வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 12-வது தேர்ச்சியா ? கடற்படையில் பயிற்சியுடன் அதிகாரி வேலை!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, November 08, 2018

12-வது தேர்ச்சியா ? கடற்படையில் பயிற்சியுடன் அதிகாரி வேலை!


கடற்படையில் 12-வது முடித்தவர்களுக்குப் பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

இந்திய கடற்படை 12-வது முடித்தவர்களை அதிகாரி பணிக்கு நியமிக்கும் பி.டெக் கேடட் என்ட்ரி ஸ்கீம் - ஜூலை 2019 என்னும் பயிற்சித் திட்டத்தில் சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு 4 ஆண்டு காலம் பி.டெக் பயிற்சி வழங்கப்படும். பி.டெக் படித்ததற்கான சான்றிதழும் வழங்கப்படும். பின்னர், அதிகாரியாக நிரந்தரமாகப் பணியமர்த்தப்படுவர். 

(தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!

வயது வரம்பு - 17 வயது முதல் 19.5 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 
தகுதி -
  •  12-வது அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கணிதம், வேதியியல் ஆகிய பாடங்களில் 70 சதவிகிதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
 
  •  ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இவர்கள் எஸ்எஸ்பி நடத்தும் ஜேஇஇ முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
 தேர்வு முறை - எஸ்எஸ்பி நடத்தும் இரு நிலைத் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை - https://www.joinindiannavy.gov.in/ என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
 
இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறிய https://www.joinindiannavy.gov.in/ என்னும் இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment