செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், எலப்பாக்கம் அருள்மிகு சிவசுப்பிரமணியர் சுவாமி திருக்கோயிலில் நேற்று இரவு குருபெயர்ச்சி அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
நேற்று (15.11.2020) இரவு 9.48 மணிக்கு தனுசு இராசியிலிருந்து மகர இராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைந்தார். இதற்காக திருக்கோயில் வளாகத்தில் நவகிரகத்தில் உள்ள குருபகவானுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு தோஷ நிவர்த்திகளை பற்றி விளக்கப்பட்டது.
மேலும், திரளான பக்தர்கள் விதிமுறைகளை பின்பற்றி இந்த பூஜையில் கலந்து கொண்டனர். குரு பெயர்ச்சியினால் எந்தெந்த இராசிகளுக்கு என்னென்ன பலன் என்பதை காண்போம். ரிஷபம், கடகம், கன்னி ஆகிய இராசிகள் குருபகவானின் சுப பார்வையினை பெறுகிறது.
மேஷ இராசியில் குரு பகவானின் தன ஸ்தானம் பதிகிறது. விருச்சிக இராசியில் குரு பகவானின் இலாப ஸ்தானம் பதிகிறது. தனுசு இராசியில் தொழில் ஸ்தானத்தில் குரு பகவானின் பார்வை பதிகிறது.
மேலும், மகர இராசிக்கு ஜென்ம குருவாகவும், மிதுன இராசிக்கு அஷ்டமத்து குருவாகவும், துலாம் இராசிக்கு அர்த்தாஷ்டம குருவாகவும், கும்ப இராசிக்கு விரய குருவாகவும், சிம்ம இராசிக்கு ரோக ஸ்தான குருவாகவும் இந்த குரு பெயர்ச்சி அமைகிறது. மேஷம் (60%), ரிஷபம் (70%), மிதுனம் (40%), கடகம் (70%), சிம்மம் (75%), கன்னி (65%), துலாம் (45%), விருச்சிகம் (75%), தனுசு (80%), மகரம் (45%), கும்பம் (50%), மீனம் (80%) என 12 இராசிகளுக்கும் இந்த குரு பெயர்ச்சி பலன் அளிக்கிறது.
அவரவர் தங்களின் சுய ஜாதகத்தினை ஆராய்ந்து அதன்படி தோஷ பரிகாரங்களை செய்து பலன்களை முழுவதாக பெற்று அனைத்து வளங்களையும் பெறுவதற்கு பூஜையில் ஆராதனை செய்யப்பட்டது.
No comments:
Post a Comment