பா.ஜ.க செங்கை மாவட்ட ஊடக பிரிவு செயலாளராக நியமித்தமைக்கு மோகல்வாடி என்.மணிகண்டன் நன்றி தெரிவித்தார்.
பா.ஜ.க.வில் சாதாரண தொண்டனாக இருந்த நான் மக்கள் நலனுக்காக பாடுபட்டதினால் தற்போது இந்த பொறுப்பில் உள்ளதாகவும், மேன்மேலும் மக்களின் நலனுக்காக அயராது பாடுபடுவேன் எனவும் அவர் தெரிவித்தார்.
ஊழலற்ற இந்தியாவை அமைக்க எனது பங்களிப்பினால் கடுகளவு முன்னேற்றம் என்னால் ஏற்பட்டாலும் அது நான் ஜனநாயகத்திற்கு செய்யும் முதல் மரியாதை எனவும், அதுதான் எனது கனவு இலட்சியம் எனவும், பா.ஜ.க. தேசிய தலைமையின் ஆசியுடன் செங்கை மாவட்ட ஊடக பிரிவு செயலாளராக என்னை நியமித்தமைக்கு தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர்.எல்.முருகன், மாநில அமைப்பு பொது செயலாளர் கேசவ.விநாயகம், மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் மற்றும் செங்கை மாவட்ட தலைவர் வி.பலராமன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.
No comments:
Post a Comment