வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2020-06-21
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, July 02, 2020

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? பிளஸ் 2 ரிசல்ட் எப்போது?தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்வு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் | TN 12th Result 2020 | Vil Ambu News

தமிழகத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.




ஜூலை மாதம் முதல் வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று முன்னதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்த நிலையில், தற்போது தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.

இது குறித்து கோபிச்செட்டிப்பாளையம் அருகே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன்,  12-ம் வகுப்பு தேர்வு முடிவை திட்டமிட்டபடி வெளியிடுவதில் சிக்கல் உள்ளது. முதல்வர் பழனிசாமியிடம் ஆலோசனை நடத்திய பிறகே 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவது குறித்து முடிவு செய்யப்படும்.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் முதல் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களில் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதுடன் மாணவர்களுக்கு தேர்ச்சியும் அளிக்கப்பட்டுள்ளது. 


இதனைபோல், தமிழகத்திலும், முதலில் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்கள் அனவைரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை அரசு நடத்த தீவிரமாக ஈடுபட்ட நிலையில், கொரோனா தாக்கம் அதிகரித்தால், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், 11-ம் வகுப்பு ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.

இருப்பினும், கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஜூன் மாதத்தில் திறக்க வேண்டிய பள்ளிகள் ஜூலை மாதம் பிறந்தப் பின்னும் திறக்கப்படவில்லை. மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பது தாமதமாகி வருகிறது. இருப்பினும், பள்ளி திறந்ததும் மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பதற்காக நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.  12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை தற்போது வெளியிடுவதில் சிக்கல் உள்ளது. மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதிய பிறகே முடிவுகளை வெளியிட முடியும். மீண்டும் பேருந்து இயக்கினால் மட்டுமே மாணவர்களை தேர்வு எழுத வைக்க முடியும் என்றார். 

ஜூலை முதல் வாரத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் என ஏற்கனவே கூறியிருந்தார். முதல்வரிடம் ஆலோசித்த பிறகே 12-ம் வகுப்பு தேர்வு முடிவு பற்றி அறிவிக்கப்படும் என்று தற்போது கூறியுள்ளார்.

மேலும், அனைத்துத் துறை ஆலோசனைக்கு பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் முடிவெடுப்பார். மருத்துவத்துறை, வருவாய்த்துறை, பெற்றோர்களிடம் கருத்துக் கேட்ட பின்பே பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். நிலைமை சரியான பின்பே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும்; பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம். தற்போதைக்கு பள்ளிகளை திறப்பதற்கான சூழல் இல்லை என்றும் தெரிவித்தார்.

Wednesday, July 01, 2020

தெரிஞ்சிகோங்க..! ஏற்கெனவே டிக்டாக், ஷேர் இட் உள்ளிட்ட ஆப்கள் டவுன்லோட் செய்திருந்தால் அவை வழக்கம் போல் இயங்குமா? மத்திய அரசு விளக்கம் | Tiktok and 59 China Apps Banned | Indian Govt Explanation | Vil Ambu News

இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடியது என்ற காரணத்தால் டிக்டாக், யூசி ப்ரோசர் உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.



சீன ஆப்களை தடை செய்வது தொடர்பாக மத்தியஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘சில ஆப்கள் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஸ் பயன்படுத்தும் மொபைல்போன் பயனாளர்களின் தகவல்களை தவறான முறையில் சேகரித்து இந்தியாவுக்கு வெளியே இருக்கும் சர்வர்களில் சேமித்துவைப்பதாக பலதரப்பிலிருந்தும் புகார்கள் வந்தன. சேகரிக்கப்படும் தகவல்களின் தொகுப்பு தேசத்தின் பாதுகாப்புக்கும், இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக உள்ளது.


இது இந்தியாவின் இறையான்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தாக இருப்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டிய தேவை உள்ளது. தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சகம், தகவல்தொழில்நுட்பச் சட்டம் 69ஏவின் அடிப்படையில் 59 ஆப்கள் தடைசெய்யப்படுகின்றன’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


டிக்டாக், ஹெலோ, ஷேர் இட், கேம் ஸ்கேனர் என்று கோடிக்கணக்கான இந்தியர்கள் தினசரி பயன்படுத்தும் செயலிகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த தடை குறித்த சந்தேகங்களும் எழுந்துள்ளன. அதாவது, புதிதாக டவுன்லோடு செய்ய முடியாது என்றால் பழைய யூசர்கள் தொடர்ந்து மேற்கண்ட செயலிகளை பயன்படுத்தலாமா? போன்ற கேள்விகள் எழுந்தன.


தடை தொடர்பாக சீனாவைச் சேர்ந்த பைடன்ஸ் நிறுவனம் (டிக்டாக் & ஹலோ செயலிகளை நிர்வகிக்கும் நிறுவனம்) கூறுகையில், மத்திய அரசின் தடை புதிதாக செயலிகளை டவுன்லோடு செய்ய மட்டுமே. பழைய யூசர்கள் தொடர்ந்து செயலியை பயன்படுத்தலாம் என்று தெரிவித்தது. மேலும், மத்திய அரசின் தடை தற்போதைய வளர்ச்சியை கட்டுப்படுத்தும் என்றும் கூறியிருந்தது.
 

ஆனால், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தில், கூகுள் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் இருந்தும் மேற்கண்ட செயலிகள் நீக்கப்படும். மேலும், இந்த 59 செயலிகளை பயன்படுத்த முடியாதவாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் (ஜியோ, ஏர்டெல், வோடாபோன், பி.எஸ்.என்.எல் உள்ளிட்ட நிறுவனங்கள்) தகவல் தெரிவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், எந்த வகையிலும் மேற்கண்ட செயலிகளை பயன்படுத்த முடியாது.

Tuesday, June 30, 2020

திருக்கழுக்குன்றம் தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி - மாவட்ட ஆட்சியர் கிராம கணக்குகளை ஆய்வு | Thirukazhukundram Jamabandhi News | Vil Ambu News


செங்கல்பட்டு மாவட்டம் , திருக்கழுக்குன்றம் தாலுக்காவில் 1429-ல் பசலிக்கான வருவாய் தீர்வாயக் கணக்கு முடிப்பு பணி மற்றும் ஜமாபந்தி துவங்கியது
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் .ஜான்லூயிஸ் திருக்கழுக்குன்றம் தாலுக்கா அலுவலகத்தில் ஆய்வு மேற்க்கொண்டு தாலுக்காவிற்குட்பட்ட மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் ஆகிய குறுவட்டங்களுக்கான வருவாய் கணக்குகளை பார்வையிட்டார்


இது குறித்து மாவட்ட ஆட்சியர் குறிப்பிடுகையில் நடப்பு பசலி (1429) வருவாய் தீர்வாயக் கணக்கு முடிப்பு பணி மற்றும் ஜமாபந்தி 29.06.2020 முதல் அடுத்த மாதம் 15.07.2020 வரை நடைபெறுகிறது

தாலுக்காவிற்குட்பட்ட பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்த மனுக்களை மேற்க்கண்ட தினங்களில் -சேவை மையங்கள் அல்லது URL http://gdp.tn.gov.in/Jamabandhi என்ற இணையதளம் மூலமாகவும் பதிவேற்றம் செய்யலாம் என கேட்டுக் கொண்டார்

வட்டாட்சியர் தங்கராஜ், மண்டல துணை வட்டாட்சியர் கார்த்திக்ரகுநாத்,   தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சக்திவேல், வட்ட துணை ஆய்வாளர் பாஸ்கரன், வருவாய் ஆய்வாளர்கள் மாரியம்மாள், ஜேம்ஸ், கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Friday, June 26, 2020

தமிழக முதல்வரே எங்களுக்கும் ஆல் பாஸ் போடுங்கள்.. மும்பை மாணவி உருக்கமான கடிதம் | Tamilnadu CM News | Vil Ambu News


தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்ததுடன், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
இதேபோல மகாராஷ்டிரா போன்ற பிற மாநிலங்களில் இருந்தபடி  தமிழக பாடத்திட்டத்தின்படி பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்றுமும்பை விழித்தெழு இயக்கம்கோரிக்கை விடுத்தது. இதற்கு ஆதரவாக கனிமொழி எம்.பி., நாம் தமிழர் கட்சி அமைப்பாளர் சீமான், எம்.பி. ஜோதிமணி ஆகியோரும் அறிக்கை வெளியிட்டனர். ஆனால், இதுவரை அந்தக் கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிறைவேற்றவில்லை.
 
இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த தமிழ் மாணவிகள் சிலர் தமிழக முதல்வருக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். மும்பை தாராவி கம்பன் உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் .அனிதா என்ற மாணவி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
 
’’தமிழக முதல்வருக்கு வணக்கம். ஐயா, தமிழ்நாட்டில் அறிவித்ததைப் போலவே மும்பையில் தமிழ் வழியில் பத்தாம் வகுப்புப் பயிலும் மாணவர்களாகிய எங்களையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும்.

மும்பையில் அடுத்த மாதம் 11-ம் வகுப்பு தொடங்க இருக்கிறது. எங்களுக்கு இதுவரையில் தமிழக அரசு 10-ம் வகுப்புத் தேர்வையும் நடத்தவில்லை. தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கவில்லை.
 
இதனால் நாங்கள் 11-ம் வகுப்பில் சேர முடியுமா, ஒரு வருடம் வீணாகி விடுமா என்று தெரியவில்லை. இப்போது இதனால் எங்களுக்கு, தமிழ் வழியில் படிக்காமல் இந்தி, மராத்தி வழியில் படித்து இருக்கலாமோ என்கிற எண்ணம் வருகிறது. கரோனா பயத்துடன் சேர்ந்து இந்த பயத்திலும் இருக்கிறோம்’’. இவ்வாறு அந்தக் கடிதத்தில் மாணவி எழுதியிருக்கிறார்.



இதேபோன்ற கடிதத்தை செ.நர்மதா, து.சந்தியா ஆகிய மாணவிகளும் தமிழக முதல்வருக்கு எழுதியுள்ளனர்.