காஞ்சிபுரம் மாவட்டம்,
உத்திரமேரூர் வட்டத்தில் மேலும் 6 கிராமங்களுக்கு உயிர் பவுண்டேஷன் மூலமாக கொரோனா நிவாரண
உதவிப் பொருட்கள் 22.08.2020 அன்று வழங்கப்பட்டது.
மணல்மேடு, ஒழுகரை,
தளவாரம்பூண்டி, மருத்துவம்பாடி, மருதம், வினோபா நகர் ஆகிய கிராமங்களில் கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவினால்
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள 300 குடும்பத்தினர்களுக்கு சென்னை சேலையூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும்
உயிர் பவுண்டேஷன் மூலமாக அதன் நிறுவனர் சி.சி.ஷெலின் ரூபன் மற்றும் மேலாளர் கிறிஸ்டினா
ஜஸ்டின் ஆகியோர் தலைமையில், திட்ட ஒருங்கினைப்பாளர் அரங்கநாதன் முன்னிலையில் வழங்கப்பட்டது.
பொதுமக்கள் சமூக
இடைவெளிவிட்டு நிவாரணப் பொருட்களை பெற்றுச் சென்றதோடு உயிர் பவுண்டேஷனுக்கு தங்களது
நன்றிகளை தெரிவித்தனர். ஏற்கெனவே, உத்திரமேரூர் வட்டத்தில் இந்த தொண்டு நிறுவனம் பல்வேறு
கிராமங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment