வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: காஞ்சிபுரத்தில் தாய், மகள் இருவர் துாக்கிலிட்டு தற்கொலை | Suside at Kancheepuram
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, February 16, 2020

காஞ்சிபுரத்தில் தாய், மகள் இருவர் துாக்கிலிட்டு தற்கொலை | Suside at Kancheepuram

காஞ்சிபுரம் மாவட்டம், சின்ன காஞ்சிபுரம், டோல்கேட் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மனைவி சீதா, 65. இவரது மகள் தனலட்சுமி, 30. மகன் பாலாஜி, 28; தனியார் நிறுவன ஊழியர்; தனியாக வசிக்கிறார்.சீனிவாசன், சில ஆண்டுகளுக்கு முன் காலமாகி விட்டார். 

தாயும், மகளும் தனியாக வசித்தனர்.இருவரும், பல ஆண்டுகளாக தனிமையில் இருந்ததால், மன நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்கள், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் பழகுவதும் இல்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, வீட்டுக்கு சென்ற பாலாஜி, அம்மா, அக்காவை பார்த்து விட்டு, பணிக்கு சென்றார். மாலையில், வீட்டுக்குசென்றபோது, வீட்டின் கதவு உள்பக்கம் பூட்டியிருந்தது. 

இவரது தகவலையடுத்து வந்த விஷ்ணு காஞ்சி போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்றபோது, தாய், மகள் என, இருவரும், துாக்கில் தொங்கிய நிலையில் இருப்பது தெரிய வந்தது.இறந்தவர்கள் சடலத்தை மீட்ட போலீசார், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment