வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2019-04-14
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, April 23, 2019

[வீடியோ] அத்தனை ஹெவியான பெட்டியை தூக்கி கொண்டு போன.. சுடிதார் போட்ட பெண்.. கிட்ட போய் பார்த்தா!


திருவனந்தபுரம்: பச்சை கலர் சுடிதார், பிங்க் கலர் பேன்ட் அணிந்த பெண் ஒருவர் பெட்டி தூக்கி கொண்டு போவதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் எல்லோரும் பதறி போய்விட்டனர்! நாட்டு மக்களின் ராயல் சல்யூட் இப்போது அவருக்குதான் சென்று கொண்டு இருக்கிறது!


நாளைக்கு கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் 3-ம் கட்ட தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக அனைத்து வேலைகளும் அங்கு மும்முரமாக நடந்து வருகிறது. இப்படித்தான் திரிச்சூர் மாவட்டத்திலும் வாக்கு பதிவு மையங்களில் ஆயத்த பணிகள் நேற்று நடந்தது. இதில் அதிகாரிகளும் போலீசாரும் ஏராளமானோர் ஈடுபட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களை லாரியிலிருந்து பூத்தில் பாதுகாப்புடன் இறக்கி வைத்து கொண்டிருந்தார்கள்.

அனுபமா

இந்த பணிகளை மாவட்ட கலெக்டரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான அனுபமா பக்கத்தில் நின்று கொண்டு கவனித்து கொண்டே இருந்தார். லாரிக்குள் இருந்து பெட்டியை இறக்கி தருகிறார்கள்.. ஆனால் அதை வாங்கி பூத்துக்குள் கொண்டு செல்ல ஒரே ஒரு போலீஸ்காரர் மட்டும் நின்றிருந்தார். இன்னொருவர் வந்தால்தான் பெட்டியை தூக்க முடியும். அதற்காக அவர் காத்து கொண்டிருந்தார்.

போலீஸ்காரர்

இதை பார்த்ததும் அனுபமா, கொஞ்சமும் யோசிக்காமல், பெட்டியை வாங்குவதற்கு லாரிக்கு பக்கத்தில் போய் நின்றுகொண்டார். அதாவது ஒரே ஒருவரால் பெட்டியை தூக்க முடியாது என்பதால் கை கொடுத்து அந்த போலீஸ்காரருக்கு உதவ முயன்றார்.

பதறிய அதிகாரிகள்

உடனே உள்ளிருந்து பெட்டி எடுத்து தரப்பட்டது. அதனை அனுபமாவும் அந்த போலீஸ்காரரும் தூக்கி கொண்டு உள்ளே போனார்கள். கலெக்டர் இப்படி திடீரென பெட்டியை தூக்குவதை பார்த்ததும் அங்கிருந்த மற்ற அதிகாரிகள் பதறி போய் விட்டனர். அலறியடித்து கொண்டு அருகில் ஓடிவந்தார்கள்.

குவியும் வாழ்த்துகள்

ஆனால், அவர்களை கையால் சைகை செய்து தடுத்து நிறுத்திவிட்டு, தானே பெட்டியை தூக்கி கொண்டு போனார். இது வீடியோவாக இணையத்தில் செம ஹிட்டடிக்க ஆரம்பித்தது. 'இளம் அதிகாரிக்கு வாழ்த்துகள்', 'இளம் அதிகாரிகள் சிலர் ஜனநாயகம் உயிர்ப்புடன்தான் இருக்கிறது'.. என்றெல்லாம் கமெண்ட் போட்டு வருகிறார்கள். கூடவே வீடியோவை ஷேர் செய்தும் வருகிறார்கள்.

Monday, April 22, 2019

3 பிள்ளைகளின் தாய் தூக்கிட்டுத் தற்கொலை..!




விழுப்புரம் மாவட்டம் சித்தாத்தூரில் 3பிள்ளைகளின் தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  



உளுந்தூர்ப்பேட்டை அருகே சித்தாத்தூரைச் சேர்ந்த ராஜகுமாரிக்கும், குறிப்பிடபுரத்தைச் சேர்ந்த விஜேந்திரன் என்பவருக்கும் 9ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், ராஜகுமாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். 



காவல்துறையினர் உடலைக் கைப்பற்றிக் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். ராஜகுமாரியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகக் கூறி அவரது பெற்றோரும் உறவினர்களும் ஆசனூர் – சிறுவத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். விரைந்து வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு நடத்திக் கலைந்துபோகச் செய்தனர்.


http://www.runworldmedia.com/2019/0

4/blog-post_16.html

http://www.runworldmedia.com/2019/0

4/blog-post_61.html

Sunday, April 21, 2019

வேர்க்கடலை கேரட் கிரேவி | Groundnut Carrot Gravy செய்முறை தமிழில்....


வேர்க்கடலை கேரட் கிரேவி | Groundnut Carrot Gravy செய்முறை தமிழில்....


Saturday, April 20, 2019

தன் விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் பைக்கை விற்று விட்டு ரயிலைப் பிடித்த ஜெட் ஏர்வேஸ் பைலட்


நிதிப்பற்றாக்குறை காரணமாக சேவை முற்றிலும் நிறுத்தப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பைலட் உள்ளிட்ட பணியாளர்கள் கடும் பணச்சிக்கல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
பிற நகரங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட தொழில் நுட்ப ஊழியர்கள் பலர் தங்கள் குடும்பத்தினரைச் சந்திக்க ரெயில் டிக்கெட்டுகளுக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

நேஷனல் ஏவியேட்டர்ஸ் கில்டின் கேப்டன் அசிம் வாலியானி கூறும்போது, "இன்று காலை சக பைலட்டிடமிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அவர் தனது விலை உயர்ந்த பைக்கை விற்று விட முடிவு செய்துள்ளதாக என்னிடம் தெரிவித்தார். 

பல ஊழியர்களும் தங்கள் தினசரி செலவுகளைக் கூட சந்திக்க முடியாத கஷ்டத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்" என்றார். ஜெட் ஏர்வேஸில் 15 ஆண்டுகளாக பணியாற்றிய சீனியர் பொறியாளர் ஒருவர் பலரும் கடும் பணக்கஷ்டத்தில் உழல்வதாகத் தெரிவித்தார், குறிப்பாக பைலட் ஒருவர் தன் சகோதரி திருமணச் செலவுகளுக்காக பலரிடமும் பணம் கேட்டு வருகிறார் என்றார். 

'கடந்த வாரம்தான் சக ஊழியர் மகன் சிகிச்சைக்காக நிதி திரட்டினோம், மருத்துவ பில்கள் லட்சக்கணக்கை தாண்டிய போதும், பையனைக் காப்பாற்ற முடியவில்லை' என்றார்.
இன்னொரு பெயரை வெளிடிட விரும்பாத ஊழியர் ஒருவர் கூறும்போது, சம்பளப்பாக்கியினால் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் ஒரு ஊழியர் அவதிப்பட்டு வருவதைத் தெரிவித்தார்.

ஊருக்குச் சென்று குடும்பத்தினரைப் பார்க்கக் கூட ரயில் டிக்கெட் எடுக்க முடியாத நிலையில் சில கீழ்நிலை ஊழியர்கள் கஷ்டப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். குறைந்த சம்பளதாரர்கள் சேமிப்பு செய்ய முடியாததால் தற்போது மிகவும் கஷ்டத்தில் இருக்கின்றனர். ஸ்டேட் வங்கித் தலைமை வங்கிகள் கூட்டமைப்பு ஜெட் ஏர்வேசுக்கு ஏதாவது வழிகாட்டுதல் செய்தால்தான் ஊழியர்கள் நிலுவைச் சம்பளம் கிடைக்கும் நிலை உள்ளது.

Friday, April 19, 2019

இனி Tiktok பதிவிறக்கம் செய்ய முடியாது..அடுத்த ஆப்பு PubGக்கு....



Tiktok செயலி என்பது பொது மக்களை சீரழித்துக் கொண்டு செயலிகளில் முக்கிய செயலியாகும். இதற்கு முன்பு புளூவேல் என்ற விளையாட்டு செயலி அனைவரின் உயிரையும் பலியாக்கி  கொண்டிருந்ததால் உலகளாவிய எதிர்ப்பு ஏற்பட்டு தற்போது தடையில் உள்ளது.


தற்போது  சமூக கலாச்சாரத்தை சீரழித்து கொண்டிருந்த Tiktok செயலி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.


இது போன்றே PubG விளையாட்டினை எப்பொழுது நீக்குவார்கள் என்ற ஆர்வத்தில் அனைத்து பெற்றோர்களும் உள்ளனர்.

Thursday, April 18, 2019

அதிகமா வியர்க்குதா?... அப்ப கண்டிப்பா இத பண்ணுங்க.!



கோடையில் சருமம் எளிதில் வறண்டுபோய் விடும். அதை தடுக்க தினமும் 2 டம்ளர் மோர் குடித்து வாருங்கள். வறண்ட சருமம் நீங்கி தோல் பொலிவு பெறும். வெயிலின் தாக்கம் தாங்காமல் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படும். குறிப்பாக எண்ணெய் பசையான உடம்பு என்றால் முகத்தில் பருக்கள் பாடாய்படுத்தும்.


கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாறை முகத்தில் தடவவும். எக்காரணம் கொண்டும் பருக்களை கிள்ளக்கூடாது. இதனால் பருக்கள் அதிகமாகும். மேலும், முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.


கோடை வெயிலில் நாக்கு மட்டுமல்ல தோல் வறட்சியும் ஏற்படும். இதற்கு பழச்சாறு, காய்கறிச்சாறு, சூப் அடிக்கடி சாப்பிடவும். இதனால் தோல் வறட்சி தடுக்கப்படும். உடம்புக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதோடு தோல் பளபளப்பாகவும் மாறும். கோடைகாலத்தில் தயிர் சாப்பிடுவதை விட மோராக சாப்பிடுவது நல்லது.


உடம்பில் இருந்து அதிகமான அளவு வியர்வை வெளியேறுவதைத் தடுத்தால் வேர்க்குருவைக் கட்டுப்படுத்தலாம். அதிகமாக வியர்க்கும்போது குளித்தால் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது. வியர்வை நின்ற பிறகே குளிக்க வேண்டும்.
அதிக அளவு சோப்புகளையும் கோடைகாலத்தில் பயன்படுத்த வேண்டாம். அதிகமாக வியர்க்கும்போது பவுடர் பூச வேண்டாம். நன்றாக கழுவி துடைத்த பிறகே பவுடரை பூச வேண்டும்.
கோடைகாலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது சருமம் தான்.


வெள்ளரி, தர்பூசணி, இளநீர் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக்கொள்வது நல்லது. குறிப்பாக சிறிது சீரகத்தை நீரில் போட்டுக் காய்ச்சி அந்த நீரை அடிக்கடி பருகலாம். இதனால் கோடையில் சருமம் மங்காமல், செழுமை அடையும். வெயிலில் வெளியில் அலைபவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள் கண்டிப்பாக அடிக்கடி மோர் மற்றும் இளநீரை குடிக்க வேண்டும். உடல் சூடு குறைவதோடு, உடம்புக்கு புத்துணர்வு கிடைக்கும்.


கோடைகாலத்தில் எண்ணெய் பதார்த்தங்கள், காரம் முதலானவற்றை தவிர்க்கவும். சுத்தமான குடிநீரையும் அதிகம் குடிக்கலாம்.
வெயில் காலத்தில் நீர்ச்சத்து அதிகம் கொண்ட வாழைத்தண்டு, கீரை போன்றவற்றை உண்ணுவது உடம்புக்கு நல்லது. எக்காரணம் கொண்டும் சிறுநீரை அடக்க வேண்டாம்.
வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் வெயில் காலத்தை எண்ணி அதிகம் கவலைக்கொள்ள வேண்டாம். ஏனென்றால் கோடைகாலத்தில் அதிகம் வியர்க்கும்.


இதனால் வறண்ட சருமத்தைக் கொண்டவர்களுக்கு நன்மையே தவிர, தீமை இல்லை. கோடைகாலத்தில் எல்லோருக்குமே உடலில் வியர்வை நாற்றம் ஏற்படவே செய்யும். அதற்கு நிறைய தண்ணீர் குடிக்கவும். கீரைகள், ஆரஞ்சுப் பழம், அன்னாசிப் பழம் ஆகியவற்றை நிறைய சாப்பிடுங்கள். இவற்றிலுள்ள நார்ச்சத்து திரவ உற்பத்தியைக் குறைப்பதோடு பாக்டீரியாக்களையும் ஒழிக்கும்.

Zee Tamil சேனல் வராது.... ஒளிபரப்பை நிறுத்தும் ஜி தமிழ்..! அதிர்ச்சியில் மக்கள்... காரணம் இதுதான்?



தமிழகத்தை பொறுத்தவரை தொலைக்காட்சிகள் இல்லாத வீடுகளே மிக குறைவாக உள்ளது. அதை போன்று தொலைக்காட்சியை பார்க்காதவர்கள் மிகவும் சொற்பமாக உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வயதான பெரியவர்கள் தான் தொலைக்காட்சி தொடர்களை அதிக அளவில் பார்ப்பார்கள்.


தற்போது இளைய தலைமுறையினர் அதிக அளவில் தொலைக்காட்சி தொடர்களை பார்க்கத் தொடங்கிவிட்டனர். இதனால் பல முன்னணி தொலைக்காட்சிகளும், விளம்பரங்களுக்காக சீரியல்களை எடுத்து நல்ல வருமானம் சம்பாதித்து வருகிறது. இதில் பல தொலைக்காட்சி நிறுவங்கள் ரியாலிட்டி ஷோக்கள் நடத்தி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 


தொலைக்காட்சியை நிறுவனங்களுக்குள்ளேயே பல போட்டிகள் நடைபெறுகிறது. இப்படி இருக்கும் நிலையில், சில மணி நேர ஒலிபரப்பு நிறுத்தி வைத்தால், எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள்?அப்படியான ஒரு முடிவை ஜி தமிழ் நிறுவனம் எடுத்துள்ளது. அதிக அளவில் பார்க்கப்படும் நம்பர் ஒன் சானாலாக இருக்கும் ஜீ தமிழ் நிறுவும் ஒளிபரப்பு நிறுத்த முடிவு செய்துள்ளது.
இதற்கு காரணம் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.


எனவே அன்றைய தினம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக காலை 8 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பை நிறுத்தி வைக்க ஜீ தமிழ் தொலைக்காட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.