வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தாத்தாவை தாக்கியதால் ஆத்திரம்.. தந்தை உள்பட இருவரை கொலை செய்த மகன்கள் கைது..
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, January 23, 2019

தாத்தாவை தாக்கியதால் ஆத்திரம்.. தந்தை உள்பட இருவரை கொலை செய்த மகன்கள் கைது..

நெல்லை மாவட்டம், மேலச்செவலில் குடும்ப தகராறு காரணமாக மகன்களே தந்தை மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 


நெல்லை மாவட்டம், மேலச்செவல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லக்குட்டி. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த செல்விக்கும் திருமணமாகி குழந்தைகள் இருக்கிறது. 

ஆனால் குடும்பத் தகராறு காரணமாக செல்வி குழந்தைகளுடன் கடந்த 15 ஆண்டுகளாக உள்ளூரில் உள்ள தந்தை வீட்டில் வசித்து வந்தார். ஆனால் தொடக்கம் முதலே தனது மனைவியை தன்னோடு சேர்த்து வைக்க வேண்டும் என்று செல்லக்குட்டி, தனது மாமனார் மாடக்கண்ணு வீட்டிற்கு சென்று தகராறு செய்து வருவது வழக்கமாக இருந்திருக்கிறது. இதே பிரச்சனைக்காக தனது மாமனாரை கொலை செய்ய முயன்றதாகவும் செல்லக்குட்டி மீது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கிறது.


மதுபோதையில் 

இந்தப் பிரச்சனையில் செல்லக்குட்டியின் நண்பர் சுப்பு குட்டியும் இணைந்து செயல்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை வழக்கமாக செல்ல குட்டியும், சுப்புக்குட்டியும் இணைந்து குடிபோதையில் சென்று மாடக்கண்ணு வீட்டில் தகராறு செய்து இருக்கின்றனர்.


அரிவாள் வெட்டு  

அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாடக்கண்ணுவை தாக்கி இருக்கின்றனர். இந்த நிலையில் வேலைக்கு சென்று வீடு திரும்பிய செல்லகுட்டியின் மகன்கள் இருவரும் சம்பவம் அறிந்து மற்றும் சிலருடன் சேர்ந்து செல்ல குட்டி மற்றும் சுப்புக் குட்டியை அரிவாளால் தாக்கியுள்ளனர்.


பலி  

இந்த நிலையில் நேற்று இரவே சுப்புக்குட்டி மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதே போன்று செல்லக்குட்டி அரிவாளால் தாக்கப்பட்ட நிலையில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.


மருத்துவக் கல்லூரி  

இந்த நிலையில் இன்று காலை சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் செல்லக்குட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


காவல் துறை  

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேரன்மகாதேவி உதவி காவல் கண்காணிப்பாளர் ஆசை ராவத் விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக செல்லக்குட்டியின் மகன்கள் இருவர் உட்பட சிலரை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment