வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஆவாஸ் யோஜனா திட்டத்தில் வீடுகட்ட விண்ணப்பிக்கலாம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, October 21, 2018

ஆவாஸ் யோஜனா திட்டத்தில் வீடுகட்ட விண்ணப்பிக்கலாம்



காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராமப்புற பகுதியில் வசிக்கும் மக்கள் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராமின்) திட்டத்தின்கீழ் வீடு கட்ட விண்ணப்பிக்கலாம். ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் வீடு கட்டிக்கொள்ளும் வகையில், தகுதியான பயனாளிகள் ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு புத்தகம் மற்றும் தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை கிராம ஊராட்சி செயலர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் அளித்து கணக்கெடுப்பில் தங்களது பெயரை சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மேலும், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வீடுகள் திட்டப்பிரிவிலும் இதுதொடர்பான விண்ணப்பங்களை வழங்கலாம். இவ்வாறு கூறியுள்ளார்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment