வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Delhi News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Delhi News. Show all posts
Showing posts with label Delhi News. Show all posts

Tuesday, September 17, 2024

ஆண்டிற்கு ரூ.10 கோடிக்கு மேல் சம்பாதிக்கும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு...! Increase in the number of Indians earning more than Rs.10 crore per year...! Vil Ambu Seithigal

ஆண்டுக்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 63 சதவீதம் அதிகரித்துள்ளது. மும்பையைச் சேர்ந்த சென்ட்ரம் ஆராய்ச்சி நிறுவனம் என்ற நிதி சார்ந்த அமைப்பு கோடீஸ்வரர்கள் சம்பளம் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது.



அதன் முடிவுகளில் கூறப்பட்டு உள்ளதாவது:ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கு மேல் சம்பாதிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 63 சதவீதம் அதிகரித்து உள்ளது. தற்போது 31,800 பேர் ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுகின்றனர். இவர்கள் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.38 லட்சம் கோடி சம்பாதித்து உள்ளனர்.

ஆண்டுக்கு ரூ.5 கோடிக்கு மேல் 58,200 பேர் சம்பாதிக்கின்றனர். இது 49 சதவீதம் அதிகம் ஆகும். இந்த வகையினர் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.40 லட்சம் கோடி வருவாய் ஈட்டி உள்ளனர்.

அதேபோல், 10 கோடி பேர் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் சம்பாதிக்கின்றனர். இது கடந்த 5 ஆண்டுகளில் 25 சதவீதம் அதிகரித்து உள்ளது. இந்த வகையினர், 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.49 லட்சம் கோடி சம்பாதித்து உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

தேசிய தமிழ் செய்திகள் 


தமிழ்நாடு முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

 
சமீபத்திய செய்திகள் 
         
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

 

ஆன்மீக செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Friday, July 21, 2023

மீண்டும் சூடுபிடிக்கும் டெண்டர் முறைகேடு வழக்கு? சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி கேவியட் மனு தாக்கல்!

நெடுஞ்சாலைத்துறை ரூ.4800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.


முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் ரூ. 4,800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்து உரிய முறையில் விசாரணை நடத்தக்கோரியும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி 2018ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அப்போதே இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணை நடத்த அனுமதி வழங்கியது. பின்னர் இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு தடை விதித்து மீண்டும் சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

"சட்டம் ஒழுங்கை திமுக சீரழித்து வைத்திருக்கிறது"- கல்யாணசுந்தரம், அதிமுக அதன்படி, இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடந்து வந்த நிலையில், வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் புதிய விசாரணை தேவையில்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 18ஆம் தேதி தீர்ப்பளித்தது.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை முகாந்திரம் உள்ளதா என்பதை கண்டறிய லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் 2018-ல் ஆரம்பகட்ட விசாரணை நடத்தியுள்ளார். 12 சாட்சிகள், 112 ஆவணங்கள் குறித்து கூடுதல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தியுள்ளார். புகாரில் போதுமான ஆதாரங்கள் இல்லை. அதிகார துஷ்பிரயோகம் செய்து வேண்டியவர்களுக்கு சாதகமாக எடப்பாடி பழனிசாமி டெண்டர் வழங்கினார் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை என்று அறிக்கை அளித்துள்ளார்.

மேலும், 2018-ல் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்.பி தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் எந்தவொரு தவறும் இல்லை. எனவே, ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில் குறைபாடு காணமுடியாது. அதுமட்டுமல்லாமல் ஆட்சி மாற்றத்தின் காரணமாகப் புதிதாக விசாரணை நடத்த வேண்டிய அவசியமும் இல்லை என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், டெண்டர் முறைகேடு வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஆர்.எஸ்.பாரதி மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என எடப்பாடி பழனிசாமி கோரியுள்ளார்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

அரசியல் செய்திகள் 


அரசியல் தலைப்பில் முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

 
சமீபத்திய செய்திகள் 
         
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

 

ஆன்மீக செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Wednesday, December 22, 2021

மீண்டும் இரவு நேர ஊரடங்கு- மத்திய அரசு உத்தரவு...? எங்கெங்கு வாய்ப்பு..?


நாடு முழுவதும் ஒமிக்ரான் பரவல் கடந்த 4 நாட்களில் மட்டும் இரட்டிப்பாகியுள்ளது. இதனையடுத்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துமாறும், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துமாறும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து ஒமிக்ரான் பாதிப்பு அதிகமாக உள்ள மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு போட வாய்ப்பு உள்ளது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

தேசிய செய்திகள் 


முந்தைய தேசிய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

தலைப்பு வாரியாக செய்திகள்

Friday, December 10, 2021

பல்வேறு நாட்டு ராணுவ அதிகாரிகள் வருகை | பிபின் ராவத் உடலுக்கு இறுதி மரியாதை | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகாவின் இறுதி ஊர்வலம் மற்றும் இறுதி மரியாதை நடைபெறுகிறது. 


இதில் பங்கேற்க முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி மதுலிகா ராவத் ஆகியோரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள இலங்கை, பூடான், வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளின் ராணுவ அதிகாரிகள் வருகை புரிந்தனர்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் இறுதி ஊர்வலம்..! | Bipin Rawat Funeral Convoy | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

டெல்லி கன்டோன்மென்ட் பகுதியில் இன்று மாலை முழு ராணுவ மரியாதையுடன் பிபின் ராவத் உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்படுகிறது.


முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் இறுதி ஊர்வலம் இல்லத்தில் இருந்து ராணுவ வாகனத்தில் ஊர்வலமாக கிளம்பியது. தொடர்ந்து 4 மணி அளவில் அவரது உடல் புதுடெல்லியில் உள்ள தௌலக்கான் பகுதியில் உள்ள ப்ரார் சதுக்கத்தில் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.

முன்னதாக ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தளபதி ஜென்ரல் பிபின் ராவத் உடலுக்கு மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ராணுவ அதிகாரிகள் உள்ளிடோர் மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள்