வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2020-07-26
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, August 01, 2020

இனி 1000 அபராதம் | எதற்கு...? | 1000 rupees penalty for using less quality helmets

இந்தியாவில் இரு சக்கர வாகனங்களில் ஏற்படும் சாலையில் விபத்து குறித்து அரசாங்கம் ஒரு புதிய விதியை செயல்படுத்தப் முடிவெடுத்துள்ளது. 


காவல் துறை விதிக்கும் அபாரதத்துக்கு பயந்து மக்கள் தலையில் மலிவான மற்றும் உள்ளூர் தலைக்கவசங்களை அணிந்துகொண்டு பயணம் செய்து வருகிறார்கள்.


இதன் காரணமாக விபத்தில் தலை உடைந்து, தலையில் ஆழமான காயம் காரணமாக மனிதனின் உயிருக்கு ஆபத்தான நிலையில் தள்ளப்படுகிறார்கள் சிலர் மரணமடைந்து உள்ளனர்.

ஒவ்வொரு நாளும் தரமில்லாத ஹெல்மெட் மற்றும் ஹெல்மெட் இல்லாமல் வாகனத்தில் செல்பவர்கள் 28 பைக் சாலை விபத்துக்களில் பலியாகின்றனர்.

Local, unbranded தலைக்கவசங்களைப் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

புதிய சட்டத்தின்படி, உள்ளூர் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுபவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
இது தவிர, உள்ளூர் தரமில்லாத உத்தரவாதம் இல்லாத ஹெல்மெட் தயாரிப்பவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் சிறை தண்டனையும் வழங்கப்படும்.

பைக் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பான ஹெல்மெட் வழங்குவதற்காக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இதை முதல் முறையாக BSI பட்டியலில் சேர்த்துள்ளது. ஜூலை 30 ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில் சாலை பாதுகாப்பு அமைச்சகம் பரிந்துரைகளையும் கோரியுள்ளது.

இதை விதி 30 நாட்களுக்குப் பிறகு இந்த புதிய விதி நடைமுறைக்கு வரும். புதிய விதி நடைமுறைக்கு வந்த பிறகு, ஹெல்மெட் உற்பத்தி நிறுவனங்கள் BSI சான்றளிக்கப்பட்ட தலைக்கவசங்களை மட்டுமே தயாரித்து விற்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய தரத்தில், ஹெல்மட்டின் எடை ஒன்றரை கிலோவிலிருந்து ஒரு கிலோ 200 கிராம் வரை குறைக்கப்பட்டுள்ளது. பிஐஎஸ் அல்லாத ஹெல்மெட் உற்பத்தி குற்றமாகக் கருதப்படும் என அறிக்கையில் தெரிவித்துள்ளது.

30 மணி நேரத் தளர்வில்லா முழு ஊரடங்கு | விவரம் உள்ளே | 30 hours full Lock down Sunday | Vil Ambu News

இன்றிரவு 12 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை 30 மணி நேரத் தளர்வில்லா முழு ஊரடங்கு அமலாகிறது.




மருத்துவம் சார்ந்த காரணங்கள் தவிர வேறு எதற்கும் பொதுமக்கள் வெளியில் வரக்கூடாது எனப் போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை இன்று வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு:

''சென்னை பெருநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆகஸ்டு 01 (இன்று) இரவு 12 மணி முதல் ஆகஸ்டு 03 (திங்கட்கிழமை) காலை 6 மணி வரை தமிழக அரசு எந்தவிதத் தளர்வும் இன்றி முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.


அதன்படி ஆகஸ்டு 02 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது.

அநாவசியமாக வீட்டை விட்டு வெளியே வருவதையும், தெருக்களில் சமூக இடைவெளியின்றி கூட்டமாகக் கூடி நிற்பதையும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டுமே தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படுகிறது.


இதைத் தவிர வேறு எந்தவித வாகனங்களுக்கும் அனுமதி இல்லை.
மீறிவரும் வாகனங்கள் மீது குற்றவியல் நடைமுறைப் பிரிவு 144-ன் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இதற்காக நகரம் முழுவதும் 193 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

இது தொடர்பாக சந்தேகங்கள் இருப்பின் போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறை எண்கள் 044-23452330/ 044-23452362 அல்லது 90031 30103 எனும் எண்களைத் தொடர்பு கொண்டு விளக்கம் பெற்றுக்கொள்ளலாம்'.
இவ்வாறு சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.