எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...
For Advertisement
விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Namakkal Anchaneyar Temple. Show all posts
Showing posts with label Namakkal Anchaneyar Temple. Show all posts
நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 100008 வடமாலை சாத்தப்பட்டு பக்தர்களின் தரிசனம் செய்தனர். இந்த தரிசனத்தில் தமிழக அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் டாக்டர் எம். மதிவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமி சாத்த, ஒரு லட்சத்து 8 வடை தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது.நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் வரும் 2ம்தேதி அனுமன் (ஆஞ்சநேயர்) ஜெயந்தி விழா நடைபெறுகிறது.
இதையொட்டி ஆஞ்சநேயருக்கு அன்று அதிகாலை ஒரு லட்சத்து 8 வடை மாலை சாத்தப்படுகிறது. இதற்காக வடை தயாரிக்கும் பணி நேற்று ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் துவங்கியுள்ளது.
ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மடப்பள்ளியை சேர்ந்த சமையல் கலைஞர்கள் 32 பேர், இந்த வடை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வடை தயாரிக்க 32 கிலோ மிளகு, சீரகம், 120 கிலோ உப்பு, 900 லிட்டர் நல்லெண்ணெய், 2,500 கிலோ உளுந்து மாவு ஆகியவற்றை பயன்படுத்தி வடை தயாரிக்கப்படுகிறது.
அனுமன் ஜெயந்தி விழாவுக்கான ஏற்பாடுகளையும் கோயில் அதிகாரிகள் செய்து வருகிறார்கள். இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கோயில் அலுவலகத்தில் தினமும் ஏராளமான பக்தர்கள் முன்பதிவு செய்து வருகிறார்கள்.