வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: காலுடன் கபாலத்தை காவு வாங்கிய ஸ்மார்ட்போன்.! உஷார் மக்களே உஷார்.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, March 28, 2019

காலுடன் கபாலத்தை காவு வாங்கிய ஸ்மார்ட்போன்.! உஷார் மக்களே உஷார்.!


இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயனர்கள் அதிகம் உள்ளனர், அதே போல் ஸ்மார்ட்போன்கள் அதிகப்படியாக வெடிக்கும் நிகழ்வுகள் கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் தான் அதிகம் நடந்தேறி வருகிறது. 



அதேபோல் தற்பொழுது நடந்துள்ள ஒரு சம்பவம் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!


பேண்ட் பாக்கெட்டில் ஒப்போ வெடித்தது  

ஹைதராபாத் பகுதியில் உள்ள 28 வயது தக்க ஒரு இளைஞரின் புத்தம் புதிய ஸ்மார்ட்போன், அவரின் பேண்ட் பாக்கெட்டில் வெடித்துள்ளது. இந்த சம்பவம் ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



எம்.டி இம்ரான்  

எம்.டி இம்ரான் என்ற இந்த இளைஞர் அல்வாள் பகுதியில் எலெக்ட்ரிசியனாக பணியாற்றி வருகிறார். நேற்று இருசக்கர வாகனத்தில் வேலைக்குச் செல்லும் வழியில், அவரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த அவருடைய புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் வெடித்துச் சிதறியுள்ளது.


தலை மற்றும் கண்களிலும் பலத்த காயம்  

அவருடைய ஸ்மார்ட்போன் வெடித்துச் சிதறியதனால், அவரின் கால்களில் பெரிய அளவில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வாகனம் ஓட்டிக் கொண்டிருந்த வேளையில் ஸ்மார்ட்போன் வெடித்ததால், நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவரின் தலை மற்றும் கண்களிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.


ஸ்மார்ட்போன் அதிகப்படியாகச் சூடானது தான் காரணம் 

சம்பவ இடத்திலிருந்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர், அவரின் உயிருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் பயன்படுத்தி வந்த ஸ்மார்ட்போன் அதிகப்படியாகச் சூடானது தான் காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.


நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு  

இச்சம்பவம் தொடர்பாக இம்ரான் ஒப்போ நிறுவனம் மற்றும் ஒப்போ ஸ்மார்ட்போன் விற்பனை செய்த ரீடைல் கடையின் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார்.



சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்களுக்கு தடை 

ஓவர் ஹீட் மற்றும் ஓவர் சார்ஜிங்கினால் ஸ்மார்ட்போன்கள் வெடிக்கும் சம்பவம் அதிகமாக இந்தியாவில் நடந்தேறி வருகிறது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன் விமானங்களில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் அதிகம் வெடித்த ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி நோட் 7 என்பது குறிப்பிடத்தக்கது. இனி ஸ்மார்ட்போன் சூடான தூரமா வச்சுடுங்க, பாக்கெட்டில மட்டும் வச்சுடாதீங்க மக்களே! உஷார்.


No comments:

Post a Comment