செங்கல்பட்டு
மாவட்டம் , திருக்கழுக்குன்றம் தாலுக்காவில்
1429-ல் பசலிக்கான வருவாய் தீர்வாயக் கணக்கு
முடிப்பு பணி மற்றும் ஜமாபந்தி
துவங்கியது.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அ.ஜான்லூயிஸ் திருக்கழுக்குன்றம் தாலுக்கா அலுவலகத்தில் ஆய்வு மேற்க்கொண்டு தாலுக்காவிற்குட்பட்ட
மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் ஆகிய குறுவட்டங்களுக்கான வருவாய்
கணக்குகளை பார்வையிட்டார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் குறிப்பிடுகையில்
நடப்பு பசலி (1429) வருவாய் தீர்வாயக் கணக்கு
முடிப்பு பணி மற்றும் ஜமாபந்தி
29.06.2020 முதல் அடுத்த மாதம் 15.07.2020 வரை
நடைபெறுகிறது.
தாலுக்காவிற்குட்பட்ட
பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்த
மனுக்களை மேற்க்கண்ட தினங்களில் இ-சேவை மையங்கள்
அல்லது URL http://gdp.tn.gov.in/Jamabandhi
என்ற இணையதளம் மூலமாகவும் பதிவேற்றம் செய்யலாம் என கேட்டுக் கொண்டார்.
வட்டாட்சியர்
தங்கராஜ், மண்டல துணை வட்டாட்சியர்
கார்த்திக்ரகுநாத், தலைமையிடத்து
துணை வட்டாட்சியர் சக்திவேல், வட்ட துணை ஆய்வாளர்
பாஸ்கரன், வருவாய் ஆய்வாளர்கள் மாரியம்மாள்,
ஜேம்ஸ், கிராம நிர்வாக அலுவலர்கள்
பலர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment