வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஆண்டிப்பட்டி அருகே ஆசிரியர் கண்டித்ததால் மாணவி தற்கொலை
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, November 16, 2018

ஆண்டிப்பட்டி அருகே ஆசிரியர் கண்டித்ததால் மாணவி தற்கொலை



ஆண்டிப்பட்டி அருகே ஆசிரியர் கண்டித்ததால் பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


ஆண்டிப்பட்டி அருகே உள்ள ராஜதானி ஆசாரிப்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). இவரதுமகள் காவ்யஸ்ரீ (வயது 12). அதே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை வீட்டு பாடம் எழுதாமல் மாணவி பள்ளிக்கு வந்தார்.
 

இதனால் வகுப்பு ஆசிரியர் மாணவியை கண்டித்து திட்டினார். மற்ற மாணவிகள் முன்னிலையில் திட்டியதால் காவ்யஸ்ரீ மனமுடைந்தார்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

மாலையில் வீட்டுக்கு வந்த உடன் தனது அறைக்கு சென்று நைலான் கயிறால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அறை கதவு நீண்ட நேரம் திறக்காமல் இருந்ததை கண்டு அவரது தாய் உள்ளே சென்று பார்த்த போது மகள் இறந்து கிடந்தார்.
இது குறித்து ராஜதானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment