வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பெண்கள் அதை செய்யாமலிருந்தால் ஆண்கள் ஏன் அதை கேட்கப்போகிறார்கள்!. #MeToo க்கு எதிராக பேசிய நடிகை ஆண்ட்ரியா!.
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, October 19, 2018

பெண்கள் அதை செய்யாமலிருந்தால் ஆண்கள் ஏன் அதை கேட்கப்போகிறார்கள்!. #MeToo க்கு எதிராக பேசிய நடிகை ஆண்ட்ரியா!.



பாடகியான சின்மயி, வைரமுத்து மீது வைத்த குற்றச்சாட்டுக்கு பின்னர் #MeToo என்ற ஹேஷ்டேக் வைரலானது. பெரும்பாலானோர் சின்மயிக்கு ஆதரவாகவே தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


சிலரால் இதற்கு எதிர்ப்பும் கிளம்பியது.  (தொடர்ச்சி கீழே...)  



இதையும் படிக்கலாமே !!!

இந்நிலையில் திரைப்பட நடிகையான ஆண்ட்ரியாவிடம் #MeToo பற்றி கேட்ட போது, சர்ச்சைக்குரிய பதில் ஒன்றை அளித்துள்ளார். அவர் அளித்த பதில் அனைவரையும் அதிர்ச்சியடையவைத்துள்ளது.

 

அதில் அவர் கூறுகையில், எனக்கு இது போன்ற அனுபவம் இல்லை. தான் ஒருவருடன் டேட்டிங் செல்கிறேன் என்றால் எனக்கு அவரை பிடித்திருக்கிறது என்று அர்த்தம், எனக்கு மட்டுமின்றி அவருக்கும் அதில் பிடித்திருக்கிறது என்று தான் அர்த்தம், அது தான் உண்மை.


ஒருவருடைய படுக்கையில் யார் இருக்கின்றார்கள் என்பது எல்லாம் இருவருக்கும் இடையேயான தனிப்பட்ட விஷயம், படுக்கையை பகிர்வது ஆண்களின் குற்றம் மட்டுமல்ல, தங்களது வேலைக்காக பெண்கள் படுக்கையை பகிரவிரும்பவில்லை என்றால், யாரும் அவர்களை கேட்கமாட்டார்கள்.


ஆனால் நாம் மற்றவர்களை குற்றம் சாட்டுகிறோம், பெண்கள் முதலில் தன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும், இல்லையென்றால் ஆண் மட்டுமல்ல, எல்லோரும் கிட்டே நெருங்கத்தான் செய்வார்கள் என்று கூறியுள்ளார். ஆண்ட்ரியாவின் சர்ச்சைக்குரிய பேச்சிற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment