வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: உத்திரமேரூர் வட்டத்தில் உயிர் பவுண்டேஷன் மூலம் மேலும் 6 கிராமங்களில் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் | Uyir Foudation giving Corona Relief at Uthiramerur Taluk
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, August 22, 2020

உத்திரமேரூர் வட்டத்தில் உயிர் பவுண்டேஷன் மூலம் மேலும் 6 கிராமங்களில் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் | Uyir Foudation giving Corona Relief at Uthiramerur Taluk


காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டத்தில் மேலும் 6 கிராமங்களுக்கு உயிர் பவுண்டேஷன் மூலமாக கொரோனா நிவாரண உதவிப் பொருட்கள் 22.08.2020 அன்று வழங்கப்பட்டது.
மணல்மேடு, ஒழுகரை, தளவாரம்பூண்டி, மருத்துவம்பாடி, மருதம், வினோபா நகர் ஆகிய கிராமங்களில் கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள 300 குடும்பத்தினர்களுக்கு சென்னை சேலையூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் உயிர் பவுண்டேஷன் மூலமாக அதன் நிறுவனர் சி.சி.ஷெலின் ரூபன் மற்றும் மேலாளர் கிறிஸ்டினா ஜஸ்டின் ஆகியோர் தலைமையில், திட்ட ஒருங்கினைப்பாளர் அரங்கநாதன் முன்னிலையில் வழங்கப்பட்டது.
பொதுமக்கள் சமூக இடைவெளிவிட்டு நிவாரணப் பொருட்களை பெற்றுச் சென்றதோடு உயிர் பவுண்டேஷனுக்கு தங்களது நன்றிகளை தெரிவித்தனர். ஏற்கெனவே, உத்திரமேரூர் வட்டத்தில் இந்த தொண்டு நிறுவனம் பல்வேறு கிராமங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment