செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே நடிகை குஷ்புவின் கார் சிறிய விபத்தில் சிக்கியது. நடிகை குஷ்பு பா.ஜ.க. நடத்தும் வேல் யாத்திரைக்காக கடலூர் நோக்கி சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, பக்கவாட்டில் வந்த கன்டெய்னர் லாரி குஷ்பு சென்ற கார் மீது மோதியதில் பின்புற பக்கவாட்டு கதவு பலமாக சேதமடைந்தது. நடிகை குஷ்புவிற்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. பின்னர் மாற்று கார் ஏற்பாடு செய்யப்பட்டு கடலூர் புறப்பட்டார்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மதுராந்தகம் போலீசார் கன்டெய்னர் லாரியினை ஓரமாக நிறுத்திவிட்டு தப்பிச் சென்ற ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment