வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சோத்துப்பாக்கம், மேல்மருவத்தூர் பகுதிகளில் ஆட்டோ மூலம் விழிப்புணர்வு மேற்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள்| Chithamur BDOs conducting Corona Awareness Program in Sothupakkam and Melmaruvathur
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, March 26, 2020

சோத்துப்பாக்கம், மேல்மருவத்தூர் பகுதிகளில் ஆட்டோ மூலம் விழிப்புணர்வு மேற்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள்| Chithamur BDOs conducting Corona Awareness Program in Sothupakkam and Melmaruvathur

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது மேல்மருவத்தூர் மற்றும் சோத்துப்பாக்கம் ஊராட்சி.

இந்த ஊராட்சிகளில் பொதுமக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். மேலும், மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி வழிபாட்டுத்தலம் போன்ற முக்கிய பகுதிகள் உள்ளன. 
இங்குள்ள பொதுமக்களுக்கு கொரோனா வைரஸிலிருந்து காத்துக்கொள்ள, சித்தாமூர் வட்டார வளர்ச்சி  அலுவலர்கள் பரணி மற்றும் நிர்மலன் ஆகியோர் வட்டார ஒருங்கினைப்பாளர் சுரேஷ், மேல்மருவத்தூர் மற்றும் சோத்துப்பாக்கம் ஊராட்சி செயலர்களுடன் இணைந்து துண்டு பிரசுரங்கள் வழங்கியும், ஆட்டோ மூலம் அறிவிப்பு அளித்தும்  நேற்று (25.03.2020) விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 
நேற்றைய தினம் திறக்கப்பட்டிருந்த அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகளிலும் வீடுகளுக்கும் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

No comments:

Post a Comment