வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2018-09-02
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, September 10, 2018

மரணத்துக்கு முன் மனதில் தோன்றும் கடைசி சிந்தனை என்ன?



மரணிப்பதற்கு முன் இறுதியாக மனித மனது என்ன சிந்திக்கும் என்ற ஆய்வில், மரணத்தை எதிர்காலத்தில் தவிர்க்கமுடியும் என்று நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறது.




மரணம்படத்தின் காப்புரிமைSPL

இதைப் பற்றி யாரும் துல்லியமாக சொல்லிவிட முடியாது. விஞ்ஞானிகளால் இது தொடர்பான சில தகவல்களை சொல்ல முடியும் என்றாலும், இந்த கேள்விக்கான பதில் பிரம்ம ரகசியமாகவே உள்ளது.
இருந்தாலும், விஞ்ஞானிகளும் இதுபோன்ற சிக்கலான புதிர் நிறைந்த கேள்விகளுக்கான பதிலைத் தேடும் முயற்சிகளில் தொடர் ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர்.

அண்மையில் மரணம் தொடர்பாக சில விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வுகள் ஆச்சரியமான முடிவுகளை தந்துள்ளது. இந்த ஆய்வுகளில் நரம்பியல் தொடர்பான சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெர்லின் சாரிட் பல்கலைக்கழகம் மற்றும் ஓஹியோவில் உள்ள சின்சினாட்டி பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஜென்ஸ் ட்ரேயரின் தலைமையின் கீழ் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வுக்காக, சில நோயாளிகளின் குடும்பத்தினரின் முன்னனுமதியை பெற்று, நோயாளிகளின் நரம்பு மண்டலத்தை விஞ்ஞானிகள் நெருக்கமாக கண்காணித்தார்கள்.




மருத்துவமனைபடத்தின் காப்புரிமைSCIENCE PHOTO LIBRARY

சாலை விபத்துகளில் படுமோசமாக காயமடைந்தவர்கள், பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பால் (கார்டியாக் அரெஸ்ட்) பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை விஞ்ஞானிகள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்படுத்தினார்கள்.
மரணிக்கும் நேரத்தில் மனிதர்களின் மூளையும், விலங்கின் மூளையும் ஒன்றுபோல் செயல்படுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். மேலும், மூளையை 'ஏறத்தாழ'மறுசீரமைப்பு செய்யப்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மரணத்தின் இறுதி கட்டத்தில் மூளையில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிப்பதோடு, மரணத்தின் இறுதித் தருணத்தில் இருக்கும் மனிதனை எப்படி காப்பாற்றலாம் என்பதும் இந்த ஆய்வின் முக்கியமான நோக்கங்களாக இருந்தது.




மூளைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த ஆய்வை விஞ்ஞானிகள் மேற்கொள்வதற்கு முன்னர், 'மூளை மரணம்' பற்றி நாம் அறிந்திருக்கும் செய்திகள் பெரும்பாலும் விலங்குகளின் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனைகளிலிருந்து தெரிந்துக் கொண்டவை என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும்.

மரணம் பற்றி நாம் ஏற்கனவே அறிந்தவை:

  • உடலின் ரத்த ஓட்டம் நின்றுபோய், மூளைக்கு ஆக்ஸிஜன் செல்வது குறையும்.
  • இந்த நிலையில், பெருமூளைச்சிரையில் ரத்த ஓட்டம் குறைவதால் (cerebrovascular ischemia), மூளையில் ரசாயன மாறுபாடுகள் ஏற்படுகின்றன. மேலும் மூளையின் 'மின் செயல்பாடு' (Electrical activity ) முற்றிலுமாக நின்றுபோய்விடும்.
  • மூளை அமைதியடையும் நடைமுறைக்கு காரணம், ஆற்றல் தேவைக்கான பசியுடன் இருக்கும் நரம்புகள், தங்களுக்கு தேவையான ஆற்றலைப் பெற்றாலும், மரணம் நெருங்குவதால் அந்த ஆற்றல் பயன்படுவதில்லை என்று நம்பப்படுகிறது.
  • அனைத்து முக்கிய அயனிகளும், மூளை செல்களிடம் இருந்து பிரிந்துவிடுகின்றன. இதனால் அடினோசின் டிரைஃபாஸ்பேட் கிடைப்பது பலவீனமாகிறது. இது ஒரு சிக்கலான கரிம வேதியியல் ஆகும். உடல் முழுவதிலும் ஆற்றலை சேமித்து வைப்பதும், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதும் இதன் வேலை.
  • இதற்கு பிறகு திசுக்களை மீட்டெடுப்பது சாத்தியமற்றதாகிவிடும்.





ஆராய்ச்சிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

மனிதர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி

ஆனால், ஜென்ஸ் ட்ரேயர் தலைமையிலான விஞ்ஞானிகளின் குழு மனிதர்களைப் பொறுத்தவரை இந்த செயல்முறையை இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள விரும்பியது. அதனால் சில நோயாளிகளின் மூளைகளின் நரம்பியல் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன.
மின்முனையக் கீற்றுகளை (Electrode strips) பயன்படுத்தி இந்த நோயாளிகளை மயக்க நிலையில் இருந்து மீட்டெடுக்க முயற்சி செய்யக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள்.
ஒன்பது நோயாளிகளில் எட்டு பேருடைய மூளையின் அணுக்கள், மரணத்தை தவிர்க்க முயற்சிப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். மூளையின் அணுக்களும், நரம்பணுக்களும் இதயத் துடிப்பு நின்ற பிறகும்கூட வேலை செய்ததை அவர்கள் கண்டறிந்தனர்.
மனிதர்களின் நரம்பு மண்டலத்தின் பிரதானமானது மனித மூளை. அதுமட்டுமல்ல, மனித உறுப்புகளில் சிக்கலானதும் மூளை என்பதும் நமக்கு தெரிந்ததே. உடலின் இயல்பான செயற்பாடுகளான மூச்சுவிடுதல், செரிமானம், இதயத்துடிப்பு, கொட்டாவி போன்ற தன்னிச்சையான செயற்பாடுகளை மேற்கொள்ளும்.
அதேபோல், விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், திட்டமிடுதல் போன்ற செயற்பாடுகளையும் மனித மூளைதான் கட்டுப்படுத்துகிறது. மற்ற எல்லா உயிர்களையும் விட இத்தகைய சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளைச் சிறப்பாக கையாளும் திறனை மனித மூளை பெற்றிருக்கிறது.


உணர்வு உறுப்புகளுக்கும் செயல்படும் உறுப்புகளுக்கும் இடையே மின்வேதியல் மாற்றங்கள் மூலம் தூண்டல்களைக் கடத்தும் பணியை செய்வது நரம்பணுக்கள் (நியூரான்கள்). இந்த மின்வேதியல் மாற்றங்கள் நரம்பணுக்களின் உள்ளும் புறமும் நடைபெறும் சோடியம் மற்றும் பொட்டாசியம் அயனிகளின் இடம்பெயர்வால் நிகழ்கிறது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, மின்வேதியல் சமநிலையை பராமரிப்பது ஒரு தொடர் முயற்சியாகும்.




दिमाग, दिलபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

உடலின் அணுக்கள் மின்வேதியல் சமநிலையை பராமரிக்க ரத்த ஓட்டத்தைப் பயன்படுத்துகின்றன, மேலும் இதிலிருந்தே ஆக்ஸிஜன் மற்றும் ரசாயன ஆற்றலையும் எடுத்துக்கொள்கின்றன.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, உடல் இறக்கும் போது, மூளையின் ரத்த ஓட்டம் நிறுத்தப்படும். அந்த சமயத்தில் செயலிழந்த நரம்புகள் தனது ஆற்றலை தக்க வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றன.
இது மெதுவாக பரவுவதற்கு பதில் மூளையில் ஒரே சமயத்தில் நடைபெறுவதால், இதை 'தவிர்க்க முடியாத மூளை அழுத்தம்' என்று கூறுகின்றனர். இந்த நிலை ஏற்படுத்தும் விளைவை எளிதாக புரிந்துக் கொள்வதற்காக, சுனாமியுடன் ஒப்பிட்டு, 'பெருமூளை சுனாமி' என்றும் அழைக்கின்றனர்.


மின்வேதியல் சமநிலை மாறுபடுவதால் மூளையில் உள்ள அணுக்கள் அழிக்கப்படும்போது, உடலில் இருந்து அதிக அளவிலான வெப்ப ஆற்றல் வெளியாகிறது. இதன்பிறகு மனித உடல் மரணிக்கிறது.




Blood testபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

'மரணமற்ற பெருவாழ்வு'

ஆனால், இந்த ஆய்வின்படி, இன்று மரணம் என்பது தவிர்க்க முடியாதது என்ற நிதர்சனமான உண்மை, எதிர்காலத்தில் மாறக்கூடும் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அப்போது 'மரணமற்ற பெருவாழ்வு' வாழும் சூழ்நிலையும் உருவாகலாம்.


ஜென்ஸ் ட்ரேயர் இவ்வாறு கூறுகிறார்: "சோடியம் அயனிகளின் ஊடுருவலால், நரம்பு மண்டலத்தின் பிளாஸ்மா சவ்வின் உள்ளேயும் வெளியேயும் இடையே ஏற்படும் ஆற்றல் வேறுபாட்டால் ஏற்படும் இழப்பு, அணுக்களின் உருமாற்றத்தை தொடங்குகிறது. ஆனால் இது மரணம் அல்ல. ஏனெனில் மீண்டும் உடலில் மின்முனைவை அளித்து, அதை மீட்டெடுக்க முடியும். இதனால் மரணத்தில் இருந்து மனிதனை மீட்டெடுத்து, இறப்பை தவிர்க்க முடியும்."
எனினும், இறப்பை தவிர்ப்பதற்கான நடைமுறைகளை கண்டறிய இன்னும் நிறைய ஆராய்ச்சிகளை செய்ய வேண்டியிருக்கிறது. இதற்கான ஆராய்ச்சியும், மரணத்தை போன்றே சிக்கலானது என்று கூறுகிறார் ஜென்ஸ் ட்ரேயர். அதாவது, மரணம் தொடர்புடைய கேள்விகளுக்கு பதில் கிடைப்பதும் எளிதானதில்லை.
ஆனால், முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை என்ற பழமொழியை காலம் நிரூபித்து வருவதைப் போன்றே, மரணம் என்ற ஒன்றும் மனிதனுக்கு இல்லை என்ற புதுமொழியை உருவாக்க ஆராய்ச்சிகள் தொடரும். இந்த ஆராய்ச்சி மனிதனின் மரணத்தை மரணிக்கச் செய்யும் முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறது.

Popular Posts

இந்தியாவில் பூஜ்ஜியம் உருவானதன் பின்னணி என்ன?



பூஜ்ஜியத்தின் கண்டுபிடிப்பு கணிதத்துறை வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியது. நுண்கணிதம், இயற்பியல், பொறியியல் மற்றும் நவீன தொழில்நுட்பத்திற்கும் அடிப்படையானதாக திகழ்கிறது பூஜ்ஜியம் என்னும் சுழியம்.


இந்தியாபடத்தின் காப்புரிமைMARIELLEN WARD

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் நடுநாயகமாக அமைந்துள்ள எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த குவாலியர் கோட்டை, இந்தியாவின் மிகப்பெரிய கோட்டைகளில் ஒன்றாகும். உயரமான விதானங்கள் கொண்ட கோபுரங்கள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள் மற்றும் வண்ணமயமான ஓவியங்கள் கொண்ட ஒன்பதாம் நூற்றாண்டு ஆலயம் ஒன்றையும் இக்கோட்டையில் காணலாம். இந்த ஆலயம் பாறைகளை செதுக்கி உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பூஜ்ஜியத்தின் தளம்

சதுர்புஜ் என்று அழைக்கப்படும் இந்த ஆலயம், இந்தியாவின் பிற புராதான ஆலயங்களை போலவே வடிவமைக்கப்பட்டிருந்தாலும் எழுத்து வடிவில் புஜ்ஜியம் அமைக்கப்பட்டிருக்கும் புராதன தளம் இந்த ஆலயம் என்பது இதற்கு தனிச்சிறப்பு சேர்க்கிறது.
ஆலயச் சுவரில் ஒன்பதாம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட எழுத்துக்களில் '270'. என்ற எண் தெளிவாக தெரிகிறது.
கணிதம் மற்றும் விஞ்ஞானத்தில், பூஜ்ஜியத்தின் கண்டுபிடிப்பு மிகவும் ஆக்கப்பூர்வமானது. இன்றைய உலகில், உலகின் ஒவ்வொரு நகர்வுக்கும் அடிப்படையாக திகழ்வது பூஜ்ஜியம். கணிதம், நுண்கணிதம், இயற்பியல், பொறியியல் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் தொடக்கமும் பூஜ்யத்திலிருந்தே சாத்தியமானது.
நவீன இந்தியாவிற்கும், நவீன உலகத்திற்கும் அடித்தளமிட்ட மிக முக்கியமான கண்டுபிடிப்பு இந்திய கலாசாரத்தில் எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்தது?



இந்தியாபடத்தின் காப்புரிமைMARIELLEN WARD
Image captionகுவாலியர் கோட்டை

சூனியத்தில் இருந்து பூஜ்ஜியம்

ஒரு இந்திய தொன்மயில் வல்லுநர் தேவ்தத் பட்நாயக், ஒருமுறை சொன்ன கதை எனக்கு நினைவிற்கு வருகிறது. பேரரசர் அலெக்சாண்டர் இந்தியாவிற்கு வந்தது தொடர்புடைய கதை அது.
போரில் பல நாடுகளை வென்ற பிறகு இந்தியா வந்தடைந்த அலெக்சாண்டர், நாகா யோகி ஒருவரை சந்திக்கிறார். நிர்வாணமாக பாறையில் அமர்ந்து வானத்தை நோக்கி பார்த்துக் கொண்டிருந்தார் அவர்.
அவரை பார்த்து அலெக்சாண்டர் கேட்டார், "என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?"
"ஒன்றுமில்லாததை உணர்ந்துக் கொண்டிருக்கிறேன், நீ என்ன செய்துக் கொண்டிருக்கிறாய்" என்று அந்த ஞானி கேட்டார்.


"நான் உலகத்தை வென்று கொண்டிருக்கிறேன்" என பதிலளித்தார் அலெக்சாண்டர்.
இருவருமே சிரித்தனர்; எதிரில் இருப்பவர் பைத்தியம், நேரத்தை வீணடிப்பதாக இருவரின் மனதிலும் பரஸ்பரம் தோன்றியிருக்கலாம்.
குவாலியர் ஆலயச் சுவரில் பூஜ்ஜியம் என்ற குறியீடு உருவாக்கப்படுவதற்கு பல காலம் முன்னரே இந்த சம்பவம் நடந்தேறியது. ஆனால் அந்த துறவி சூனியத்தை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்ததற்கும் பூஜ்ஜியத்தின் கண்டுபிடிப்பிற்கும் ஒரு தொடர்பு இருந்திருக்கலாம்.
பிற நாகரீகங்களை விட, இந்திய கலாசாரத்தில் பூஜ்ஜியம் தொடர்பான விரிவான தத்துவங்கள் காணப்படுகின்றன. இந்திய கலாச்சாரத்தில், தியானம் மற்றும் யோகா போன்ற முறைகள் மூலம் மனதை சூனியமாக அதாவது ஒன்றுமில்லால் வெறுமையாக வைக்கும் முறைகள் தோன்றின.
இந்து மற்றும் பௌத்த சமயங்களில், பூஜ்யம் மற்றும் அதனுடன் தொடர்புடைய கோட்பாடுகள் போதிக்கப்படுகின்றன.


இந்தியாபடத்தின் காப்புரிமைMARIELLEN WARD

பூஜ்ஜியம் என்ற எண்ணின் பூர்வீகம் அல்லது தோற்றத்தைப் பற்றி ஆராயும் பணியில் ஈடுபட்டுள்ளது நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ஜீரோ ஆரிக்இந்தியா (ZerOrigIndia) என்ற அமைப்பு.
அதன் செயலாளர் டாக்டர் பீட்டர் கோபட்ஸ் பூஜ்யத்தின் தோற்றத்தைப் பற்றி ஒரு கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: "கணிதத்தில் பயன்படுத்தப்படும் பூஜ்யம் என்பது வெறுமை தொடர்பான சமகால தத்துவமான சூனியத்தில் இருந்து உருவாகியிருக்கலாம். சூனியத்தின் தத்துவம் என்பது, ஒருவர் மனதில் இருந்து பதிவுகள் மற்றும் எண்ணங்களை நீக்கி வெறுமையாக்குவது என்ற புத்தமத கோட்பாடு என்பது குறிப்பிடத்தக்கது".


மேலும், பண்டைய காலத்தில் இருந்தே இந்தியாவில் கணிதத்தில் மிகப்பெரிய ஆர்வம் இருந்தது. பண்டைய கிரேக்கர்கள் எண்களை 10,000 என்பது வரை கணக்கிட்ட நிலையில் இந்திய கணிதவியலாளர்கள் டிரில்லியன் போன்ற மிகப்பெரிய எண்களை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இன்ஃபினிட்டி என்று அழைக்கப்படும் முடிவிலியின் பல்வேறு வகைகளையும் இந்திய கணிதவியலாளர்கள் பயன்படுத்தினார்கள் என்பது கணிதத்துறையில் இந்தியர்களின் முன்னோடியாக இருந்தார்கள் என்பதை உணர்த்துகிறது.


இந்தியா

இந்திய அறிவியல் மற்றும் கணிதவியலாளர்களான ஆர்யபட்டா கி.பி 476 ஆம் ஆண்டிலும், பிரம்மகுப்தா கி.பி 598 ஆம் ஆண்டிலும் பிறந்தனர். இவர்கள் இருவரும் நவீன தசம இட மதிப்பீட்டு முறையை முதன்முறையாக விவரித்த முன்னோடிகள் என்றும் பூஜ்ஜியத்தின் பயன்பாட்டை நிர்வகிக்கும் தற்போதைய விதிகளை வழங்கியவர்களாகவும் அறியப்படுகின்றனர்.
வட்ட வடிவில் பூஜ்ஜியத்தை எழுத்துவடிவில் முதல்முறையாக பதிவு செய்திருப்பது குவாலியர் கோட்டையில் உள்ள ஆலய சுவரில் என்று கூறப்பட்டாலும், மூன்றாம் அல்லது நான்காம் நூற்றாண்டை சேர்ந்த பண்டைய பக்ஷாலி கையெழுத்து பிரதியில் (Bhakshali manuscript) பூஜ்ஜியத்தின் வடிவம் காணப்படுவதாக கூறப்படுகிறது. இருந்தபோதிலும், தட்சசீலத்தில் (தற்போதைய பாகிஸ்தானில் உள்ளது) கிடைத்த பழங்கால இந்திய பாக்ஷாலி கையெழுத்துப் பிரதியில் பூஜ்யம் என்ற எழுத்து காணப்படுகிறது. தற்போது இதுதான் பூஜ்ஜியத்தின் மிகப்பழைய எழுத்து வடிவமாக கருதப்படுகிறது.



எண்கள்படத்தின் காப்புரிமைCSUEB/ALAMY

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கணிதவியல் பேராசிரியர் மார்கஸ் டு செளடோய், பல்கலைக்கழக இணையதளத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: "கணித வரலாற்றில் மிகப்பெரும் சாதனையாக கருதப்படும் பூஜ்ஜியம் என்ற எண், பக்ஷாலி கையெழுத்து பிரதியில் புள்ளியைப் போன்று காணப்படும் வடிவத்தில் இருந்து உருவானது. இந்தியாவின் பண்டைய கணிதவியலாளர்கள் வழங்கிய பூஜ்ஜியம் இன்றைய நவீன உலகின் அடித்தளமாகும் வகையில் மூன்றாம் நூற்றாண்டிலேயே விதைக்கப்பட்டது. பல நூற்றாண்டுகளாக இந்திய துணை கண்டத்தில் கணிதம் எவ்வாறு துல்லியமானதாக இருந்தது என்றும் கணித பயன்பாடு வளமையுடன் இருந்தது என்பதையும் இந்த கண்டுபிடிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன."
இந்தியாவைத் தவிர பிற நாடுகளில் ஏன் பூஜ்ஜியத்தின் கண்டுபிடிப்பு நடக்கவில்லை? இதற்காக கூறப்படும் சில காரணங்கள் சுவாரசியமானவை.
சில கலாசாரங்களில் சூனியம் என்பது எதிர்மறை எண்ணங்களை தோற்றுவிப்பதாக கருதப்பட்டது. உதாரணமாக, ஐரோப்பாவில் பூஜ்ஜியத்தை பயன்படுத்துவதற்கு கிறித்துவ மதம் ஆரம்ப காலங்களில் தடை விதித்தது. அதற்கு காரணம் என்ன தெரியுமா?
"கடவுளே அனைத்துமாக இருப்பதால் சூனியம் அதாவது ஒன்றுமே இல்லை என்று சொல்லும் பூஜ்ஜியம் சாத்தானை குறிக்கும் குறியீடு".
எனவே இதுபோன்ற கருத்துக்களால் சூனியத்தை பற்றிய கண்டுபிடிப்புகள் பிற நாடுகளில் பூஜ்ஜியமாக இருந்ததோ என்னவோ?
ஆனால் ஆன்மீக அறிவு மேம்பட்டிருந்த இந்தியாவில் தியானமும் பூஜ்ஜியமும் கண்டுபிடிக்கப்பட்டன.

பண்டைய இந்தியா, கணிதத்துறைக்கு வழங்கிய மற்றொரு முக்கியமான கண்டுபிடிப்பான பைனரி எண்கள் (இரும எண்கள்) நவீன உலகத்துடன் ஆழமான தொடர்பு கொண்டது. இந்த பைனரி எண்கள் நவீன கணிப்பீடுகள் மற்றும் கணினிகளின் அடிப்படையாகும்.


இந்தியாபடத்தின் காப்புரிமைJOERG BOETHLING/ALAMY

இந்திய சிலிகான் வேலி

பெங்களூரு கெம்பேகெளடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நகருக்குள் செல்லும் 37 கிலோமீட்டர் இடைவெளியில் உள்ள ஊரகப் பகுதியில் பரந்து விரிந்துள்ள ஐ.டி நிறுவனங்களின் வானாளவிய கட்டடங்கள் அடங்கிய வளாகங்களை பார்க்கலாம்.
இந்தியாவில் டிஜிட்டல் புரட்சியை பறைசாற்றும் விதமாக இண்டெல், கூகுள், ஆப்பிள், அராகல், மைக்ரோசாஃப்ட், அடோப், சாம்சங், அமேசான் என பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் மற்றும் இன்ஃபோசிஸ் விப்ரோ போன்ற இந்திய நிறுவனங்களும் இந்திய சிலிகான் வேலியில் அமைந்துள்ளன.
ஆடம்பரமான, பல்வேறு நாடுகளை இணைக்கும் விமான சேவைகளை வழங்கும்அழகான விமான நிலையம் மாற்றத்திற்கான முதல் உதாரணமாக திகழ்கிறது. பூங்கா நகரம் என்று அறியப்பட்ட பெங்களுர், ஐ.டி நிறுவனங்கள் வந்த பிறகு பெங்களூருவாகவும், இந்தியாவின் சிலிகான் வேலி என்றும் அறியப்படுகிறது.
எலக்ட்ரானிக் சிட்டி என்ற ஒற்றை தொழிற்துறை வளாகமாக 1970களில் தொடங்கப்பட்ட தொழில்நுட்பத் துறை வளர்ச்சியானது, கர்நாடக மாநிலத்தின் முதுகெலும்பாக பரிணமித்துவிட்டது. தற்போது ஒட்டுமொத்த இந்தியாவின் ஐ.டி தொழிலின் 40% பெங்களூருவை சார்ந்திருக்கிறது.


ஒரு கணக்கீட்டின்படி, இருபது லட்சம் ஐ.டி தொழில் நிபுணர்கள், 60 மில்லியன் ஐ.டி தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய பிற வேலைகள் மற்றும் 80 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஐ.டி தொழில் ஏற்றுமதி என 2020ஆம் ஆண்டிற்குள் உலகின் மிகப்பெரிய ஐ.டி. மையமாக பெங்களூரு மாறிவிடும்.
இது அனைத்தும் சாத்தியமானது பைனரி எண்களால் தான்!
நவீன டிஜிட்டல் கணினிகள் இரண்டு சாத்தியங்களின் அடிப்படையில் இயங்குகின்றன. 'ஆன்' மற்றும் 'ஆஃப்' ('On' & 'off') 'On' என்பதை '1' என்றும், 'off' என்பதை '0' அதாவது பூஜ்ஜியம் என்றும் கொண்டு இவை இயங்குகின்றன.
"கி.மு இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்திய இசை வித்வான் பிங்கலா பைனரி எண்களை பயன்படுத்தியிருக்கிறார்" என்று அமெரிக்காவின் ஓக்லஹோமா பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் வானியல் பேராசிரியர் சித்தார்த் கக் கூறுகிறார்.
இவை அனைத்துமே சூனியத்தில் இருந்து பூஜ்ஜியத்தை கண்டறிந்த இந்தியாவில் தோன்றியது.

Sunday, September 09, 2018

விந்தணு எண்ணிக்கை அதிகரிப்புக்கும் உள்ளாடைக்கும் என்ன தொடர்பு?


இறுக்கமற்ற உள்ளாடை (ஜட்டி) அணிவது ஆண்களின் விந்தணு எண்ணிக்கையையும், விந்தணுவை கட்டுப்படுத்துகின்ற ஹார்மோன்களையும் அதிகரிக்க செய்கிறது என்று அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவித்திருக்கிறது.
விந்தணுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
அமெரிக்காவின் ஹார்வர்டு டிஹெச் சான் பொது சுகாதார கல்லூரியை சேர்ந்த ஆய்வாளர்கள் 656 ஆண்களிடம் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.
இறுக்கமான உள்ளாடை (ஜட்டி) அணிவோரைவிட இறுக்கமற்ற உள்ளாடை அணிந்தோர் 25 சதவீத அதிக விந்தணு எண்ணிக்கை கொண்டவராக இருந்ததாக இந்த ஆய்வில் அவர்கள் கூறியுள்ளனர்.
விதைப்பைகளை சுற்றியிருக்கும் குளிரான வெப்பநிலை இதற்கு காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
வாழ்க்கையில் கடைபிடிக்கப்படும் இந்த எளிமையான மாற்றம் ஆண்களின் ஆண்மைத்தன்மையை மேம்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
'மூளை விந்தணு உற்பத்தியை தூண்டுகிறது'
விந்தணு
விந்தணு உற்பத்தி 34 டிகிரி செல்சியஸை விட அதிகமான வெப்பநிலையில் பாதிக்கப்படுமென அறியப்படுகிறது. அதனால்தான் உடலுக்குள் இல்லாமல் விதைப்பை தனியாக தொங்கி கொண்டிருக்கிறது,
உள்ளாடைகள் (ஜட்டி) சில, விதைப்பையை உடலுக்கு மிகவும் நெருக்கமாக இருக்க செய்யும். இதனால் விரைகளை சுற்றிய வெப்பநிலை அதிகரிக்கிறது.
ஆனால், பாக்சர் போன்ற வேறு சில உள்ளாடைகள் விதைப்பையை தளர்வான இருக்க செய்து, குளிரான வெப்பநிலையை பாதுகாக்கின்றன.

சமீபத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், கருவள சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு செல்வோரில் இறுக்கமற்ற, தளர்வான பாக்சர் உள்ளாடை (ஜட்டி) பயன்படுத்தியோருக்கு அதிக விந்தணு எண்ணிக்கை இருந்ததை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இறுக்கமான உள்ளாடை அணிந்தோர் கொண்டிருந்த நீந்திச்செல்லும் சக்தியுடைய 33 சதவீத விந்தணுக்களைவிட 17 சதவீதம் அதிக விந்தணுக்களை இறுக்கமற்ற உள்ளாடை அணிந்திருந்தோர் பெற்றிருந்தனர்.
ஆனால், விந்தணுவின் வடிவமோ, டிஎன்ஏயின் தரமோ யாருக்கும் பாதிக்கப்படவில்லை.
இறுக்கமற்ற உள்ளாடை 'விந்து எண்ணிக்கையை அதிகரிக்கிறது'
உள்ளாடைக்குள் நிலவும் அதிக வெப்பம் இந்தப் பிரச்சனையின் மூலக்காரணம் என்ற அனுமானத்தோடு, இந்த ஆண்களின் வயது, உடல் எடை குறியீடு மற்றும் புகை பிடித்தல், சுடுநீரில் குளிப்பது போன்ற பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட விந்தணுவை பாதிக்கக்கூடிய பிற அம்சங்களையும் ஆய்வாளர்கள் கவனத்தில் கொண்டு இதனை ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
விந்தணுவை உற்பத்தி செய்ய விதைப்பைகளுக்கு ஆணையிடும் மூளையின் ஒரு ஹார்மோன்தான் நுண்ணுயிர் ஊக்குவிக்கும் ஹார்மோன் (ஃஎப்எஸ்ஹெச்). இந்த வகையான ஹார்மோன் இறுக்கமற்ற உள்ளாடை அணிந்தோரிடம் 14 சதவீதம் குறைவாக இருந்தது 'ஹூமன் ரிபுராடக்ஷன்' பத்திரிகையில் வெளியான இந்த ஆய்வில் வெளிப்பட்டுள்ளது.

விதைப்பையின் வெப்பநிலை அதிகரிப்பை ஈடுசெய்வதற்கு அதிக ஹார்மோனை சுரக்க செய்வதும், இறுக்கமான உள்ளாடை அணிகின்றபோது விந்தணுக்களை குறைப்பதையும் இந்த நுண்ணுயிர் ஊக்குவிக்கும் ஹார்மோன் (ஃஎப்எஸ்ஹெச்) கட்டுப்படுத்துவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த ஆய்வில் ஈடுபட்ட ஷிஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் ஆண்குறி நோயியல் பேராசிரியர் ஆலன் பேஸி இது பற்றி கருத்து தெரிவிக்கையில், இறுக்கமான உள்ளாடை அணிவது விதைப்பைகளில் சேதமடைய செய்வதை, வேறுபட்ட உள்ளாடை வகைகளை அணிந்த ஆண்களிடன் காணப்படும் நுண்ணுயிர் ஊக்குவிக்கும் ஹார்மோன் மாறுபடுகின்ற நிலை (ஃஎப்எஸ்ஹெச்) காட்டுகிறது என்று கூறியுள்ளார்.
இனப்பெருக்கம் ஆண், பெண் இருபாலாரின் செயல்பாடு

விந்தணுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
இந்த ஆய்வு விந்தணுவின் எண்ணிக்கை மற்றும் தரத்தை பற்றியது. ஆண்மைத்தன்மை பற்றியதல்ல.
எந்த வகையான உள்ளாடைகளை அணிந்தாலும், விந்தணு எண்ணிக்கை இயல்பாகவே இருக்கிறது.
ஆனால், குறைவான விந்தணு உற்பத்தி நிலையிலுள்ள சில ஆண்களுக்கு, இறுக்கமான உள்ளாடை அணிவதை மாற்றிக்கொண்டு தளர்வான உள்ளாடைகளை அணிவது உதவலாம் என்று பேராசிரியர் ஆலன் பேஸி பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
"இறுக்கமான உள்ளாடையால் பாதிப்பு இருப்பதை இந்த ஆய்வு காட்டுகிறது. ஆண்கள் தங்களுடைய நிலைமையை மேம்படுத்தி கொள்வதற்கு மலிவான, எளிய முயற்சி இருப்பதையும் இது காட்டுகிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

"விந்தணு அதிகரிப்பதற்கு சுமார் 3 மாதங்கள் ஆகின்றன. எனவே முன்னதாகவே திட்டமிட்டு கொள்ளுங்கள்" என்று இந்த ஆய்வின் ஆசிரியர் டாக்டர் ஜோர்ஜ் சாவெரோ பிபிசியிடம் கூறியுள்ளார்.
"மலட்டுத்தன்மை என்பது வெறுமனே பெண்களை சார்ந்த பிரச்சனையல்ல. இனப்பெருக்கம் என்பது ஆண், பெண் இருபாலாரின் செயல்பாடு. எனவே, கருவளத்திற்கு ஆண்களின் பங்களிப்பு பற்றி நாம் இன்னும் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும் என எண்ணுகிறேன்" என்று டாக்டர் ஜோர்ஜ் தெரிவித்திருக்கிறார்.