வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: School girl sex
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label School girl sex. Show all posts
Showing posts with label School girl sex. Show all posts

Saturday, January 08, 2022

5 வாலிபர்களுடன் லாட்ஜில் தங்கியிருந்த பிளஸ்-1 வகுப்பு மாணவிகள்.!! பகீர் சம்பவம்..!

சென்னையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவிகள் இருவரையும் காணாமல் பெற்றோர்கள் தவித்து போனார்கள். இது பற்றி போலீசில் புகார் செய்யவே போலீசாரும் தங்கள் புலன் விசாரணையை துரிதப்படுத்தினார்கள்.


அப்போது அந்த மாணவிகள் இருவரும் சென்ட்ரல் அருகே பெரியமேட்டில் ஒரு லாட்ஜில் தங்கி இருந்தது தெரியவந்தது. அவர்களை மீட்ட போலீசார் அவர்களுடன் தங்கி இருந்த 5 வாலிபர்களையும் கைது செய்தனர். போக்சோ சட்டத்தில் அவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒருவன் சிறுவன் என்பதால் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான்.

தகவலை அறிந்ததும் அந்த மாணவிகளின் குடும்பமே உடைந்து நொறுங்கி போய் கண்ணீர் வடிக்கிறது. அந்த மாணவிகளிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அனகாபுத்தூர் பகுதியில் பிளஸ்-1 படிக்கும் 5 மாணவிகள் தோழிகள். இவர்கள்அனைவரும் ‘டிக்-டாக்’ ரசிகைகள். தினமும் வித்தியாசமாக வீடியோ பதிவு செய்து அதை ‘ஷேர்ஷாட்’ மூலம் வலைத்தளத்தில் வலம் வர பதிவேற்றுவது வழக்கம்.

இவர்களுடைய பதிவுகளை பார்த்து பலர் ‘லைக்’ செய்துள்ளனர். இதனால் உற்சாகம் அடைந்த மாணவிகள் புது புது வீடியோக்களை ஆர்வத்துடன் பதிவேற்றினார்கள். ஆனால் வெளி உலகில் ரசிப்பவர்கள் மட்டும் இருக்க மாட்டார்கள். தங்களை ருசிக்க விரும்புபவர்களும் இருப்பார்கள் என்பதை அறியா பருவத்தில் அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அந்த டிக்-டாக் மூலம் திருவொற்றியூரை சேர்ந்த சுரேன் என்கிற அப்பு (23). பழக்கமாகி இருக்கிறார். அந்த மாணவிகளின் வீடியோ பதிவுகளை புகழ்ந்து தள்ளியவன் எண்ணூர் பக்கம் வாருங்கள். கடல் அழகுடன் வீடியோ எடுத்தால் இன்னும் பிரமாதமாக இருக்கும்’ என்று அளந்து விட்டுள்ளான். டிக்-டாக் மோகத்தால் பின்விளைவை பற்றி யோசிக்காமல் 5 பேரும் எண்ணூருக்கு சென்றுள்ளார்கள். அங்கு அவர்கள் வருகைக்காக காத்திருந்த அப்பு அவர்களை வரவேற்று அன்பாக பேசி இருக்கிறார்.

மாணவிகளும் அவரை ‘டிக்-டாக்’ ரசிகராக நினைத்து கொண்டார்கள். எண்ணூரில் பல இடங்களில் வீடியோ எடுத்துள்ளார்கள். அதையும் பதிவேற்றம் செய்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டுள்ளார்கள். அப்போது அவர்களில் ஒரு மாணவியின் செல்போனை நைசாக எடுத்து வைத்துக் கொண்டார் அப்பு. எல்லோரும் விடை பெற்று வீடு திரும்பினார்கள். மாலையில் செல்போனில் தொடர்பு கொண்ட அப்பு ஒரு போனை விட்டு சென்று விட்டீர்கள் என்று கூறி இருக்கிறார்.

அதை கேட்டதும் ‘தொலைந்து விட்டதாக நினைத்தோம்’ என்ற அந்த மாணவி யாராவது ஒருவர் நேரில் வந்து போனை வாங்கிக் கொள்ளுங்கள் என்று அழைத்துள்ளார். அதன் பேரில் துணைக்கு இன்னொரு மாணவியையும் அழைத்துக் கொண்டு மீண்டும் சென்ட்ரல் வந்துள்ளார்கள். அங்கு காத்திருந்த அப்பு அவர்களிடம் செல்போனை கொடுத்துவிட்டு இரவாகி விட்டதே வாருங்கள் ‘டின்னர்’ சாப்பிட்டு போகலாம் என்று அழைத்துள்ளார்.

அந்த மாணவிகளும் அப்பாவித்தனமாக பாசத்துடன் அழைக்கிறார் என்று நினைத்து சாப்பிட ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். உயர்தர ஓட்டலுக்கு அழைத்து சென்று விதவிதமாக உணவுகளை வாங்கி கொடுத்துள்ளார். மாணவிகளும் அதை ருசித்து சாப்பிட்டுள்ளார்கள். நேரம் போவதே அவர்களுக்கு தெரியவில்லை. அதற்குள் அப்பு தனது நண்பர்களையும் அழைத்துள்ளார். ஜெரால்டு (18), சஞ்சய் (19), வினித் (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரும் வந்துள்ளார்கள். அவர்கள் தனது நண்பர்கள் என்று அப்பு அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

அவர்களும் இரவு விருந்தில் கலந்து கொண்டார்கள். விருந்து முடிந்து நேரத்தை பார்க்கும் போது தான் இனி பஸ் பிடித்து செல்ல முடியாது என்பதை உணர்ந்துள்ளார்கள்.

அவர்களிடம் ‘ஒன்றும் பிரச்சனை இல்லை. கவலைப்படாதீர்கள். பக்கத்தில் தெரிந்த லாட்ஜ் இருக்கிறது. எங்களோடு தங்கி விட்டு காலையில் செல்லுங்கள் என்று கூறி இருக்கிறார். தயங்கிய அந்த மாணவிகளும் வேறு வழி இல்லாமல் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். லாட்ஜில் இரண்டு அறை எடுத்து ஆளுக்கொரு அறையில் தங்க வைத்து விட்டு 5 பேரும் அவர்களுடன் தங்கி இருந்துள்ளார்கள். முதல் நாள் இரவு முடிந்த பிறகும் மறுநாளும் அவர்களின் அன்பு கட்டளைப்படி அங்கேயே தங்க சம்மதித்து இருக்கிறார்கள்.

அதற்குள் பெற்றோர் புகாரால் போலீஸ் தேட தொடங்கியது. மாணவியின் செல்போன் சிக்னலை ஆராய்ந்த போது அது போலீசாரை சம்பந்தப்பட்ட லாட்ஜில் கொண்டு விட்டது. அங்கு போலீசார் சோதனையிட்ட போது அவர்கள் சிக்கி இருக்கிறார்கள். மீட்கப்பட்ட அந்த மாணவிகளிடம் அந்த வாலிபர்கள் பாலியல் ரீதியாக தொடர்பு கொண்டார்களா? என்று கேட்ட போது இல்லை என்று மறுத்துவிட்டனர். மாணவிகள் பயந்து சொல்ல மறுக்கலாம் என்பதால் பெற்றோர்கள் மூலம் உண்மையை கேட்க சொல்லி இருக்கிறார்கள்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சமூக சீரழிவு செய்திகள் 


முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Wednesday, December 22, 2021

15 வயது சிறுமிக்கு பிரசவம்; சிறுமியின் தாய், கள்ளக்காதலன் கைது.!

சென்னையில் 15 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்த சம்பவத்தில் அவருடைய தாயும், தாயின் ஆண் நண்பரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் துரைராஜ் என்பவனுக்கும் தவறான தொடர்பு இருந்து வந்துள்ளது. அந்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்த துரைராஜ், அவரது மகளையும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி இருக்கிறான். இதனால் அந்த சிறுமி கர்பமாகி உள்ளார். எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து மருத்துவமனை சார்பில் அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சிறுமியின் தாயையும், துரைராஜையும் போலீசார் கைது செய்தனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

தொடர்புடைய செய்திகள் 


முந்தைய தொடர்புடைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

தலைப்பு வாரியாக செய்திகள்

Monday, December 20, 2021

பத்தாம் வகுப்பு மாணவிகளின் ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டிய கல்லூரி மாணவன்; கூலிப்படையை வைத்து கொன்று புதைத்த மாணவிகள்.!

செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் கருமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். 50 வயதான இவர் கூலித்தொழிலாளி ஆவார். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர்களது மகன் பிரேம்குமார் (வயது 20) சென்னை, கிண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி. ஏ. 3ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.


இந்த நிலையில், கடந்த 17-ந் தேதி பிரேம்குமார் அதே பகுதியில் உள்ள பிரவீன்குமார் என்ற 12ம் வகுப்பு மாணவருடன் சென்னையை அடுத்த ரெட்ஹில்ஸ் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென பைக்கில் வந்த மர்மநபர்கள் பிரேம்குமாரை திடீரென தாக்கியுள்ளனர். மேலும், பிரேம்குமாரின் பைக்கையும், செல்போனையும் பறித்துக் கொண்டதுடன் அவரை கடத்தியும் சென்றுள்ளனர். இதைக் கண்டு பயத்தில் அலறியடித்துக்கொண்டே பிரேம்குமாருடன் சென்ற 12ம் வகுப்பு மாணவன் பிரவீன்குமார் வீட்டிற்கு ஓடிவந்துள்ளான்.

அங்கு தனது பெற்றோரிடமும், பிரேம்குமார் பெற்றோரிடமும் நடந்த சம்பவத்தை கூறியதுடன், பிரேம்குமாரை கடத்திச் சென்ற சம்பவத்தையும் கூறியுள்ளனர். இதனால், பிரேம்குமார் பெற்றோர்கள் பதற்றம் அடைந்துள்னர். மேலும், பிரேம்குமார் அவ்வப்போது வண்டலூர் அருகே உள்ள ஓட்டேரி பகுதியில் உள்ள 10ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளிடம் தொலைபேசியில் பேசி வந்ததையும் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார். இதனால், உடனே பிரேம்குமார் பெற்றோர்கள் அந்த மாணவிகளின் வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளனர். அவர்கள் தங்களுக்கு ஏதும் தெரியாது என்று கூறியதால், உடனே பிரேம்குமார் பெற்றோர்கள் ஓட்டேரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்னர்.


இதுதொடர்பாக, போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அந்த இரு மாணவிகள், பிரேம்குமாரின் நண்பர் பிரவீன்குமாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, மாணவிகள் அளித்த தகவல்கள் போலீசாரையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பிரேம்குமாருக்கும் இந்த இரு மாணவிகளுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இரு மாணவிகளையும் செல்போனில் ஆபாசமாக படம்பிடித்த பிரேம்குமார், மாணவிகளை மிரட்டியுள்ளார். கடந்த ஒரு வருடமாக இரண்டு மாணவிகளையும் மிரட்டி ரூபாய் 1. 50 லட்சம் பணம் வரை மாணவிகளிடம் இருந்து பிரேம்குமார் பறித்துள்ளார்.

இதனால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான மாணவிகளுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ரெட்ஹில்ஸ் பகுதியை அடுத்த சோழவரம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த அசோக் என்ற இளைஞர் பழக்கமாகியுள்ளார். கடந்த மூன்று மாதங்களாக அசோக்கிடம் இன்ஸ்டாகிராமில் பழகிய மாணவிகள், பிரேம்குமார் பற்றியும், பிரேம் மிரட்டி பணம் பறித்து வருவதையும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அசோக் மாணவிகளிடம் பிரேம்குமாரிடம் நீ கேட்ட பணத்தை தருகிறோம். ரெட்ஹில்ஸ் டோல்கேட்டிடம் வந்துவிடு என்று சொல்லுமாறு கூறியுள்ளார். பணத்தை பெறுவதற்காக பிரேம்குமாரும், பிரவீன்குமாரும் சென்றுள்ளனர். ரெட்ஹில்ஸ் சென்ற பிரேம்குமாரிடம் மாணவிகள் என்ன உடை அணிந்து வந்துள்ளீர்கள்? என்று கேட்டுள்ளனர். அதை கேட்ட மாணவிகள் அசோக்கிடம் கூறியுள்ளனர். அதன்பின்புதான் பிரேம்குமார் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

மேலும், கடத்திச் செல்லப்பட்ட பிரேம்குமாரை அசோக் உள்ளிட்ட கூலிப்படை கும்பல் 2 நாட்கள் ஒரு அறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்துள்ளது. பின்னர், ஆந்திரா அருகே உள்ள கும்மிடிப்பூண்டி அருகே பிரேம்குமாரை கடத்திச் சென்று ஆரம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய ஓபுளாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஈச்சங்காட்டுமேடு கிராமம் அருகே உள்ள ஏரியில் வைத்து சரமாரியாக வெட்டியுள்ளனர். பின்னர், அங்கேயே பிரேம்குமாரின் உடலை புதைத்துள்ளனர்.

இந்த நிலையில், கொலை நடந்த இடத்திற்கு நேற்று மாணவிகள் இருவரையும், பிரேம்குமாரின் பெற்றோர்களையும், பிரவீன்குமாரையும் போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், ஏரிக்கரையில் வெட்டி புதைக்கப்பட்ட பிரேம்குமாரின் சடலத்தை தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுத்தனர். பின்னர், அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. 15 வயதே ஆன மாணவிகள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 10ம் வகுப்பு மாணவிகள் கூலிப்படையை ஏற்பாடு செய்து கல்லூரி மாணவரை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

தொடர்புடைய செய்திகள் 


சமீபத்திய செய்திகள் 

Saturday, December 18, 2021

'எங்கும் பாதுகாப்பில்லை' | மேலும் ஒரு மாணவி கடிதம் எழுதுவிட்டு தற்கொலை!

பாலியல் தொல்லை காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு மேலும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையை அடுத்த மாங்காட்டில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார் 11ம் வகுப்பு மாணவி. இன்று பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த மாணவி, பெற்றோகள் வெளியே சென்ற நேரத்தில், அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து, மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவி தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினர். அத்துடன், மாணவியின் அறையில் சோதனை நடத்தினர். 

மாங்காடு போலீசார் விசாரித்து வந்தனர். அப்போது மாணவி எழுதிய கடிதம் ஒன்று காவல்துறையினரிடம் சிக்கியது. அதில், Stop sexual Harrasment…. இதுக்கு மேலே முடியாது. மனசு ரொம்ப வலிக்குது, பாலியல் தொல்லை தாங்க முடியவில்லை எனக்கு ஆறுதல் சொல்ல கூட யாருமே இல்லை. என்னால நிம்மதியா தூங்க முடியல. அந்த கனவு வந்து தொல்லை படிக்க முடியல. இந்த சமூகத்தில் பாதுகாப்பே இல்லை. என்னோட கனவும் எல்லாம் போய்டுச்சி. எவ்வளவு வலி. எனக்கு நியாயம் கிடைக்கும் என நினைகிறேன்.

உறவினர்கள், ஆசிரியர்கள் யாரையும் நம்பாதீங்க.. அம்மா போய்ட்டு வரேன் இன்னொரு உலகத்துக்கு… பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறை... பள்ளி மட்டுமல்ல உறவினர்கள் மற்றும் எங்கும் பாதுகாப்பில்லை... Justice for me' என உருக்கமாக கடிதம் எழுதி உள்ளார்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

Saturday, December 11, 2021

டியூசன் சென்ற சிறுமி பலாத்காரம்.. சிறுவன் வெறிச்செயல்! | School Girl Abuse in Tuition Centre | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

உத்தரப் பிரதேச மாநிலம், பரேலி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி பயிற்சி வகுப்பு முடித்துவிட்டு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை தேடி சென்ற தந்தை அங்கிருந்தவர்களிடம் விசாரித்ததில் சிறுமியை மருந்து கடையில் பார்த்ததாக தெரிவித்துள்ளனர். உடனடியாக அங்கு விரைந்து சென்று பார்த்த போது மருந்துக் கடையின் ஷட்டர் பூட்டப்பட்டு இருந்துள்ளது.


ஆனாலும் அந்த கடையின் விளக்குகள் வாசலில் ஒளிர்ந்துக் கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த சிறுமியின் தந்தை, ஷட்டரை தட்டியுள்ளார். அப்போது 17 வயது சிறுவன் கடைக்குள் இருந்தபடி ஷட்டரை திறந்துள்ளான். கடைக்குள் தனது மகள் சுயநினைவின்றி, ஆடைகள் களைந்து இருப்பதை சிறுமியின் தந்தை கவனித்துள்ளார்.


இதனால் பதறிப்போன அவர் போலீசில் புகார் கொடுக்க அந்த 17 வயது சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். பயிற்சி வகுப்பு முடித்துவிட்டு வீடு திரும்பிய சிறுமியை வலுக்கட்டாயமாக மருந்து கடைக்குள் அழைத்து சென்று சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள்