வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: உறவுக்கு மறுத்த சிறுவனின் ஆணுறுப்பில் சூடு வைத்த பெண்.. பாய்ந்தது போக்ஸோ
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, October 11, 2018

உறவுக்கு மறுத்த சிறுவனின் ஆணுறுப்பில் சூடு வைத்த பெண்.. பாய்ந்தது போக்ஸோ



அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும், காம வெறி மண்டையில் ஏறிவிட்டால்... வயசு, தராதசம், அந்தஸ்து, பொறுப்பு இதெல்லாம் கண்ணுக்கு தெரியுமா என்ன? நொய்டா பக்கத்துல சப்ரவுலா என்கிற ஒரு கிராமம் இருக்கு. இங்க ஒரு பெண் தன் கணவனுடன்தான் வசித்துவருகிறார். இந்நிலையில் பக்கத்து வீட்டு சிறுவனை அடிக்கடி இந்த திருமணமான பெண் பாலியல் தொந்தரவு செய்து கொண்டே இருந்திருக்கிறார்.

வற்புறுத்திய பெண்
 இந்த ஆண்ட்டி ஏன் இப்படியெல்லாம் தன்னை செய்கிறார்கள் என்று அந்த சிறுவன் அதிர்ச்சியும், பயமும் பலமுறை அடைந்திருக்கிறான். இப்படித்தான் சம்பவத்தன்றும் தன்னுடன் உறவுக்கு வரும்படி அந்த சிறுவனை வற்புறுத்தி இருக்கிறார்.
(தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!

ஆத்தரமடைந்த பெண்
 ஆண்ட்டி தன்னை கூப்பிடும் தொனியை பார்த்ததும் சிறுவனுக்கு பயம் வந்துவிட்டது. அதனால் உறவு கொள்ள சிறுவன் மறுப்பு தெரிவித்திருக்கிறார். கூப்பிட்டும் சிறுவன் வராமல் மறுப்பு சொன்னது அந்த பெண்ணுக்கு கோபத்தை கொடுத்தது. சிறுவன் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.


சூடு வைத்த பெண்
 அதனால் கிச்சனுக்குள் ஓடிப்போய் ஒரு இரும்பு கம்பியை பழுக்க எடுத்து வந்து ஆணுறுப்பில் சூடு வைத்து விட்டார்.இதனால் வலி பொறுக்க முடியாமல் சிறுவன் அழுதுகொண்டே தன் வீட்டுக்கு போய் அம்மாவிடம் புகார் சொன்னான். அதோடு அந்த ஆண்ட்டி பலமுறை தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததையும் சிறுவன் கதறி கொண்டே சொன்னான்.


பாலியல் தொல்லை
 இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாய், உடனடியாக போலீசில் போலீசில் புகார் அளித்தார். பக்கத்து வீட்டு பெண்மணி தொடர்நது தன் மகனுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததால் உடனடியாக அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்,


போக்ஸோ சட்டம்
 மகனை அழைத்துகொண்டு அம்மா போலீஸ் ஸ்டேஷன் போனதை பார்த்ததுமே, அந்த பெண் தலைமறைவாகிவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் போக்ஸோ பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதுடன் அந்த பெண்ணையும் தேடி வருகின்றனர். போக்ஸோ சட்டத்தின்கீழ் பெண்களும் சேர்ந்துவிட்டது காலக்காடுமை-ன்னு சொல்றதை தவிர வேற என்னத்த சொல்றது?!!


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment