வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கல்யாண நாளில்.. தூக்கில் தொங்கிய மாப்பிள்ளை..
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, December 03, 2018

கல்யாண நாளில்.. தூக்கில் தொங்கிய மாப்பிள்ளை..



கல்யாணத்தன்றே மாப்பிள்ளை தூக்கில் தொங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சி கலந்த சோகத்தை திருச்சி மலைக்கோட்டை பகுதியில் ஏற்படுத்தி உள்ளது. சறுக்குப்பாறையை சேர்ந்தவர் தினேஷ். இவர் லிப்ட் அமைக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 

இவருக்கும் இளம் பெண் ஒருவருக்கும் நேற்று முன்தினம் மாலை ரிசப்ஷன் நடந்து முடிந்தது. நேற்று திருமணம் என நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதனால் நேற்று காலை கல்யாணத்துக்கு மாப்பிள்ளை வீட்டில் எல்லோரும் (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
மண்டபத்துக்கு கிளம்பி கொண்டிருந்தார்கள். அப்போது, தூங்கி கொண்டிருந்த மாப்பிள்ளையை எழுப்ப அவரது அம்மா அறைக்கு சென்றார். கதவு நீண்ட நேரமாக தட்டியும் திறக்கவே இல்லை.


மணமகள் குடும்பத்தார் 
அதனால் பதட்டமடைந்து ரூமின் ஜன்னல் வழியாக பார்த்தால், மாப்பிள்ளை தூக்கில் தொங்கி கொண்டு இருக்கிறார். இதையடுத்து கதவை உடைத்து, மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றும், அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லி விட்டார்கள். இந்த தகவல் மணமகள் வீட்டுக்கு உடனடியாக சொல்லப்பட்டது.

சாப்பாடு நின்றுவிட்டது
ஆனால் அதற்குள் மண்டபம் நிறைய இரு வீட்டு சொந்தக்காரர்கள், நண்பர்கள் என குவிய தொடங்கி விட்டார்கள். எல்லார் கையிலும் பரிசு பொருட்களுடன் மணமக்களுக்காக காத்திருந்தார்கள். பிறகு எல்லோரும் விஷயம் தெரிந்து சோகமாக திரும்பி சென்றார்கள். தயாராகி கொண்டிருந்த கல்யாண சாப்பாடு அப்படி அப்படியே நின்றுவிட்டது.


பிடிக்கவில்லையா? 
இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து விசாரணை நடைபெறுகிறது. மாப்பிள்ளைக்கு இந்த கல்யாணம் பிடிக்கவில்லையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கா? என விசாரித்து வருகிறார்கள்.

தாழ்வு மனப்பான்மை  
ஆனால் மாப்பிள்ளை 10-ம் வகுப்பு வரை மட்டும்தான் படித்திருக்கிறாராம். கல்யாண பெண், டிகிரி முடித்திருக்கிறாராம். இதனால்கூட மாப்பிள்ளைக்கு தாழ்வு மனப்பான்மை இருந்து இப்படி முடிவுக்கு வந்திருப்பாரோ என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment