வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Veliyambakkam Near Acharapakkam
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Veliyambakkam Near Acharapakkam. Show all posts
Showing posts with label Veliyambakkam Near Acharapakkam. Show all posts

Tuesday, April 14, 2020

வெளியம்பாக்கத்தில் [அச்சிறுபாக்கம்] தொண்டு நிறுவனம் மூலம் இருளர்களுக்கு வழங்கப்பட்ட காய்கறிகள் | Veliyambakkam Village | Corona Relief Programe | Vil Ambu News


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட வெளியம்பாக்கம் கிராமத்தில் “ஹெல்ப் பாஃர் ஆல்” என்ற தொண்டு நிறுவனத்தின் மூலமாக சுமார் 20 இருளர் இன குடும்பங்களுக்கு காய்கறிகள் 13.04.2020 அன்று வழங்கப்பட்டது.
காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களை வாங்குவதற்கு பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டுவரும் இருளர் இன மக்களுக்கு “ஹெல்ப் பாஃர் ஆல்” என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் குமரேசன் தலைமையில் காய்கறி பைகள் வழங்கப்பட்டது. 
முன்னதாக அனைத்து இருளர் இன மக்களுக்கும் முகக்கவசம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அச்சிறுபாக்கம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு இருளர் இன மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து எப்படி தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) எ.சிவக்குமார் (கி.ஊ பொறுப்பு) மூலமாக அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள துப்புரவு பணியாளர்கள், ஓ.எச்.டி. ஆப்பரேட்டர்களுகு முகக்கவசம், கையுறை மற்றும் ஊராட்சிகளுக்கு தேவையான சுகாதாரப் பணி உபகரணங்கள் அந்தந்த ஊராட்சி செயலர்கள் மூலமாக வழங்கப்பட்டது.
இதனையடுத்து வெளியம்பாக்கம் ஊராட்சியில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன் முகக்கவசம் மற்றும் கையுறைகளை வழங்கினார்.