வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வளர் இளம் பெண்களுக்கான உடல் பிரச்சனைகள்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, November 08, 2018

வளர் இளம் பெண்களுக்கான உடல் பிரச்சனைகள்


வளர் இளம் பருவத்தில் நல்ல உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு கிடைப்பது மிகவும் முக்கியம். வளர் இளம் பெண்களை அதிகம் பாதிக்கும் உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் பற்றி இங்கு காண்போம்.


வளர் இளம் பருவம் என்பது 10 முதல் 19 வயதுக்குட்பட்ட பருவம் ஆகும். இந்த பருவத்தினர் குழந்தையும் அல்ல, வளர்ந்த பெண்களும் அல்ல. இரண்டிற்கும் இடைப்பட்ட பருவம். இப்பருவத்தில் நல்ல ஒழுக்கத்தையும், நல்ல சிந்தனையையும், நல்ல உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் கல்வி கிடைப்பது மிகவும் முக்கியம். அதில் பள்ளிகளும், பெற்றோர்களும் சமுதாயமும் பெரும் பங்கு வகிக்கிறது. வளர் இளம் பெண்களை அதிகம் பாதிக்கும் உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் பற்றி இங்கு காண்போம்.
(தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!

1. சீரியசான சிறு நீரகத் தொற்று:- பெண்ணாக பிறந்த எல்லோரும் வாழ்நாளில் ஏதோ ஒரு தருணத்தில் நிச்சயம் இந்த அவதியை அனுபவித்திருப்பார்கள். சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை எல்லோரையும் தாக்கக் கூடிய அந்த நோய் யூரினரி இன்பெக்ஷன் எனப்படுகிற சிறு நீராகப் பாதைத் தொற்று. ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டாலும், அடிக்கடி தொடர்ந்தாலும் இந்த பிரச்சனை எப்படியெல்லாம் பாதிப்பைக் கொடுக்கிறது என்பதை பார்ப்போம்.


ஆண்களின் சிறுநீர் பைக்கும், அது வெளியேறுகிற துவாரத்துக்குமான இடைவெளி 15 செ.மீ, என்றால், பெண்களுக்கு அது வெறும் 3 செ.மீ.மட்டுமே. அதனால் மிகச் சுலபமாக கிருமிகள் பெண்களின் சிறுநீர் பையைத் தாக்குகின்றன. பெண்களுடைய உடல்வாகு மட்டுமின்றி ஒவ்வொரு வயதிலும் அவர்கள் சந்திக்கின்ற சில விஷயங்களும் இந்தத் தொற்றுக்கு மிக முக்கியமான காரணமாகிறது.


பள்ளிக்கூடம் செல்லுகிற வயதுப் பெண் குழந்தைகள், பள்ளியில் உள்ள கழிவறையின் சுகாதாரம் சரியில்லாத காரணத்தினால் சிறுநீர் கழிப்பதைத் தவிர்ப்பார்கள். தண்ணீர் குடிக்கமாட்டார்கள். இதனால் அவர்களுக்கு இந்தத் தொற்று அடிக்கடி வரும். அதன் விளைவாக வயிற்றுவலி சோர்வு, பசியின்மை. படிப்பில் கவனம் சிதறல் போன்றவை வரலாம். அடுத்து மாதவிலக்கு நாட்களில் சுத்தமாக இல்லாத பெண்களுக்கும், தரமான நாப்கின்களை உபயோகிக்காத பெண்களுக்கும் இந்த தொற்று அடிக்கடி வரும்.


அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கழிக்கிறபோது எரிச்சல், முழுமையாக கழிக்காத உணர்வு, சில நேரங்களில் காய்ச்சல் போன்றவை யூரினரி இன்பெக்ஷனுக்கான அறிகுறிகள். எப்போதோ ஒரு முறை வந்தால் மருத்துவரிடம் ஆலோசித்து, மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம். சிலருக்கு இது அடிக்கடி வரும். அவர்கள் சிறுநீ்ர் பரிசோதனை செய்யவேண்டும். சாதாரண சோதனை மட்டும் போதாது என்கிற நிலையில் யூரின் கல்ச்சர் சோதனையும் செய்து காரணத்தைத் துல்லியமாக கண்டுபிடித்து சிகிச்சை பெற வேண்டும்.


காரணங்கள்:- போதுமான தண்ணீர் குடிக்காதினால், பள்ளி நேரங்களில் சிறுநீர் கழிக்கமால் அடக்கி வைப்பது, பிறப்புறுப்பை சுத்தமின்றி வைத்துக்கொள்ளுதல், காபி, சாக்லேட் போன்றவற்றை அதிகம் சாப்பிடுதல்.

தடுப்பு முறைகள்:- வருமுன்காப்பது இந்த விஷயத்தில் மிகவும் முக்கியம். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது, அந்தரங்க உறுப்புக்களை சுத்தமாக வைத்துக்கொள்வது, மாதவிலக்கு நாட்களில் சுகாதாரத்தை கடைப்பிடிப்பது, தரமான, சுத்தமான, உள்ளாடைகளை உபயோகிப்பது போன்றவற்றின் மூலம் இதை தவிர்க்கலாம். இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சிறுநீர் கழிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். கொக்கோ கோலா, காபி, சாக்லேட் அருந்தக்கூடாது.


2. வெள்ளைப்படுதல்:- வளர் இளம் பெண்கள் வெள்ளப்படுவதை ஒரு பெரும் வியாதியாக நினைத்து பயப்படுகிறார்கள். இதைப்பற்றிய விழிப்புணர்வு வளர் இளம் பெண்களிடம் ஏற்படுத்தவேண்டியது அவசியம். வெள்ளைப்படுவது என்பது வாயில் உழிழ்நீர் சுரப்பது போன்ற பிறப்பு உறுப்பில் இருந்து வெளியேறும் தண்ணீர் போன்ற திரவம் ஆகும். நாம் எவ்வாறு உமிழ்நீர் சுரப்பை ஒரு வியாதியாக கருதவில்லையோ அதேபோல் பிறப்பு உறுப்பிலிருந்து வரும் திரவத்தையும் (வெள்ளைப்படுதல்) ஒரு நோயாக கருதக்கூடாது. எப்பொழுது மருத்துவரை அணுக வேண்டும் என்றால்;


a. பிறப்பு உறுப்பிலிருந்து வெளியேறும் திரவமானது துர்நாற்றம் அடித்தாலோ,

b. பிறப்பு உறுப்பில் ஊரல் எடுத்தாலோ,

c. பிறப்பு உறுப்பிலிருந்து வரும் திரவமானது நிறம்மாறி வந்தாலோ (பச்சை, மஞ்சள்)

d. நாப்கின் வைக்கும் அளவுக்கு அதிகமாக சுரந்தாலோ.

3. obesity& pcod மற்றும் முன்மாதவிடாய் சிக்கல்கள் - இவற்றுக்கெல்லாம் முக்கிய காரணம்


1. மாறுபட்ட நாகரீக வாழ்கை முறை

2. துரித உணவுகள் உட்கொள்ளுதல்

3. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு


மாறுபட்ட நாகரீக வாழ்க்கை முறை:- தற்பொழுது உடல் உழைப்பு, விளையாட்டு ஏதுமின்றி வளர் இளம் பெண்கள் டிவி, கம்யூட்டர், செல்போன், செல்பி என்றுதான் இருக்கிறார்கள். பூப்பெய்திய பருவத்தில் கிடைக்கும் உளுந்தங்களி, வெந்தயக்களி, போன்ற உணவுகள் எல்லாம் தற்காலக இளம்பெண்கள் சாப்பிடுவதில்லை. இவையெல்லாம் சினை உறுப்பு வளர்ச்சி, கருப்பை மற்றும இடுப்பெலும்பு விரிவடைய உதவும்.


இவ்வாறின்றி தற்போதைய நவநாகரீக வாழ்க்கை முறையால் உடல் அதிக எடை அடைதல், சினை உறுப்பு வளர்ச்சியின்றி அவற்றில் நீர் கோர்த்து கருமுட்டை வளராது, வெடிக்காது, pcod உண்டாதல். இதனால் ஒழுக்கமற்ற மாதவிடாய் மற்றும் குழந்தையின்மை உண்டாகிறது.  

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment