வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பெண்களை பார்க்க விரும்பாத கடவுளை நானும் பார்க்க விரும்பவில்லை- நடிகர் பிரகாஷ் ராஜ் ஆவேசம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, November 05, 2018

பெண்களை பார்க்க விரும்பாத கடவுளை நானும் பார்க்க விரும்பவில்லை- நடிகர் பிரகாஷ் ராஜ் ஆவேசம்


’வழிபடுவதற்கு பெண்களை அனுமதிக்காத கடவுள் எனது கடவுள் அல்ல’ என்று நடிகர் பிரகாஷ் ராஜ் ஆவேசமாகக் கூறினார். 



நடிகர் பிரகாஷ் ராஜ் கன்னடத்தில், ’இருவுதெல்லவ பிட்டு’ என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த புத்தகம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ள இந்தப் புத்தகம், மலையாளத்தில் ’நம்ம விழுங்குன்ன மவுனம்’ என்ற பெயரில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!
இந்தப் புத்தகம் சார்ஜாவில் நடந்து வரும் புத்தகக் கண்காட்சியில் நேற்று முன் தினம் வெளியிடப்பட்டது. அப்போது அங்கு வாசகர்களின் கேள் விக்கு பதிலளிக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் பிரகாஷ் ராஜ்.

அப்போது சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் பற்றி கேட்கப்பட்டது. அதுபற்றி அவர் பேசும்போது, ’ நாம் எல்லோரும் பெண்களின் வயிற்றில் இருந்துதான் பிறந்தோம். அவள், கடவுளை வழிபட வேண்டும் என்று விரும்பினால், அனுமதிக்க வேண்டும். என் அன்னையை எந்த மதம் வழிபட அனுமதி மறுக்கிறதோ, அது என் மதம் அல்ல. எந்த பக்தர்கள் என் அன்னையை வழிபட அனுமதி மறுக்கிறார்களோ, அவர்கள் உண்மையான பக்தர்கள் அல்ல.

எந்த கடவுள், அவளை மறுக்கிறதோ, அது உண்மையான கடவுளும்இல்லை. அவளுக்கான வழிபாட்டு உரிமையை அந்த கடவுள் மறுத்தால், அது எனது கடவுளும் இல்லை. பெண்களை பார்க்க விரும்பாத கடவுளை நானும் பார்க்க விரும்பவில்லை’ என்று கூறினார்

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment