எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...
For Advertisement
விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
காஷ்மீர் மாநிலத்தின், கிஷ்த்வார் மாவட்டத்தில், பொதுமக்கள், ராணுவ வீரர்களை போன்ற சீருடை அணிய வேண்டாம் என, போலீசார் உத்தரவிட்டுள்ளனர். ராணுவ சீருடை வடிவிலான ஆடைகள் கடைகளில் விற்கப்படுவதால் அவற்றை அணிந்து பாதுகாப்பான இடங்களிலும் ஊடுருவி தாக்குதல் நடத்துவது எளிது என்பதால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது, ஜம்மு - காஷ்மீரில், குடியரசுத் தலைவர் ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள, கிஷ்த்வார் மாவட்டத்தில், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும்
அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்களை போல சீருடை அணிந்து,
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து, போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிஷ்த்வார் மாவட்டத்தை
சேர்ந்த இளைஞர்கள், ராணுவ வீரர்களை போன்ற சீருடை அணிய வேண்டாம்.
தீவிரவாதிகள், ராணுவ சீருடை போல் உடை அணிந்து, தாக்குதல் நடத்த
வாய்ப்புள்ளது.
எனவே, பாதுகாப்பு படையினருக்கு, தீவிரவாதிகளை அடையாளம் காண்பதில் குழப்பம்
ஏற்படும் என்பதால், பொதுமக்கள், ராணுவ சீருடை போன்ற உடைகளை அணிவதை தவிர்க்க
வேண்டும். அதேபோல், துணி கடைகளிலும், ராணுவ சீருடை போன்ற உடைகளை விற்க
வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்திய ராணுவத்தின் சீருடையை மாற்றுவதற்கான ஆய்வுகளை
பாதுகாப்புத்துறை அமைச்சகம் மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ராணுவ வீரர்கள் அணிந்திருக்கும் சீருடையானது டெரிகாட் ஃபைபர்
(terrycot fibre) வகையை சார்ந்த துணியால் செய்யப்பட்டதாகும். இது வெயில்
காலங்களில் வீரர்களுக்கு அசவுரியமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில்
அனைத்து சீதோசன நிலைகளிலும் வீரர்கள் அணியும் வகையில் புதிய சீருடையை
உருவாக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
சமுதாயத்தில் வெற்றி பெறுவதற்கு செல்வாக்குடன் திகழ்வதற்கும், நீங்கள்
நிறைய கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் நிலையான முயற்சி ஆகியவற்றைச்
செய்ய வேண்டும். வெறுப்பை உமிழும் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொள்ளும்
பக்குவம் இருக்க வேண்டும்.
இதுவும் அதுபோன்ற ஒரு வழக்கு தான். ஒரு திறமையான சிறுவன்,
இன்ஸ்டாகிராமில் பெண் போல் வேடமணிந்து பல பேர் பின்தொடரும் ஒரு பிரபலமாக
இருந்து வருகிறான். அவன் தன்னுடைய பணத்தில் சொந்தமாக ஒரு வீடு வாங்கும்
நிலையை அடைந்து விட்டான். அவன் கதையை பற்றி நாமும் அறிந்து கொள்வோம்.
சிறுவன்
தாய்லாந்தை சேர்ந்த 12 வயது சிறுவன் நெஸ் ஹெயில்ஸ். இந்த சிறு வயதில் ஒரு
மிகப் பெரிய பிரபலமாக வலைத்தளங்களில் வலம் வரும் இவன், இன்று சமூகத்தில்
அதிக பணம் ஈட்டும் சிறுவனாகவும் இருக்கிறான். தன்னுடைய குடும்பத்திற்காக
ஒரு வீடு வாங்கும் அளவிற்கு அவனுடைய நிதி நிலைமை வளர்ந்துவிட்டதாக அவன்
கூறுகிறான்.
இன்ஸ்டாகிராம்
இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற தனது சமூக ஊடகங்களில்
பெண் போல் மேக்கப் மற்றும் உடை அணிந்த புகைப்படங்களை பதிவிட்டு வருகிறான்
இந்தச் சிறுவன். அவன் சிறு வயதில் தன்னுடைய தாயின் மேக்கப் சாதனங்களை
எடுத்து விளையாடத் தொடங்கினான் என்று கூறப்படுகிறது.
அவனுடைய ஆர்வத்தை அவன்
பெற்றோர் ஊக்குவித்து மேலும் அவனுடைய பொழுதுபோக்கை வளர்த்துக் கொள்ள சில
குறிப்புகளையும் வழங்கி வந்திருக்கின்றனர்.
தற்போது அந்தச் சிறுவனை பின்தொடரும் இன்ஸ்டாகிராம் வாடிக்கையாளர்கள்
280,000 என்ற எண்ணிக்கையில் உள்ளது.
அந்தச் சிறுவன் ஒரு பெண்ணாக ஆடைகளை
அணிந்தும், மேக்-அப் குறிப்புகளைக் கொடுத்தும், தன்னைப் பற்றிய
புகைப்படங்களையும் இடுகையிடுவதால், சமூக ஊடகங்களில் ஒரு
செல்வாக்குமிக்கவராக தன்னைத் தானே உருவாக்கிக் கொண்டிருக்கிறான்.
வைரலாகும் சிறுவன்...
நெஸ் தன்னுடைய குடும்பத்திற்காக கட்டிய புதிய வீடு குறித்த புகைப்படங்களை
வெளியிட்டவுடன் ஆசியாவின் தலைப்பு செய்தியாக மாறி இருந்தான்.
நெஸ்
அலங்காரம் செய்யும் போது, ஆடம்பரமான ஆடைகளில் போஸ் கொடுப்பதன் மூலமாகவோ
அல்லது ஈர்க்கக்கூடிய விக் அணிவதன் மூலமாகவோ, போலி கண் இமைகள் அணிவதன்
மூலமாகவோ தன்னை ஒரு பெண்ணாக தோற்றமளிக்க தனது திறமைகளைப் பயன்படுத்துவதன்
காரணமாக பலரும் அவனைப் பின்தொடரும் நிலைக்கு வந்திருக்கிறான்.
நெஸ்ஸின்
அலங்காரம் மற்றும் பாணி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது, இது சில
தொழில்முறை ஒப்பனை கலைஞர்களை வெட்கப்பட வைக்கும் அளவிற்கு உள்ளது என்பது
மிகை அல்ல.
புகைப்படங்கள்
நெஸ்ஸின் இந்த பொழுபோக்கு காரணமாக அவனுடைய நண்பர்கள் சில முறை அவனை கிண்டல்
செய்ததாகவும் அவன் கூறுகிறான். ஆனால் அவன் பொழுதுபோக்கில் அவனுக்கு உள்ள
ஆர்வம் காரணமாக அவற்றை அலட்சியம் செய்து விடுகிறான். இதில் தான் அவனுடைய
சந்தோசம் உள்ளது என்று அவன் நம்புகிறான்.
விளம்பர ஒப்பந்தங்கள்
நெஸ் மிகவும் இலாபகரமான விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் பல்வேறு
நிகழ்வுகளுக்கான அழைப்புகளைப் பெற்று வருகிறான். தாய்லாந்தில் மட்டும் இவன்
நட்சத்திர அந்தஸ்தைப் பெறவில்லை, சீனா போன்ற அயல்நாடுகளில் இருந்தும்
அவனுக்கு பல அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன.
"முதல்ல மூடு கிரியேட் பண்ணனும்" என்று டயலாக் சொல்லி டிக்டாக்
ஆப்பில் நந்தினி என்ற இளம்தாய் பாடுவதும், நடிப்பதும் இணையத்தில் வைரலாகி
வருகின்றன.
திருச்சியை சேர்ந்த தம்பதி மகேஷ் - திவ்யா. இவர்கள் தங்கள் வீட்டை
எதிர்த்து கடந்த 2008-ம் ஆண்டு காதல் கல்யாணம் செய்து கொண்டார்கள். கடந்த
2013-ம் ஆண்டு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. எனினும் கருத் வேறுபாடு
காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
திவ்யாவுடன் குழந்தை வளர்கிறான். இந்நிலையில், திவ்யாவுக்கு வேறு ஒரு
நபருடன் தகாத உறவு இருப்பதாகவும், அந்த நபர் தன் மகனை அடித்து
கொடுமைப்படுத்துவதாகவும் திவ்யாவின் கணவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
வீடியோ ஆதாரம்
அந்த மனுவில், "மனைவி என்னை விட்டு பிரிய காரணம், Smule, Facebook மற்றும்
டிக்டாக் போன்றவைதான்" என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். அதற்கான
ஆதாரங்களையும் வெளியிட்டார். அதில் மனைவி திவ்யா டிக்டாக் ஆப்பில் பாடி,
ஆடி, நடித்திருக்கும் 2 வீடியோக்கள் உள்ளன.
பனி ராத்திரி
அதில், "இதுக்கெல்லாம் முதல்ல மூடு கிரியேட் பண்ணணும்.. இப்ப பாரு..
சிவராத்திரி.. தூக்கம் ஏது ஹோய்.. முதல் ராத்திரி தொடங்கும்போது.. பனி
ராத்திரி.. பட்டு பாய் விரி.. சுப ராத்திரி ஹோய்.. புது மாதிரி விடிய
விடிய" என்று டூயட் பாடுகிறார்.
டயலாக்
இன்னொரு வீடியோ இது: "தளபதி.. நீங்க தியேட்டர்ல நின்னு படம் ஓட்டுனது..
பஞ்சாயத்துல நின்னு பவுசு காட்டினது.. ஆல் டீடெயில் ஐ நோ.. ஆசையை பாரு..
அதெல்லாம் ஒன்னுமில்லை.. உங்க புல்லட்டு பார்த்துதான் உங்களை லவ் பண்ணேன்"
என்று லவ் டயலாக் பேசி ஒரு வீடியோவில் நடித்துள்ளார்.
மகன் விளையாட்டு
இந்த சமயத்தில் திவ்யாவின் மகன் சட்டை கூட இல்லாமல் வெற்று உடம்போடு,
தன்னத்தனியாக உட்கார்ந்து விளையாடி கொண்டிருக்கிறான். அவனுக்கு அங்கு
என்னநடக்கிறது என்று கூட தெரியவில்லை. அம்மா செல்போன் வைத்துகொண்டு யாருடன்
என்ன பேசுகிறார் என்றுகூட தெரியாமல் மலங்க மலங்க விழித்தபடியே விளையாடி
கொண்டிருக்கிறான்
விபரீதம்
இளம் தலைமுறைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த, ஸ்மியூல், டிக்டாக் போன்ற
ஆப்புகள் உதவியாக இருக்கின்றன என்பது சந்தேகம் இல்லை. நீதிமன்ற தடையையே
எதிர்த்து வாதிட்டு, பிறகு அனுமதி பெற்று இந்த ஆப்புகள் தொடர்ந்து
நடைமுறையில் இப்போது உள்ளன. ஆனால் ஒரு குடும்பத்தை சீரழிக்கும் அளவுக்கும்,
கொலை வரை முடியும் வீபரீதத்துக்கும் ஒரு வரைமுறை இல்லையா.. அளவுக்கு
மிஞ்சினால் அவ்வளவும் கேடுதான்!
தாலி கட்டும் நேரம் நெருங்கிவிட்டது.. அந்த சமயத்தில் கல்யாண பொண்ணு
இப்படி அதிரடியான காரியத்தை செய்துவிட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே இடைக்கோடு பகுதியை சேர்ந்த ஒரு
இளைஞருக்கும், பாகோடு பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் நேற்று கல்யாணம்
ஏற்பாடு செய்யப்பட்டது.
பாகோடு பகுதியில் உள்ள ஒரு சிஎஸ்ஐ சர்ச்சில்தான் கல்யாணம் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. இரு வீட்டு தரப்பிலும் உறவினர்கள், நண்பர்கள்
குவிந்து வர ஆரம்பித்துவிட்டனர்.
தாலி
மணமகனின் கையில், மணமகளின் கையை பிடித்து கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதற்கு பிறகுதான் தாலி கட்டும் நிகழ்வு நடக்கும். அதற்கு முன்பு சபை போதகர்
வாக்குறுதிகளை வாசிப்பதும், அந்த வாக்குறுதிகளை மணமக்கள் ஏற்றுக் கொள்வதாக
பதிலுரைப்பதும் வழக்கம். அதன்படியே போதகரும் வாக்குறுதிகளை வாசிக்க
ஆரம்பித்தார்.
மயங்கினார்
ஆனால் மணப்பெண்ணிடம் இருந்து பதிலே வரவில்லை. திடீரென மயங்கி கீழே
விழுந்தார். இதை பார்த்து சர்ச்சில் இருந்த எல்லாரும் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக மணப்பெண் வீட்டுக்காரர்கள் அவரை தூக்கி சர்ச்சின் உள்பகுதியில்
உள்ள ரூமுக்கு தூக்கி சென்றனர்.
உடனடியாக ஒரு டாக்டர் வரவழைக்கப்பட்டார்.
மணப்பெண்ணை செக் செய்து பார்த்துவிட்டு, "நல்லாதானே இருக்காங்க.. ஒரு
பிரச்சனையும் இல்லையே.. கல்யாணத்தை நடத்துங்க" என்றார்.
கெஞ்சினார்
அப்போது கல்யாண பெண் திடீரென அந்த டாக்டரின் கையை பிடித்து கொண்டு, "என்னை
காப்பாத்துங்க டாக்டர். எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கல. இதை எப்படியாவது
நிறுத்திடுங்க" என்று கெஞ்சினார். வருங்கால மனைவியான கல்யாண பொண்ணுக்கு
என்ன ஆச்சோ என்று பதறி தவித்து நின்று கொண்டிருந்த மாப்பிள்ளை இந்த
வார்த்தைகளை கேட்டுவிட்டார்.
பேச்சுவார்த்தை
இருந்தாலும் மணப்பெண்ணை தனியாக கூப்பிட்டு பேசி பார்த்தார். உங்களை எனக்கு
பிடிக்கல என்று அந்த பெண் சொல்லிவிட்டார். மாப்பிள்ளையை தொடர்ந்து இரு
வீட்டு நபர்களும் பெண்ணிடம் பேசியும் ஒன்றும் வேலைக்காகவில்லை.
இதுக்குமேல
கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணினால் சிக்கல்தான் ஏற்படும் என்பதால்
உடனடியாக திருமணத்தை நிறுத்துமாறு போதகர் சொல்லிவிட்டார். உடனே பெண் வீடு,
மாப்பிள்ளை வீடு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போட்டு கொள்ள
ஆரம்பித்தனர். பிறகு அங்கிருந்தவர்கள் அவர்களை சர்ச்சை விட்டு ஒருவழியாக
வெளியேற்றினர்.
மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில் அநியாயமாக 7 வயசு மகளை அடித்தே
கொன்றுவிட்டார் கொடூர குடிகார தந்தை!
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள ராமலிங்கபுரத்தை
பூத்தோட்டதெருவை சேர்ந்தவர் கைலாசம். இவருக்கு திருமணமாகி இவருக்கு மகள்கள்
உள்ளனர்.
37 வயதாகிறது. பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி லீலாவதி.
இவர்களுக்கு 13 வயதில் ஐஸ்வர்யா, 7 வயதில் சுகிர்தா என்ற மகள்கள் உள்ளன.
சுகிர்தா சிங்கையில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள்.
குடிபோதை
கைலாசத்திற்கு தினமும் குடிக்காவிட்டால் பொழுது போகாது. அதிலும்
குடித்துவிட்டு மனைவியையும், 2 குழந்தைகளையும் வெளுத்து விட்டுதான் தூங்கவே
போவார். இப்படியேதான் வழக்கமாக வைத்திருந்து இருக்கிறார்.
சுருண்டு விழுந்தாள்
இப்படித்தான் நேற்று இரவும் தண்ணி அடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில்
ஈடுபட்டுள்ளார். அப்பா-அம்மா சண்டை போடுவதை பார்த்து மிரண்ட குழந்தை
சுகிர்தா அவர்கள் நடுவே சென்றாள். இதில் மண்டை நிறைய போதையிலும், சண்டை
போட்ட ஆத்திரத்திலும் இருந்த கைலாசம், சுகிர்தாவை பளார் என கன்னத்தில் ஒரு
அறை விட்டார். இதில் சுகிர்தா அங்கேயே சுருண்டு விழுந்து மயக்கமாகி
விட்டாள்.
உயிர் பிரிந்தது
இதனைகண்டு பதறிப்போய் ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு ஓடினார்கள். ஆனால்
வழியிலேயே சுகிர்தா இறந்துவிட்டாள். ஆனால் இந்த விஷயம் வெளியே
தெரிந்துவிட்டால், பிரச்சனை ஏற்படும் என்பதை அறிந்த தம்பதி கொலையை மறைக்க
முடிவு செய்தனர் .
பின்னர் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக
நாடகமாடி அப்பகுதியினரை நம்ப வைத்தனர். மேலும் இறுதிச் சடங்கு செய்வதற்கும்
முயற்சி செய்தனர்.
கைது
ஆனால் சிவகங்கை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அங்கு விரைந்து
சென்ற போலீசார் கணவன்-மனைவி இருவரையும் கைது செய்தனர். இது சம்பந்தமாக
வழக்கு பதிவு செய்து, சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி
அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்து விசாரித்து வருகிறார்கள்.
புதுச்சேரி அருகே 100 ஏக்கர் பரப்பளவில் தனி ஒருவன் உருவாக்கிய காடு
மக்களின் விழிகளை விரியச் செய்துள்ளது. தற்போது புதுச்சேரி மக்கள்
தூய்மையான காற்றை சுவாசிக்கவும், நிலத்தடி நீரை பாதுகாப்பதிலும் அந்த தனி
ஒருவன் உருவாக்கிய காடு முக்கிய பங்கு வகித்து வருகிறது.
அது குறித்த ஒரு
சிறப்பு செய்தி தொகுப்பு.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையடிவார பகுதியில் வளையாப்பட்டு கிராமத்தை
சேர்ந்தவர் சரவணன்.
இவர் இயற்கை மீது கொண்டிருந்த அதீத காதலாலும், மரங்கள்
மற்றும் வனத்தை பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கத்தில், 1989 ஆம் ஆண்டு
புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் சர்வதேச நகரில் தன்னை இணைத்துகொண்டு சமூக
சேவைகளையும், மரங்களை வளர்க்கும் பணிகளையும் செய்து வந்தார்.
இயற்கையின் மீது சரவணன் கொண்டிருந்த அளவுகடந்த காதலை பார்த்த ஆரோவில்
நிர்வாகத்தினர் புதுச்சேரியின் நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய ஊசுட்டேரி அருகே
உள்ள பூத்துறை கிராமத்தில் வெட்டாந்தரையாகவும், செம்மண் மேடாகவும்,
மரங்களற்றும் இருந்த 100 ஏக்கர் ஆரோவில் நிலத்தை சரவணனிடம் காடுகளை
உருவாக்குவதற்காக ஒப்படைத்தனர்.
மேலும் மரங்களே இல்லாத வெட்டாந்தரையாக
இருந்த அந்த நிலத்தில் சரவணனுக்கு ஒரு குடில் மட்டும் அமைத்து கொடுத்தனர்
ஆரோவில் நிர்வாகத்தினர். பிறகு அந்த இடத்தில் உலர் வெப்ப மண்டல காடுகளை
உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார் சரவணன்.
மண் வளம்
முதலாவதாக அந்த நிலத்தில் மண் வளத்தை வளப்படுத்த மழைநீரை வீணாக்காமல்
சேமிக்க முடிவு செய்த அவர், அங்கு வரப்புகள் அமைத்து மழைநீர் வெளியே
செல்லாமல், மழைநீர் பூமிக்கடியில் செல்லும்படி செய்தார். இதனால் அந்த
பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. மண்ணின் வளமும்
சிறப்பானது.
பிறகு உள்ளூர் இளைஞர்கள் உதவியுடன் 100 ஏக்கர் நிலத்தில்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதில்
சரவணனுக்கு நல்ல பலன் கிடைத்தது. சரவணனின் 25 ஆண்டு கால கடின உழைப்பால்
தற்போது மரம், செடி, கொடிகள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தாவரங்கள்
வளர்ந்து, பச்சை போர்வை போர்த்திய போல பரந்து விரிந்து காட்சியளிக்கிறது
ஆரண்யா வனம்.
ஆரண்யா காடு
பரபரப்பான நகர வாழ்க்கைக்கு விடை கொடுத்து சற்று இயற்கையோடு உறவாடிவிட்டு
வரவேண்டும் என்று நினைப்பவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் இடமாக தற்போது
இந்த ஆரண்யா காடு இருந்து வருகிறது. ஆரண்யாவிற்குள் நுழையும் போதே அங்கு
துள்ளி விளையாடும் மயில்கள் நம்மை வரவேற்கின்றனர்.
வனத்திற்கு உள்ளே போக
போக அறிதாகவிட்ட குயில்களின் ஓசைகளும், பறவைகளின் இனிமையான சத்தங்களும் நம்
செவிகளுக்கு விருந்து படைக்கின்றன. மேலும் அங்குள்ள பல ஆயிரக்கணக்கான
மூலிகை செடிகளின் வாசம் நம் உடலை புத்துணர்ச்சி அடைய செய்கிறது.
சரவணன் உருவாக்கிய வனம்
தற்போது சரவணன் உருவாக்கிய இந்த ஆரண்யா வனத்தில், செம்மரம், தேக்கு, மா,
பலா, கருங்காலி, வேங்கை உள்ளிட்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட மர வகைகளும்,
மாங்குயில், மயில், பச்சப்புறா, கொண்டாலத்தி, அமட்டகத்தி உள்ளிட்ட 240 பறவை
வகைகளும் உள்ளன.
அதுமட்டுமல்லாமல் மான், முல்லம்பன்றி, காட்டுப்பன்றி,
தேவாங்கு, உடும்பு, எறும்புதிண்ணி, நட்சத்திர ஆமை உள்ளிட்ட 40 க்கும்
மேற்பட்ட வன விலங்குகள் மற்றும் பல்வேறு வகையான பாம்பு இனங்களும் இங்கு
வசித்து வருகின்றன.
இலவச அனுமதி
ஆரண்யாவிற்கு செல்வதற்கு கட்டணம் ஏதும் கிடையாது. நீங்கள் இயற்கை
நேசிப்பராகவும், இயற்கையைப் பற்றியும், வனத்தை பற்றியும் தெரிந்து கொள்ளும்
ஆர்வம் இருந்தால் மட்டும் போதும் ஆரண்யா உங்களுக்கும் சொந்த என்கிறார்
சரணவனன். சரவணன் உருவாக்கிய ஆரண்யா வனத்தை காண்பதற்காகவும், ஆரண்யாவில்
தங்கி ஆராய்ச்சி செய்வதற்கும் பெருமளவில் பலரும் வருகின்றனர்.
வெளி மாநிலங்களிலிருந்து
இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் தாவரவியல்
அறிஞர்கள், பேராசிரியர்கள், இயற்கை ஆர்வலர்கள், மாணவர்கள், பறவை
ஆர்வலர்கள், வன உயிரின ஆர்வலர்கள் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
அவர்களுக்கு மரம் மற்றும் காடுகள் வளர்ப்பது குறித்த பயிற்சியையும், சூழல்
கல்வி, பல்லுயிர் பெருக்கம் குறித்த பயிற்சியை அளித்து வருகிறார் சரவணன்.
சிலர் ஆரண்யாவிலேயே பல நாட்கள் தங்கியிருந்து காடுகள் குறித்த
ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
சாதனை
மேலும் தனி ஒருவனாக ஆரண்யாவை உருவாக்கிய சரவணன் தன் பணி நிறைவடைந்ததாக
கருதி காட்டைவிட்டு வெளியேறிவிடவில்லை. தன் மனைவி மற்றும் மகளுடன் அந்த
காட்டிலேயே ஒரு வீட்டை கட்டி இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்ந்து வருகிறார்.
மேலும் சரவணனின் இத்தகைய சேவைகளை பாரட்டி தமிழக அரசு சார்பில் விழுப்புரம்
மாவட்ட கௌரவ வன உயிரியல் பதவியை கொடுத்து கௌரவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் விழுப்புரம் மாவட்ட வளர்ப்பு யானைகளின் பராமரிப்பு
குழுவின் உறுப்பினராகவும் சரவணன் இருந்து வருகிறார்.
தூய்மையான காற்று
தற்போது புதுச்சேரி மற்றும் புதுச்சேரியை சுற்றியுள்ள தமிழக பகுதி மக்கள்
தூய்மையான காற்றை சுவாசிக்க முடிகிறது என்றால் அதற்கு சரவணன்
உருவாக்கியுள்ள இந்த ஆரண்யா வனம் ஒரு மிகப்பெரிய பங்கு வகிக்கிறது என்றே
கூறலாம். மேலும் ஆரண்யா வனத்தை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் நிலத்தடி
நீர் மட்டமும் பெருமளவு பாதுகாக்கப்படுகிறது.
சென்னைக்கும் தேவை
சென்னை போன்ற பெருநகரங்களில் தற்போது தண்ணீர் பஞ்சம் நிலவி வரும்
இச்சூழலில், சரவணனை போன்று 100 ஏக்கரில் காட்டை வளர்க்க முடியாவிட்டாலும்,
ஒவ்வொருவரும் தங்களால் முடிந்தவரை ஒரு மரக்கன்றையாவது நட்டு பராமரித்து
வந்தால், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டுவது மட்டுமின்றி, தண்ணீர் பஞ்சமும்
ஏற்பட வாய்ப்பில்லை என்பதில் எவ்வித மாற்றுகருத்தில்லை.
சரவணன் போன்ற
இயற்கை பாதுகாவலர்களை பாராட்டுவதோடு மட்டுமின்றி, இனி வரும் காலங்களில்
நாமும் மரம் வளர்ப்போமென உறுதியேற்போம். இயற்கையை பாதுகாப்போம்.
குழந்தைக்குப் பெயரிடுவது பெரிய விஷயமாங்க? நிச்சயமாக! அதிலும் கணவனுக்கும் மனைவிக்கும் ஒரே விதமான பெயர் ரசனை இல்லையென்றால் பிறந்த குழந்தைக்கு பெயர் தேர்ந்தெடுப்பது பெரிய சவாலாக மாறி விடும்.
அதிலும் தனித்துவமான பெயராக இருக்கவேண்டும்; பொதுவான பெயர் வேண்டாம் என்றெல்லாம் தேட ஆரம்பித்தால் அவ்வளவுதான்! குழந்தைக்கு கூகுள் என பெயர் வைத்த பெற்றோர்... காரணத்த கேட்டா கொஞ்சம் ஷாக் ஆகிடுவீங்க... தலைப்புச் செய்தியான தம்பதி இந்தோனேஷியாவில் எல்லா கரின் (வயது 27), ஆன்டி சாஹ்யா சாபுத்ரா (வயது 31) என்ற தம்பதியர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.
பையனுக்கு என்ன பெயர் வைப்பது என்று முடிவாகாததால் 'குழந்தை பையன்' (பேபி பாய்) என்றே அழைத்து வந்துள்ளனர். அவனுக்கு அவன் தந்தை ஆன்டி சாஹ்யா பெயர் ஒன்று வைத்தார் பாருங்கள்! உலகமே அவர்களை திரும்பி பார்க்கும்படியான பெயர் அது. ஆன்டி சாஹ்யா, எல்லா கரின் தம்பதியர் பரபரப்பாக செய்திகளில் இடம் பிடித்தனர்.
தொழில் நுட்ப பெயர் மனைவி ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தபோதிலிருந்தே ஆன்டி சாஹ்யா தங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று தேடிக் கொண்டிருந்தார்.
தொழில்நுட்பம் சார்ந்த பெயராக இருக்கவேண்டும் என்ற விருப்பம் அவருக்கு இருந்தது. விண்டோஸ், ஐபோன், மைக்ரோசாஃப்ட், ஐஓஎஸ் என்ற பெயர்களெல்லாம் கூட பரிசீலனையில் இருந்தது. அவர்களது பாரம்பரியத்தை ஒட்டிய பெயராக அல்பர் டிர்கந்தார புத்ரா என்ற பெயரைக் கூட யோசித்துப் பார்த்தார் ஆன்டி சாஹ்யா.
ஆனால், அவருக்கு திருப்தி ஏற்படவில்லை.
மூன்று மாத காத்திருப்பு கடைசியாக ஆன்டி சாஹ்யா, தங்கள் மகனுக்கு பெயர் ஒன்றை தெரிவு செய்தார். அவர் தேர்ந்தெடுத்த பெயர் குடும்பத்தில் யாருக்கும் பிடிக்கவில்லை. ஆன்டியின் மனைவி எல்லா கரினுக்கும் அப்பெயர் பிடிக்கவில்லை. ஆனால், ஆன்டி பொறுமையாக மூன்று மாதங்கள் அப்பெயரின் தனித்துவத்தை விளக்கினார். அதன்பின்னர் அவர் மனைவி தங்கள் பையனுக்கு அப்பெயரை வைப்பதற்கு ஒத்துக்கொண்டார்.
உதவியின் மறுபெயர் ஆன்டி, தங்கள் மகனுக்கு 'கூகுள்' என்று பெயரிட்டுள்ளார்.
கூகுளை போல தங்கள் மகனும் எல்லோருக்கும் உதவியாக இருக்கவேண்டும் என்று பெற்றோர் விரும்பி அப்பெயரை வைத்துள்ளனராம். மற்றவர்களுக்கு பயனுள்ளவனாக தங்கள் மகன் வாழவேண்டும் என்றும் அதற்காகவே இப்பெயரிட்டோம் என்றும் பெற்றோர் கூறுகின்றனர்.
ஆகவே, அப்பையனின் பெயர் 'கூகுள்' என்பது மட்டுமே. பின்னால் எந்தப் பெயரை சேர்த்தாலும் இப்பெயரின் முக்கியத்துவம் குறைந்துவிடக்கூடும் என்பதால், துணை பெயர் எதையும் சேர்க்கவில்லை என்று ஆன்டி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 25 வருடங்களாக யாசகம் பெற்ற பெண்ணொருவரின் சொத்து மதிப்பு தொடர்பில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது. கம்பஹா நகரிலுள்ள ரயில் நிலையங்களில் 25 வருடங்களாக யாசகம் பெற்று வந்த பெண்ணுக்கு பல்வேறு சொத்துக்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
65 வயது பெண்ணுக்கு சொந்தமாக 3 வீடுகள் உள்ளதாகவும், அவரது வங்கிக் கணக்கில் பல இலட்சம் ரூபா பணம் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. குறித்த யாசகம் பெறும் பெண் ரயில்வே பொலிஸாரினால் கைது
செய்யப்பட்டிருந்தார். இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இந்த
விடயங்கள் தெரிய வந்துள்ளது.
யாசகம் பெறுவது தனது மகள்களுக்கும் தெரியும் என்றும், அவரது மருமகன்கள் நல்ல வேலைகளில் இருப்பதாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார். வயோதிப பெண் கைது செய்யப்பட்ட நிலையில் மகள்களில் ஒருவர் வந்து அவரை பார்த்துச் சென்றதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கம்பஹா மற்றும் கோட்டை ரயில் நிலையங்களில் யாசம் பெறும் அவர், நாள்
ஒன்றுக்கு சுமார் 4000 ரூபாவும் மாதத்திற்கு 150,000 ரூபா பெறுவதாகவும்
தெரிவித்துள்ளார். கடந்த 25 வருடங்களாக யாசகம் பெற்ற பணத்தில் 3 வீடுகளையும் கட்டியதாகத்
தெரிவித்துள்ளார். அவற்றில் 2 வீடுகளை அவரது மகள்களுக்கு
வழங்கியுள்ளதாகவும் மூன்றாவது வீட்டை வாடகைக்கு விட்டுள்ளதாகவும் தெரிய
வந்துள்ளது. அத்துடன் அவரது வங்கிக் கணக்கில் ஐந்து இலட்சம் ரூபா பணம்
இருப்பதும், தெரியவந்துள்ளது.
ரஷ்யாவில் வடக்கு ஆஸ்டியா என்ற பகுதியில் எஸீட்டா கோபீவா என்ற
பெண்ணுக்கு அடிவயிற்றில் அடிக்கடி வலி வந்து கொண்டே இருந்தது. தொடர்ந்து
அவர் மருத்துவர்களிடம் சிகி்ச்சை பெற்றார். முடிவில் என்ன நடந்தது
தெரியுமா?
23 வருஷத்துக்குமுன் ஆபரேஷனில் கத்தரிக்கோலை வயிற்றுக்குள் மறந்து
வைத்த டாக்டர்... இப்ப எடுத்துருக்காங்க... அந்த கொடுமையைப் பற்றித் தான்
இந்த தொகுப்பில் நாம் பார்க்கப் போகிறோம்.
23 ஆண்டுகள் வேதனை
எலீட்டா கோபீவாவுக்கு 1996 ஆம் ஆண்டு சிசேரியன் அறுவை சிகிச்சை
செய்யப்பட்டது. அதிலிருந்து அவ்வப்போது அவருக்கு அடிவயிற்றில் ஏற்பட்டது.
வலி வரும்போதெல்லாம் எலீட்டா மருத்துவர்களிடம் செல்வார்.
அவர்களும் வலி
நிவாரணி மருந்துகளை அளிப்பர். அப்போதைக்கு வலி குறையுமே தவிர முற்றிலும்
நிற்காது. மீண்டும் வலி வரும். எலீட்டா மருத்துவமனைக்குச் செல்வார். அவர்
வாழ்க்கையில் இது வாடிக்கையாகி விட்டது.
ஈரலில் பிரச்னையா?
ஈரலில் நோய் ஏற்பட்டுள்ளதால் எலீட்டாவுக்கு அடிக்கடி வயிற்றுவலி
வந்திருக்கலாம் என்ற நோக்கிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது தரும்
மருந்துகள் வலியை மரத்துப்போகச் செய்கின்றன; குணப்படுத்தவில்லை என்று
எலீட்டா தெரிவித்தார். இறுதியாக ஒரு மருத்துவர் வயிற்றுப் பகுதியை எக்ஸ்ரே
எடுக்குமாறு பரிந்துரைத்தார்.
அதிர்ச்சியளித்த எக்ஸ்ரே
எலீட்டாவுக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்த சிறப்பு மருத்துவருக்கு தன் கண்களையே
நம்ப இயலவில்லை. எலீட்டாவின் வயிற்றுக்குள் கத்தரி ஒன்று இருந்தது.
எக்ஸ்ரே எடுக்கும் அறைக்குள் எலீட்டா கத்தரிகோலை தவறுதலாக எடுத்துச்
சென்றிருக்கூடும் என்று நினைத்தார். ஆனால், உண்மையில் வயிற்றினுள்ளேதான்
கத்தரி இருந்தது.
யார் வைத்தது?
வயிற்றினுள் கத்தரிகோல் எப்படி வந்திருக்கக்கூடும் என்று மருத்துவர்கள்
கேட்டபோது எலீ்ட்டாவுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. தனக்கு 23
ஆண்டுகளுக்கு முன்பு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று
கூறினார்.
அப்போது அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் கத்தரியை மறந்துபோய்
எலீட்டாவின் வயிற்றுக்குள் வைத்துவிட்டது தெரிய வந்தது. 23 ஆண்டுகள்
தேவையில்லாமல் வேதனைப்பட்டதற்கு எலீட்டாவுக்கு நஷ்ட ஈடு வழங்கவும்
சம்மந்தபட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கவும்
பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்களின் மறதி
இது குறித்து செய்யப்பட்ட ஓர் ஆய்வில் 30 அறுவை சிகிச்சைக்கு 1 என்ற
விகிதத்தில் அறுவை சிகிச்சை மருத்துவர்கள், அறுவை சிகிச்சை உபகரணத்தையோ,
கையுறையையோ நோயாளியின் உடலினுள் தவறுதலாய் விட்டு விடுகிறார்கள் என்பது
தெரிய வந்துள்ளது. இதையெல்லாமா மறப்பீங்க டாக்டர்?
போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களைப் பற்றி நமக்குத் தெரியும்.
இன்னும் பலருக்கும் அதிலிருந்து எப்படி வர வேண்டும் என்பதற்கான வழிகளும்
தெரியும்.
ஆனால் தற்பொழுது இளைஞர்களும் குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படும்
டிஜிட்டல் போதை பழக்கத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இந்த டிஜிட்டல்
போதை பழக்கத்திலிருந்து எப்படி உங்கள் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும்
என்று தெரியுமா?
மிகவும் ஆபத்தான டிஜிட்டல் போதை பழக்கம்
குடிபோதை பழக்கத்திற்கு அடிமையாகுவதைக் காட்டிலும், டிஜிட்டல் போதை
பழக்கத்திற்கு அடிமையாகுவதை மிகவும் ஆபத்தானது என்கின்றனர் மனநல
மருத்துவர்கள். இடைவிடாது, தொடர்ச்சியாக ஸ்மார்ட்போன் அல்லது கேட்ஜெட்களை
பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் தான் இந்த டிஜிட்டல் போதை பழக்கம்
உண்டாவதாக அறிக்கையின் முடிவுகள் தெரிவிக்கின்றது.
மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் ஆபத்து
டிஜிட்டல் போதை பழக்கத்திற்குப் பாதிக்கப்பட்டவர்களால், டிஜிட்டல்
கேட்ஜெட்கள் இல்லாமல் சில மணி நேரங்கள் கூட இருக்க முடியாதாம்.
பாதிக்கப்பட்ட இவர்கள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அதிகம்
பாதிப்படைந்து ஆபத்தான நிலைகளுக்குத் தள்ளப்படுகின்றனர் என்று மனநல
மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்கொலைக்குத் தூண்டப்படுவது
இளைஞர் முதல் குழந்தைகள் வரை மனமுடைந்து தற்கொலை செய்வது, தற்கொலைக்குத்
தூண்டப்படுவது, கோபமடைந்து கொலை செய்வது போன்ற பிரச்சனைகள் அனைத்தும் இந்த
பழக்கத்தினால் தான் உண்டாகிறது என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
டிஜிட்டல் போதையினால் உண்டான மரணங்கள்
உதாரணத்திற்குச் சென்ற வாரம் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்கு
தாய்யான 24 வயது பெண், டிக் டாக் செயலியைப் பயன்படுத்த வேண்டாம் என்று
கணவன் கண்டித்ததற்குத் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை நாம் அறிவோம்,
அதேபோல் 16 வயது இளைஞர் ஒருவர் தொடர்ந்து 6 மணி நேரம் பப்ஜி கேமை விளையாடி
மாரடைப்பு வந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பற்றியும் நாம் அறிவோம்.
அளவுக்கு மீறினால் எல்லாமே நஞ்சு
தான்
இது போன்ற சம்பவங்களுக்கு முக்கிய காரணம், டிஜிட்டல் கேட்ஜெட்களுக்கு அடிமை
ஆகுவது தான். பொழுதுபோக்கிற்காக சில நிமிடங்கள் பயன்படுத்தி விளையாட
வேண்டிய பழக்கத்தை, பல மணி நேரம் தொடர்ச்சியாக விளையாடி அதற்கு அடிமையாகும்
நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
பெரிதும் பாதிக்கப்படும் குழந்தைகள்
அதிக அளவில் மனநல ரீதியாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் இந்த பழக்கத்தினால்
பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்த டிஜிட்டல் போதை பழக்கத்திலிருந்து
நம் குழந்தைகளை வெளியில் கொண்டு வருவதற்கு நாம் முதலில் செய்ய வேண்டியது
என்ன என்றால்? முதலில் அதனை கண்டறிவது தான் என்கின்றனர் மருத்துவர்கள்.
டிஜிட்டல் போதைக்கு அடிமையாகி உள்ளவரை எப்படிக் கண்டறிவது?
முதலில் இவர்கள் டிஜிட்டல் கேட்ஜெட்கள் இல்லாமல் எங்கும் செல்ல
மாட்டார்கள், குளிக்கச் சென்றால் கூட இவர்களுடன் இவர்களின் கேட்ஜெட்கள்
பின்தொடரும்.
ஒரு நாளில் குறைந்தது 4 மணி நேரம் கூட இவர்களால் ஸ்மார்ட்போன் மற்றும்
கேட்ஜெட்கள் இல்லாமல் இருக்க முடியாது.
அவர்களின் வழக்கமான வேலைகளைக் கூடச் செய்ய மறுப்பார்கள்.
- சரியான தூக்கமில்லாமல் ராக்கோழியாக இருப்பார்கள்.
கேட்ஜெட்களை அதிகம் பயன்படுத்த வேண்டாம் என்று அன்பாகச் சொன்னால் கூட
எரிச்சல் மற்றும் கோபம் கொள்வார்கள்.
பெற்றோருக்குத் தெரியாமல் அல்லது பொய் சொல்லி கேட்ஜெட்களை
பயன்படுத்துவார்கள்.
அவர்களின் அன்றாட வேலைகளைப் புறக்கணிப்பார்கள்.
பெற்றோர், நண்பர்கள் என யாரிடமும் நெருங்கிப் பழகமாட்டார்கள்.
மனச்சோர்வு, பதட்டம், வெறித்தனமான அறிகுறிகள், தூக்கமின்மை, எரிச்சல்
மற்றும் கவனம் குறைவு போன்ற அறிகுறிகள் இவர்களிடத்தில் காணப்படும்.
டிஜிட்டல் போதை பழக்கத்திலிருந்து இவர்களை எப்படி மீட்பது?
முதலில் பெற்றோர்கள் நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டும். இன்றைய
காலத்தில் பெற்றோர்களே நீண்ட நேரம் ஸ்மார்ட்போன் மற்றும் கேட்ஜெட்களை
பயன்படுத்துகின்றனர். குழந்தைகளின் நலனிற்காக அப்படி இல்லாமல் இருக்க
வேண்டும்.
குழந்தைகளுடன் அன்பாகப் பேசி, அவர்களுக்கு எடுத்துச் சொல்லி வேறு
பொழுதுபோக்கிற்கான வழிகளை ஏற்படுத்த வேண்டும்.
வெளியில் சென்று விளையாட ஊக்குவிக்க வேண்டும்.
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வெளியில் சென்று வர வேண்டும்.
குறைந்தது ஒரு வாரத்திற்கு ஒரு முறையாவது தொடர்ச்சியாக 4 மணி நேரம்
கேட்ஜெட்கள் எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும். இம்முறையை டிஜிட்டல்
டீடாக்ஸ்(digital detox) என்பார்கள்.
தாமதிக்க வேண்டாம்!
இந்த முறைகளைப் பின்பற்றி டிஜிட்டல் போதை பழக்கத்திற்கு அடிமையான
குழந்தைகள் மற்றும் இளைஞர்களை மீட்டுக் கொண்டுவர இயலும் என்று
மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல் நீங்கள் அன்பாகக் கூறியும்,
கண்டித்தும் உங்கள் குழந்தைகள் உங்களிடம் பொய் சொல்லி அல்லது உங்களுக்குத்
தெரியாமல் தொடர்ச்சியாக டிஜிட்டல் கேட்ஜெட்களை தொடர்ந்து பயன்படுத்தி
வந்தால், தாமதிக்காமல் நல்ல மருத்துவரை அணுகி ஆபத்திலிருந்து அவர்களைக்
காப்பாற்றுங்கள் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் பாரதி நகர் 8-வது குறுக்கு தெருவை
சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 35). தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி
சண்முக சுந்தரி. திருநெல்வேலியை சேர்ந்தவர். சில மாதங்களுக்கு முன்பு தான்
இவர் களுக்கு திருமணமானது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு
சண்முகசுந்தரி தனது தாய் வீட்டிற்கு சென்று வி்ட்டார். இதனால் புருஷோத்தமன்
மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
நேற்று முன்தினம் இரவு புருஷோத்தமன் ஓட்டலில் இருந்து புரோட்டா வாங்கிக்
கொண்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் தனது மனைவியிடம் செல்போனில் பேசியபடியே
அதை சாப்பிட்டார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது தொண்டையில் புரோட்டா
சிக்கியது. இதனால் தொடர்ந்து பேச முடியாமல் புருஷோத்தமனுக்கு மூச்சுத்
திணறல் ஏற்பட்டது. உடனே எதிர்முனையில் பேசிய அவரது மனைவி செல்போன் இணைப்பை
துண்டித்து விட்டு மீண்டும் அழைத்தார். ஆனால் புருஷோத்தமனால் செல்போனை
எடுத்து பேச முடியவில்லை.
இதனால் ஏதோ விபரீதம் நடந்துள்ளது என்று சுதாரித்த சண்முகசுந்தரி இது
தொடர்பாக முத்தியால்பேட்டையில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
அவர்கள் உடனடியாக புருஷோத்தமனின் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது
வீடு உள்புறமாக பூட்டி கிடந்ததை பார்த்ததும் கதவை உடைத்து உள்ளே சென்று
பார்த்தனர்.
அங்கு புருஷோத்தமன் மயங்கி கிடந்தார். அவர்கள் அவரை மீட்டு
சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை
பரிசோதித்த டாக்டர்கள், புருஷோத்தமன் செல்போனில் பேசிய படியே சாப்பிட்டதால்
புரோட்டா தொண்டையில் சிக்கி மூச்சு திணறி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் குளிக்கிறதை கேமரா மூலமாக வீடியோ எடுத்திருக்கிறார் மிஸ்டர்
பச்சையப்பன்.. வயசு 55.. செய்யும் தொழில் இந்து அறநிலையத்துறை மண்டல இணை
ஆணையர்! யாரா இருந்தால் என்ன, கேடு கெட்ட செயலை செய்ததால் பச்சையப்பனை
தூக்கி உள்ளே வைத்துவிட்டது போலீஸ்!
மதுரை, தெப்பக்குளம் பகுதியை சேர்ந்தவர்தான் இந்த பச்சையப்பன்.
இந்து
அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர். கடந்த ஜுன் 28ம் தேதி, சதுரகிரி
மலைக்கோயிலில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது.
இந்த பணியில் திண்டுக்கல் இந்து அறநிலையத்துறையில் பணியாற்றும் ஒரு பெண்
அதிகாரி ஈடுபட்டிருந்தார். பச்சையப்பனும் அங்கு பணி நிமித்தமாக சென்றார்.
பேனா
அப்போது கோயில் பகுதியில் உள்ள பாத்ரூமில் அந்த பெண் அதிகாரி குளிக்க
சென்றிருக்கிறார். அப்போது பாத்ரூமில் ஆணியில் ஒரு பேன்ட் தொங்கி
இருந்திருக்கிறது. அந்த பேன்ட்டில் சொருகி இருந்த ஒரு பேனா ரெட் கலரில்
எரிந்திருக்கிறது.
குளியல்காட்சிகள்
இதனால் சந்தேகமடைந்த அந்த பெண், பேனாவை எடுத்து பார்த்தால், அது பேனா
இல்லை, பென் கேமரா என்பதும், அவ்வளவு நேரமாக குளித்த காட்சி எல்லாம்
அதற்குள் பதிவாகி இருந்ததும் தெரியவந்தது. இதைவிர வேறு சில ஆபாச வீடியோவும்
அதில் இருந்ததாம்.
அது மட்டுமில்லை.. அந்த பேன்ட் பச்சையப்பனுடையது
என்றும் தெரியவந்தது. உடனடியாக சாப்டூர் போலீசிலேயே பெண் புகார் தந்தார்.
போலீசாரும் பச்சையப்பன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
காஸ்ட்லி காமிரா
இந்நிலையில், விடிகாலை வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த பச்சையப்பனை
போலீசார் அதிரடியாக கைது செய்து எஸ்பி ஆபீசில் வைத்து விசாரணையை
ஆரம்பித்தனர். அந்த பென் கேமரா.. ரொம்ப காஸ்ட்லியாம். அதில் எது ரெக்கார்ட்
ஆனாலும், செல்போனில் லைவ்-ஆக பார்க்க முடியுமாம். இதையெல்லாம்
கேள்விப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை அதிர்ச்சியில் உள்ளது.
தீவிர விசாரணை
கைதான பச்சையப்பன் சாதாரண ஆள் கிடையாது. சவுடார்பட்டியில், இந்து சமய
அறநிலையத்துறைக்கு சொந்தமான மீனாட்சியம்மன் கோயிலில் பழமையான ஐம்பொன்
சிலைகள் கடத்தலில் தொடர்பு உள்ளவராம்.
இதே சதுரகிரி கோயில் உண்டியல் வருமானத்தை எண்ணும்போது பணத்தில் கையாடலும்
செய்துள்ளாராம். போன வருஷம் தன் பிறந்த நாளுக்கு அதிகாரிகளை
கட்டாயப்படுத்தி வரவழைத்து காஸ்ட்லி கிப்ட் கேட்டும் வாங்கி இருக்கிறாராம்.
இவ்வளவு ஆட்டம் போட்ட பச்சையப்பன் இன்று களி தின்று, கம்பி எண்ண போகிறார்!