லாமல் ஆட்சி மாற்றத்தின் காரணமாகப் புதிதாக விசாரணை நடத்த வேண்டிய அவசியமும் இல்லை என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், டெண்டர் முறைகேடு வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஆர்.எஸ்.பாரதி மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என எடப்பாடி பழனிசாமி கோரியுள்ளார்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

அரசியல் செய்திகள் 


அரசியல் தலைப்பில் முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

 
சமீபத்திய செய்திகள் 
         
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

 

ஆன்மீக செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Friday, January 14, 2022

பாலியல் பலாத்கார வழக்கில் பிஷப் பிராங்கோ முலக்கல் விடுதலை.!

கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து பிஷப் பிராங்கோ முலக்கலை விடுதலை செய்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 105 நாட்கள் விசாரணைக்குப் பிறகு தீர்ப்பு வந்தது, சாட்சியங்கள் இல்லாததால் பிராங்கோ விடுவிக்கப்பட்டதாக மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஜி கோபகுமார் கூறினார்.


குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்களைத் தர அரசுத் தரப்பு தவறியதால், பிராங்கோ 7 குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார். தீர்ப்பை கேட்டதும் பிராங்கோ முலக்கல் கண்ணீர் விட்டார்.

"சர்வவல்லமையுள்ளவருக்கு நன்றி" என்பது பிஷப் பிராங்கோ முலக்கல் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தபின் பதிலளித்தார். இந்த வழக்கில் 39 சாட்சிகளின் வாக்குமூலத்தை நீதிமன்றம் விசாரித்தது. அனைவரும் விசுவாசமான சாட்சிகள் மற்றும் விரோதமாக மாறவில்லை என்று அரசு தரப்பு கூறியது.

பிஷப் பிராங்கோ காலை 9.30 மணிக்கு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். அவர் தனது சகோதரர் மற்றும் மைத்துனருடன் வந்து பின் கதவு வழியாக நீதிமன்றத்திற்குள் நுழைந்தார்.

கோர்ட்டை சுற்றி கோட்டயம் டி.எஸ்.பி., தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு மற்றும் மோப்ப நாய்ப்படையினர் சோதனை நடத்தினர். நீதிமன்ற வளாகத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. பிராங்கோ மீதான பாலியல் பலாத்கார வழக்கு 2018 ஆம் ஆண்டு கோட்டயம் மாவட்டத்தில் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டு, செப்டம்பர் 21, 2018 அன்று கைது செய்யப்பட்டார்.

ஜூன் 2018 இல் போலீஸில் செய்த புகாரில், மிஷனரிஸ் ஆஃப் ஜீசஸ் சபையைச் சேர்ந்த கன்னியாஸ்திரி, ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஜலந்தர் மறைமாவட்டத்தின் அப்போதைய பிஷப் பிராங்கோவால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறியிருந்தார்.

அவர் 2014 மற்றும் 2016 க்கு இடையில் கேரளாவிற்கு விஜயம் செய்தபோது, ​​​​43 வயதான கன்னியாஸ்திரியை 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். பின்னர், அவர் ஜலந்தர் மறைமாவட்ட பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழு, பிஷப்பை கைது செய்து, தவறான சிறை வைத்தல், கற்பழிப்பு, இயற்கைக்கு மாறான பாலியல் மற்றும் கிரிமினல் மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.

அவர் அக்டோபர் 16, 2018 அன்று ஜாமீன் பெற்றார். குற்றப்பத்திரிகையில் சீரோ மலபார் கத்தோலிக்க திருச்சபையின் கார்டினல் மார் ஜார்ஜ் ஆலஞ்சேரி, மூன்று பிஷப்கள், 11 பாதிரியார்கள் மற்றும் 22 கன்னியாஸ்திரிகள் உட்பட 83 சாட்சிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 83 சாட்சிகளில் 39 பேர் அழைக்கப்பட்டு அவர்கள் விசாரிக்கப்பட்டனர்.

தற்செயலாக, பிராங்கோ தனக்கு எதிரான எஃப்.ஐ.ஆரை ரத்து செய்ய கேரள உயர் நீதிமன்றத்தையும், உச்ச நீதிமன்றத்தையும் அணுகினார், ஆனால் இரு நீதிமன்றங்களும் அவ்வாறு செய்ய மறுத்துவிட்டன. இந்த வழக்கின் விசாரணை 2019 நவம்பரில் தொடங்கியது.

இந்த வழக்கின் விசாரணை தொடர்பான எந்த ஒரு விஷயத்தையும் தனது அனுமதியின்றி வெளியிடக்கூடாது என்று அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

தேசிய செய்திகள் 


முந்தைய தேசிய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Wednesday, January 12, 2022

ஆன்லைன் வகுப்பே சிறந்தது- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை..!

10,11,12ம் வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்பே சிறந்தது என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. 


கொரோனா 3வது அலை அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடத்துவதை தவிருங்கள் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். ஆன்லைன் வகுப்புகளால் ஆசிரியர், மாணவர், பணியாளர் ஆகியோரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

நீதிமன்ற செய்திகள் 


முந்தைய நீதிமன்ற செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Friday, December 24, 2021

நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாத அதிகாரிகளுக்கு சிறை - உயர் நீதிமன்றம் அதிரடி!

சென்னை திருவொற்றியூரில் பழைய பொருட்கள் விற்பனை தொழில் நடத்தி வந்த ஏ ஹெச் எம் டிரேடர்ஸ் மற்றும் முகமது அலி அண்ட் கோ ஆகிய இரு நிறுவனங்களும், அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறி, கட்டிடத்தை இடிப்பது தொடர்பாக மாநகராட்சி உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து இரு நிறுவனங்களின் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், "ஆக்கிரமிப்புகளை கண்டறிய டிரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். கட்டுமானப் பணிகள் விதிகளின்படியும், அனுமதியின்படியும் அமைவதை உறுதி செய்ய வேண்டும். விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் மேற்கொண்டு கட்டிட அனுமதி வழங்க கூடாது.

விதிமீறல் கட்டிடங்களை சீல் வைத்து பிறப்பிக்கும் உத்தரவுகளை மறு ஆய்வு செய்யக் கோரும் மேல் முறையீடுகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்தாலும் அதை சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பின்பற்றுவதில்லை" என அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், "நீதிமன்ற உத்தரவுகளை பற்றி கவலைப்படாமல், கடமையை செய்யத் தவறும் அதிகாரிகளின் பதவிகளை பறிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாத அதிகாரிகளுக்கு அபராதம் விதிப்பது என்பது 2ஆம் கட்டமாக இருக்க வேண்டுமே. தவிர, அவர்களை சிறையில் தள்ளுவதே முதல் கட்டமாக இருக்க வேண்டும்" என காட்டமாக தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் வாதங்கள் முடிவடைந்த நிலையில், மனுதாரர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபாரம் விதித்த நீதிபதிகள், அத்தொகையை சேலம் மேட்டூரில் உள்ள சுடரொளி சமூக சேவை அறக்கட்டளைக்கும், சென்னை, திருவேற்காட்டில் உள்ள பசு மடத்துக்கும் வழங்க உத்தரவிட்டுள்ளனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

நீதிமன்ற செய்திகள் 


முந்தைய நீதிமன்ற செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


வேலைவாய்ப்பு செய்திகள் 


சினிமா செய்திகள் 


தலைப்பு வாரியாக செய்திகள்